Sunday, March 20, 2016

பேசும் இதயம் 5

என்றேனுமொரு
நாள்
எனைத்தேடி
நீ வருவாய்
அன்றெனதுடல்
பொசுக்கப்பட்டிருக்கு­ம்
உனக்கது
இலையுதிர்
காலமாகலாம்
என் நினைவுகளை
சுமந்தபடியால்,,,

__________


ஒரு
மரக்கிளைக்கு
வலிதெரியாமல்
தன்னை துறந்துவிட்டு
காற்றோடு
துயில்கொள்ளும்
சருகுகளை போலே
நமது பிரிவு
இருந்திடல் நியாயம்,,,

__________

உன்னையே
உற்று உற்று
பார்க்கிறது
பூக்கள்
கண்ணாடி முன்நிற்பது
போன்றதொரு
உணர்வு அதற்கு,,,

__________


நதியில்
விழுந்த என்
கண்ணீர்த் துளிகளை
விடுகதைகளாக
நீ கேட்கிறாய்
கையெழுத்திடுகிறேன்
விடுதலை பத்திரத்தில்,,,
கடலைத் தேடி
சங்கமிக்கிறதென்
காதலும்,கண்ணீரும்,

__________


உயிரெழுதும்
கவிதையில்
உறக்கம்
தொலைத்து
நிற்கிறேன்
யாரிடமோ தஞ்சம்
புகுந்திருக்கலாம்
எனது புன்னகை,,,

__________


நான் செய்த
தவறென்ன
அநியாயமாய்
எனை பொசுக்குகிறாயே
கண்களில்
தழலேற்றி,,,

__________

உனது ஒவ்வொரு
அசைவுகளிலும்
ஏதோவொரு
அழகு இருக்கத்தான்
செய்கிறது
வர்ணிக்கத்தான்
வார்த்தைகளை
தேடுகிறேன்

__________

அந்தப் பக்கம்
நீயும்
இந்தப் பக்கம்
நானும்
உடைந்த
இதங்களால்
உறவின்னும்
சேராமல்,,,

__________

என் அறைகள்
முழுக்க
காகிதக் குப்பைகள்
நீ நிராகத்த
கவிதையும்
காதலும்,,,

__________


உனது தாவணியில்
மட்டும்
எப்படி பூத்துவிடுகிறது
இந்த நிலவு
முறையிடுவேன்
மேகத்திடம்
ஒழுங்காய் நிலவை
இருக்கச் சொல்லென்று,,,

__________***__________

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...