Wednesday, March 23, 2016

சாதி ஏன் ஒழிய வேண்டும் - தந்தை பெரியார்

"பிறர் உங்களை பள்ளர், பறையர் என்று சொல்லி நீங்கள் கேவலமானவர்கள் என்று
கருதப்பட்டால் அவர்கள் அதைவிடக் கேவலமானவர்கள் என்று நான் சொல்வேன்.
அவ்வாறு உங்களை கேவலமாகக் கருதுபவர்களுக்குள்ள­ பெயரை விட உங்கள் பெயர்
கேவலமானதல்ல... யாரேனும் என்னை பள்ளர் பறையர் என்று அழைப்பது மேலா -
சூத்திரன் என்று அழைப்பது மேலா என்று கேட்டால் சூத்திரன் என்று அழைக்கக்
கூடாது என்று சொல்வேன்
ஏனென்றால் சூத்திரன் என்ற பெயர்தான் இழிவானதாகும். பள்ளர் பறையர்
என்பவராகிலும் சொந்தத் தாய் தகப்பன்களுக்குப் பிறந்த வர்களாகிறார்கள்...
ஆனால் சூத்திரர் என்பவர்களோ பார்ப்பனரின் வைப்பாட்டி மக்கள் என்று
அமைக்கப்பட்டு போய்விட்டது... இப்போது உள்ள ராஜாங்கத் துறையின்
வித்தியாசத்தால்வேண்ட­ுமானால் அப்படி இல்லை என்று சொல்லிக் கொள்ளலாம்
சாதியை மதத்திலிருந்து பிரித்துக் கொள்ள வேண்டும். இப்படிப் பிரிப்பதற்கு
முடியாதவரையில் சாதியும் மதமும் ஒன்றோடு ஒன்று இறுக பின்னிக்
கொண்டிருக்குமேயானால்­ அந்த இரண்டையும் வீழ்த்தியாக வேண்டும்.
முன்னிருந்த அந்த உயர் சாதிக் கபடர்கள் அவ்வளவு தந்திரமாக ஒன்றைஒன்று
பிரிக்க முடியாத வகையில் சாதியையும் மதத்தையும் பிணைத்துப் பின்னிக்
கொண்டிருக்கும்படி இறுகக் கட்டி வைத்திருக்கிறார்கள்
அதனால் சாதியை அழிக்கத் தலைப்படுகையில் மதமும் வெட்டப் படுகிறதே என்று
பயப்படாமல் சாதி மரத்தையும் மத மரத்தையும் சேர்த்து நெருப்பு வைத்து
சாம்பலாக்க வேண்டியது தடுக்க முடியாத அவசியமாகும். இதிலும் ஒரு சங்கடம்
இருக்கிறது. அதாவது மதமானது வேதம் புராணம் என்பவைகளுடன் கட்டிப்
பிணைக்கப்பட்டிருக்கி­றது. அதனால் இந்த வேதம் புராணங்களை மதத்திலிருந்து
பிரிக்க வேண்டும். இதிலும் பிரிக்க முடியாதபடி கட்டு பலமாக இருந்தால்
இங்கும் இரண்டையும் சேர்த்து நெருப்பு வைக்க வேண்டியததுதான்...
ஆனால் இந்த வேதம் புராணம் கடவுளுடன் சேர்த்துக் கட்டி
வைக்கப்பட்டிருக்கிறத­ு. இதிலும் பிரிக்க முடியாத பிணைப்பு இருப்பதால்
அந்தக் கடவுள் தலையிலும் கை வைக்கத்தான் வேண்டியிருக்கிறது...­ வேதத்தை
அசைத்தால் கடவுளுக்கு ஆட்டம் கொடுக்கும்..பெருத்த சங்கடம் ஏற்படும்.
கடவுளை அசைப்பதா என்று பயப்படக் கூடாது. எனவே சாதி மதம் வேதம் கடவுள்
எல்லாவற்றையும் ஒழித்துதான் ஆக வேண்டும்..."
( 29.09.1929 ல் திருச்சியில் சாதி ஏன் ஒழிய வேண்டும் என்று பேசியது)
-பெரியார் பரப்புரை
Viruthagiri A

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...