நன்றி! இப்போது டாட் காமிற்கு ஏனென்றால் அவர்கள் "நான் உயர்சாதி"
தரப்பினர்கள் என்று என் கண்ணுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறதெனும்
நினைப்பை உடைத்து இல்லையில்லை எங்களுக்கும் தெரியுமென அருமையாக
காட்டியிருக்கிறது. நான் உயர் சாதி ஆனால் ஆணவக்கொலையை எதிர்க்கிறேன்
எனும் காணொளி "ஆதிக்க சாதி" எனும் அடையாளத்துடன் இதனை கையாளும் போது
ஆணவக்கொலைக்கு எதிராக கருத்தை ஆதிக்க சாதியினரிடம் தாக்கத்தை
ஏற்படுத்தும் என்ற விளக்கத்திற்கு பின்னால் எப்படியும் இங்கே சாதி
ஆதிக்கம்தான் இருந்திருக்கிறது. அதுவும் சரியான நபர்களைதான்
தேர்ந்தெடுத்திருக்கிறது இப்போது டாட் காம். தேவர் ஜெயந்தி பூஜை
விழாவின் போது பெருமையோடு நாங்கள் தேவர் என விளித்து அது சம்மந்தமான
அனைத்து விதமான புகைப்படம் மற்றும் காணொளிகளை விரும்பி பகிர்வு
செய்தவர்கள். அதற்கும் ஒருபடி மேலேபோய் ஏதோ முத்துராமலிங்க தேவர் கேள்வி
கேட்டாராம் அதற்கு பெரியார் பேந்த பேந்தென முழித்தாராம் . பதிவுகளை
இடைவிடாமல் ஒருவார காலமாக விழுந்து விழுந்து பேஸ்புக்கில்
பகிர்ந்தவர்கள். தலதளபதி போரடிக்கையில் பொழுதுபோக்கிற்காக "ஆணாதிக்கம்"
பேசுவோர்கள், ஒரு மாதம் திடீரென நல்லவனாக முகமூடி போட்டுக்கொண்ட கிஷோரு
கே ச்சாமி ஜெயாவை விமர்ச்சித்தான் என்பதற்காக , எவ்வளவு எடுத்துகூறியும்
அவனை நம்பி அவன் பதிவுகளை ஏதோ சமூக பதிவாக ஏற்றுக்கொண்டு பேஸ்புக்கில்
பகிர்ந்தவர்கள், அவனை ச்சமூக ஆர்வலராக ஊடகங்களில் பேச வைத்தவர்களும்
இவர்களே,,, என இருந்தவர்கள் , ஜெயாவை செல்லமாய் "அம்மா " வென அழைத்துக்கொண்டும் கலைஞரை கொரூரமாக கட்டுமரமென விளிப்பவர்களின் ஆணவக் கொலை எதிர்ப்பை எவ்வாறு ஏற்றுக் கொள்ள
முடியும். சரி அப்படியும் ஏற்றுக்கொள்கிறோம். எனில் ஆணவக் கொலைகளால்
மிகவும் அச்சமுற்று எப்போது நாம் கொல்லப்படுவோமெனும் பதற்றத்திலேயே
வாழ்க்கையை நகர்த்தும் ஒடுக்கப்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடி மக்களை
ஓரணியில் இணைக்கும் "தலித்" என்பது சாதியல்ல அது சமத்துவம்" எனும்
தார்மீக பொருட்பாட்டை அவ்வகையினர் ஏற்றுக்கொள்வார்களா? அப்படி ஏற்றுக்
கொள்வதற்கான செயல் வடிவாக "தலித் என்பது சாதியல்ல அது சமத்துவம்" என்பதை
பரப்பும் நடவடிக்கைகளை ஈடுபடுவார்களா? தலித் எனும் சொல்லே இவர்களுக்கு
கசக்குகின்ற போது எவ்வாறு இவர்களால் ஆணவக்கொலைகளை எதிர்க்க முடிகிறது.
உடனே உயிர் பலிகளுக்கு சாதிப்பூசம் தடவ வேண்டாமென விளிக்கலாம் "அய்யா
ஜோதிராவ் பூலே அவர்களின் தலித் சாதியல்ல சமத்துவம் என்பதை
ஏற்றுக்கொண்டவன் நான். இதற்கு ஏன் tag செய்ய வேண்டும்? நட்பு பட்டியலில்
இருக்கிறார்கள் . விவாதிக்க நான் தயார்.
என்னில் இதிலிருந்து குட்டி ரேவதி, கொற்றவை, தமிழச்சி தங்கபாண்டியன்
மூவரை மட்டும் விலக்கி வைக்கிறேன். மூவரும் உணர்வுப் பூர்வமாக "தலித்
சாதியல்ல சமத்துவம்" என்பதை ஏற்றுக்கொண்டவர்கள். கம்யூனிஸத்தை
நேசிப்பவர்கள்,திராவிடத்தை ஏற்றவர்கள், தலித்தியத்திற்கான பங்களிப்பை
தருகிறவர்கள். நான் உயர்சாதி ஆனால் ஆணவக்கொலையை எதிர்க்கிறேன் , எனக்கு "ஆனால்" என்பதே வேண்டாம் இன்குலாப் போதும் "மனசங்கடா நாங்க மனுசங்கடா"
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...

அருமையான அறிமுகம்
ReplyDeleteசிறந்த பகிர்வு
தங்கள் வருகைக்கு
ReplyDeleteநன்றி!