இந்திய எல்லையில்
வீற்றிருக்கும் வேலிகளே
நீங்களும் ஒருநாள்
விலைபோகலாம்
ராணுவத்தை மட்டும்
அழைக்காதீர்கள்
அப்போதும்,,,
ஸ்ரீ ரவிசங்கர், அதானி
குழுமம், ஆர்எஸ்எஸ்
ஆதிக்க சக்திகளென
அத்துணை
திருடர்களுக்கும்
சேவகம் செய்வதே
பணியென பாதையை
தொலைத்தவர்கள்
ஏதோவொரு
கார்ப்பரேட்டின்
காலணிகளை
அது தன் நாக்கால்
சுத்தம்
செய்துகொண்டிருக்கும்
சுற்றி சுற்றி
வாலாட்டியும்
கொண்டிருக்கும்
வேண்டாம்
அழைக்காதீர்கள்
ராணுவத்தை,,,
விலையேற்றப்பட்டிருக்கிறார்கள்
அவர்கள்
வேலிகளே நீங்கள்
அழைக்காமல்
இருந்தாலும் உங்களின்
அழுகுரலை கேட்டு
ஓடோடி வரும்
காம்ரேடுகளை
விரட்டி மட்டும்
விடாதீர்கள்
கார்ப்பரேட்டினை
இரும்புக் கரங்கொண்டு
தாக்கி அழிக்கும்
ஆயுதமே காம்ரேடுகள்
வேலிகளே
விலகாதீர்கள்
நெருங்கி வாருங்கள்
முற்போக்குச்
சிந்தனையால்
முழுபாரதத்தையும்
வலுசேர்ப்போம்,,,
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...

No comments:
Post a Comment