Friday, April 22, 2016

மெழுகுவர்த்தியும் நானும்

தீ சுடும்
தொடாதே! என
தூண்டிவிடும்
மனத் துரோகத்தின்
இடையில்

தொடு!
சுகமாய் இருப்பேன்
என் அனல்
உனக்காகவே தவம்
கிடக்கிறதென
அரவணைப்புக்கு
அழைப்பு கொடுத்து
தன்னில் ஆரத்தழுவ
இடம் கொடுத்து

இரவை கழுவிலேற்றி
இதழோரம்
சிரித்தழைக்கிறது
மெழுகுவர்த்தி
ஒன்று

என்னை நான்
மறந்து
நானே ஏற்றிவைத்த
ஒற்றை
மெழுகுவர்த்தியில்

என் ஆள்காட்டி
விரலை கொண்டு
விளையாடத்
தொடங்கினேன்

கவலைகள் மறந்து
காதல் மலர்ந்தது
எனக்குள்

இனி இரவுகள்
இப்படியே கடப்பதை
விரும்பி
ஏற்றுக்கொள்கிறேன்

என் விரல்களுக்கு
அப்பால் துரோகங்கள்
தூசியாகிவிடுகின்றன
நானிழுத்த திசைகளில்
ஒளிச்சிதறல்
ஒய்யாரமாய் நடனமாட

நன்றியோடு
விசுவாசத்தையும்
மெழுகுவர்த்திக்கு
மனதார தருகிறேன்

முதன் முதலாக
என்னையும்
ரசிகனாக்கியதற்கும்
என் ஆறுதலுக்காக
தன்னையே
இழந்தமைக்கும்
காலம் முழுக்க
ஏற்றி வைத்திருப்பேன்
என் இதயத்தினுள்
மெழுவர்த்தியின்
தீப ஒளி சிற்பத்தை,,,

1 comment:

  1. அருமையான பகிர்வு

    உங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்!
    http://www.ypvnpubs.com/2016/04/blog-post_18.html

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...