அதிகார வர்க்கத்தின்
செயற்கை பேரிடரில்
சிக்கித் தவிக்கும்
பாமரன் நான்
பணமாளும் பூமியில்
பிணக்குவியலொன்றும்
பயமாக
இல்லையெனக்கு
பழகிப்போய்
எப்போதும் போல
உழன்று
என்னை நானே
சகித்துக்
கொள்கிறேன்
நானுமிங்கே
நடைபிணமாதலால்
சுரண்டி சுரண்டி
சூழ்ச்சிகள்
வலைவிரித்து
என் சுயநினைவை
திருடுகிறார்கள்
தியாகிகளெனும்
பெயர்களோ
அவர்களுக்கு
அடிமையாளன்
முத்திரைகளோ
எனக்கு
எழுந்து ஓரடி
எடுத்துவைக்கிறேன்
முற்போக்கின்
துணைகொண்டும்
தோள் சாய்த்தும்
இலேசாக ஆட்டம்
காண்கிறது அதிகாரம்
அடுத்த அடிகளை
எடுத்துவைப்பதற்குள்
என் கால்விலங்கு
உடைகிறது
கூடியிருந்தோர்
துணையோடு
ஓடத் தொடங்கினேன்
ஒவ்வொரு அதிர்வுகளும்
ஓராயிரம்
கால்விலங்கினை
உடைக்க
முட்டி மோதிட
வேண்டுமே
முதலாளித்துவ
சுவர்களை தகர்க்க
என் இருதயத்தில்
உட்புகுந்தார்கள்
எமக்கான
முற்போக்குத்
தலைவர்கள்
இனி வீழும்
மண்ணில்
முதலாளித்துவம்
முற்போக்குத்
தலைவர்களின் முன்னாலும்
வெகுண்டெழும்
என் முழக்கங்களுக்கு
முன்னாலும்
வாருங்கள்
உலகத்
தொழிலாளர்களே
படிப்போம்,படைப்போம்
மார்க்சிய வழியில்
லெனினிய வழியில்
மாவோ வழியில்
அம்பேத்கர் வழியில்
பெரியார் வழியில்
புதிய வரலாறுகளை வாருங்கள்
படைப்போம்,,,
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...

No comments:
Post a Comment