Tuesday, May 24, 2016

இந்து தீவிரவாத பயிற்சி முகாம்கள், இந்தியாவுக்கு சவால் விடுகின்றன!

29/11/2015 அன்று இந்தியாவின் பயங்கரவாத இயக்கம் முதலிடத்தில் இருப்பது ஆர்.எஸ்.எஸ். RSS இந்த பதிவை எழுதினேன், இந்தியாவில் இந்துத்துவ பார்ப்பனஆதிக்கத்தின்செயல்வடிவ வன்முறைகளில் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை தலித்மக்களும் இரண்டாவதாக இசுலாமிய சிறுபான்மையின மக்களும்பெரும்பாதிப்புக்குள்­ளாகும் சமூகங்களாக இருக்கிறார்கள். இதில் இசுலாமியசிறுபான்மையின மக்களை "தீவிரவாதிகள்" என சித்தரிக்கவும் இசுலாமியர்கள்என்றாலே பயங்கரவாதிகளென அனேக மக்களிடம்...

Monday, May 23, 2016

தமிழக முதல்வரின் "முதல் கையெழுத்து"

சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் தனது முதல்வர் பதியேற்பினை முடித்துக்கொண்டு நேராக தலைமைச் செயலகம் சென்ற தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கை வாக்குறுதியின்படியான­ திட்டங்களை நிறைவேற்றும் பொருட்டு முதல் கையெழுத்தை இட்டுள்ளார். * விவசாயப் பயிர் கடன் தள்ளுபடி *அனைத்து வீடுகளிலும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் *தாலிக்கு 8 கிராம் தங்கம் *படிப்படியான மதுவிலக்கு அடிப்படையில் 1. தொடக்க 500 டாஸ்மாக் கடைகள் மூடல்...

ஜெயா 6 வது முறை? ஊடகங்களின் உளவியல்

தமிழகத்தின் ஆட்சி பொறுப்பை தொடர்ந்து (6) ஆறாவது முறையாக கைப்பற்றி பதவியேற்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா! என்று அனைத்து காட்சி மற்றும் எழுத்து ஊடகங்களும் சொல்லிச் சொல்லி சிலாகிக்கிறார்கள். தங்களின் பார்ப்பன மற்றும் அதிமுகவின் அதீத பாசம் அவர்களை (ஊடகங்கள்) அவ்வாறு பேசவைத்திருக்கிறது எனலாம். தேர்தல் முடிந்து தமிழகத்தை ஆளும் தகுதியை அதிமுக பெற்ற இரண்டாவது நாளிலேயே சட்ட ஒழுங்கு சீர்குலையும் விதமாக வியாசர்பாடியில் பொதுமக்களை ரவுடிகள் சராமாரியாக...

Sunday, May 22, 2016

என் காமத்தின் பிறப்பிடம்!

என் கனவில் தோன்றும் காட்சிகளை ஓவியமாய் தீட்டி வைத்துள்ளேன் மனதிற்குள் அனைத்திலும் அழகானவனாய் அதிசயங்களாய் பிரளயங்களின் பிரபுத்துவனாய் உன்னை தானாக வரைகிறதென் தூரிகை என் வார்த்தைகள் வண்ணங்களாகியும் அலங்கரிக்கிறது உன்னை அனுதினமும் உன்னையே நினைத்து வெடித்துச் சிதரும் என் காமத் தீஞ்சுடரை விளையாடத் தீண்டி காதலாக கைகோர்த்தும் கட்டிப்பிடித்தும் கண்களிரண்டையும் முத்தங்களால் நனைத்தும் உதடுகளை கடித்தும் சுவைத்தும் உச்சி முகர்ந்தும் என் உயர்ப்பூவை தட்டியெழுப்பியும்...

Saturday, May 21, 2016

அக்பர்- ராணாபிரதாப் பெயர் மாற்றம்தான் பாஜகவின் வளர்ச்சித் திட்டமா?

பதிவை வாசிப்பதற்கு முன்னால் ஏற்கனவே 17 நவம்பர் 2015 அன்று எழுதியஇப்பதிவை   அவுரங்கசீப் சாலை, அப்துல் கலாம் சாலையான,,, "பதிவு" ஒரு கருத்தை மாற்றுமா?         வாசிப்பது நன்று, இந்துத்துவ பார்ப்பானிய ஆர்எஸ்எஸ்தாய்பிறப்பான பாஜகவின் தொடர் இசுலாமிய சிறுபான்மையின மக்களின்அடையாளங்களை அழித்துக்கொண்டிருக்கிறது.இந்திய தேசம் பல பிரச்சனைகளில் சிக்கி திணறிக்கொண்டுள்ளது. தொழில்மற்றும் விவசாயத்தின் வீழ்ச்சி கவலை தருகிறது. விலைவாசியும்...

Friday, May 20, 2016

2016 இல் மீண்டும் ஜெயலலிதா , காம்ரேட்களின் கவனக்குறைவு,,,

2011 இல் தனிப் பெரும்பான்மையோடு ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த ஜெயா தலைமையிலான அதிமுக அரசு நடந்து முடிந்த தமிழகத் தேர்தல் 2016 மூலம் 134 இடங்களை பெற்று மீண்டும் ஐந்து ஆண்டுகளை தக்கவைத்துக்கொண்டது . இதில் தனிப்பெரும் எதிர்கட்சியாக திமுக அங்கம் வகிக்கிறது. திமுகவானது 88 இடங்களை பெற்றிருக்கிறது. இதன் மூலம் மாற்று என்பது எனக்கு நானேதான் என்று காட்டியிருக்கிறது ஜெயா அரசு. அவரின் தேர்தல் பிரச்சாரத்திலேயே இதனை கூறியிருக்கிறார். அந்த வகையில் வரப்போகிற ஐந்து ஆண்டுகளிலும்...

Wednesday, May 18, 2016

சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகளான பின்னரும் தலித்துகள் நிலைமை பரிதாபகரமாகவே உள்ளன – சீனிவாசராவ்

சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகளான பின்னரும், தலித்துகள் நிலைமை பரிதாபகரமாகவே உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயலக உறுப்பினர் சீனிவாச ராவ் கூறினார். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள தேஷ் பகத் யாத்கார் கூடத்தில் தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி சார்பாக சிறப்பு மாநாடு நடைபெற்றது. இச்சிறப்பு மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே சீனிவாச ராவ் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது: "நாட்டில் சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகளானபின்னரும்...

Tuesday, May 17, 2016

தென்றல் காற்று

அமைதிப் பெருவெளியில் அடங்காமல் சுற்றிச் சுழலும் தென்றல் காற்றுக்கு நான் அடிமை சீற்றமில்லை புழுதிகள் கொஞ்சமுமில்லை வெண்ணிற ஆடையால் சலித்தெடுத்து வடித்தாலும் உட்புகுந்து வெளியேறுகையில் உள்ளத் தூய்மையை திறந்து காட்டி விட்டு செல்கிறது எந்தன் தென்றல் காற்று மூக்குடைந்து போன முகங்களுக்கு வேண்டுமானால் காற்று வெறும் நாற்றமாகலாம் யாருமறியா சாமத்தில் அடர்த்தியான அந்த பூவனத்தில் பூத்துக் குலுங்கும் மலர்களின் மணத்தை கவர்ந்து தன்னை ரசிகிறவர்களின் மனங்களை கவரும்...

வள்ளுவன் குறித்தான விவாதத்தில் அயோத்திதாச பண்டிதர்

1892இல் சென்னையில் மகாஜன சபைக் கூட்டம் சிவநாம சாஸ்திரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போது வள்ளுவர் பார்ப்பன விந்துக்குப் பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப் பாடினார்; சுக்கில- சுரோனிதம் கலப்பரியாது என்று குறிப்பிடும்போது கூட்டத்தில் கேட்டுக் கொண்டிருந்த அறிஞர் திரு.க அயோத்திதாச பண்டிதர் எழுந்து நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக் கொள்வதென்றால், நான் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்றார். அதற்கு சிவநாம சாஸ்திரி, சரி, கேளும் என்றார். நமது நாட்டில்...

Saturday, May 14, 2016

சாதிகளின் அடிப்படையில் வகுப்பறைகளை பிரிக்கும் அவலம்

சாதியம் பார்க்கும் சமூகத்திற்கு கல்வி ஒரு கேடா! சுயமாய் சிந்திக்கும் பகுத்தறிவுக்கு முன்னால் "சாதியம்" தையல் அறுந்து பிய்ந்து போன செருப்பாகவே இருக்கும் அதனை உபயோகிக்க முடியாது, உபயோகித்தாலும் எவ்வித பிரயோஜனமின்றி அணிந்த கால்களுக்கு தீங்கையே விளைவிக்கும். ஒருவன் மெத்தப் படித்திருந்தாலும் கல்வியால் அவன் வாழ்வும் அறிவும் வளர்ச்சியடைந்திருந்த­ாலும் அவன் மனதிற்குள் சாதிய துவேஷ வஞ்சம் இருக்குமேயானால் அவன் மனித இனத்திலிருந்து விலகி கல்வியறிவற்ற மிருக இனத்திற்கு...

Friday, May 13, 2016

மேலும் ஒரு சாதி ஆணவக் கொலை நெல்லையில்,,,

திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தலித் இளைஞர் விஸ்வநாதன், இவர் இரயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த சாதிய ஆதிக்க பிரிவைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் காவேரியை காதலித்து வந்துள்ளார். இதற்கு காவேரியின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து கடந்த 3ம் தேதி விஸ்வநாதனும் காவேரியும் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகினர். இந்நிலையில் காவேரியின் தந்தை விஸ்நாதனின் குடும்பத்தினருக்கு தொடர்ந்து மிரட்டல்...

ஊக்க மது கைவிடு ! - மக்கள் அதிகாரம்

என் தோழா! தமிழகம் டாஸ்மாக் எனும் மதுக் கொள்கையால் சீரழிந்து வருவதைக் கண்டு சீற்றமுடன் நீயெழுந்து போராட்ட களத்தில் நிற்கிறாய்,,, நீயாரென்று எனக்குத் தெரியாது ஆனாலும் உனது புகைப்படத்தை கண்டு பதற்றமாகிறேன். இந்த முதலாளித்துவ சர்வாதிகார அரச பயங்கரவாதிகளின் பாதுகாவலனாக விளங்கும் காவல் துறையினால் மிகவும் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறா­ய்,,, ஆனாலும் உன் முகத்தில் பயம் இல்லை அதற்கு மாறாக பற்றி எரியும் பெருங் கோபம் கொந்தளித்தெழுகிறது. "இளங்கன்று பயமறியாது"...

Thursday, May 12, 2016

பார்ப்பனர் ஆதிக்கம் பற்றி - அம்பேத்கர்

ஆட்சி செய்யும் வகுப்பாரின் மனப்பாங்கு என்ன? அதனுடைய மரபு என்ன? அதனுடைய சமுதாயச் சிந்தனை என்ன? பார்ப்பனர்களை முதலில் எடுத்துக்கொள்ளுங்கள், சரித்திர அடிப்படையில் பார்த்தால் அவர்கள் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் (சூத்திரர்கள்,தீண்டப்படாதவர்கள்) ஜென்ம விரோதிகளாக இருந்து வருபவர்கள். இந்து சமுதாய மக்கள் தொகையில் இந்த இருவரும் 80 சதவிகிதத்தில் உள்ளனர் . இன்று இந்தியாவிலேயே, அடிமைப் படுத்தப்பட்ட வகுப்பைச்சார்ந்த சாதாரண மனிதன் ஒருவன் இவ்வளவு தாழ்த்தப்பட்டு,...

மோசடி படிப்புச் சான்றிதழ் புகழ் மோ(ச)டி

1980களில் படித்த நாங்கள் எல்லாம் கைகளால் மதிப்பெண்கள் நிரப்பப்பட்ட சான்றிதழ்களைப் பெற்றிருக்கக்கூடிய அதே சமயத்தில் மோடி மட்டும் கணினியால் தயார் செய்யப்பட்ட சான்றிதழைப் பெற்றிருப்பது எப்படி என்று முகநூல் பக்கங்களிலும், ட்விட்டர் பக்கங்களிலும் பல ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். மோடி தில்லிப் பல்லைக் கழகத்தில் பிஏ படித்தார் என்றும், குஜராத் பல்கலைக் கழகத்தில் எம்ஏ படித்தார் என்றும் பாஜகவின் தலைவர் அமித் ஷா இரு நாட்களுக்கு முன்பு தில்லியில்...

Tuesday, May 10, 2016

ஜிஷாவின் தாயை சந்தித்தார் ரோஹித் வெமுலாவின் தாய்

ஒரு சமூகத்தின் அடிப்படை கட்டமைப்பிலேயே பெரும் ஆதிக்கத் திணிப்பை சக மனிதர்களிடத்தில் அதையும் தாண்டி குறிப்பாக பெண்களிடத்தில் மிகச் சாதாரணமாக பிரயோகப்படுத்தும் பிற்போக்குத்தனமான சாதியவாதமும் மதவாதமும் இருக்கின்ற வரையில் இந்தியம் சமத்துவ பாதையை நோக்கிப் பயணிக்க வாய்ப்பே இல்லாத போது அந்த சக மனிதர்களான ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை தலித்திய மக்களின் வாழ்வென்பது காலங்காலமாக நசுக்கப்படுவதே வழக்கமாக குடியமர்த்தப்படுகிறத­ு. ஒரு தலித்திய சமூகத்தில் அநீதிகள் நிகழ்த்தப்படுகிறபோது­...

ஊமைகள் வேட்பாளர்கள் எனில் சட்டசபையிலும் ஊமைகள் தானே!

தமிழகத் தேர்தல் 2016 இன் உச்சக்கட்ட தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துக் கொண்டிருக்கும் வேளையில் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சித் தலைவர்கள் ,மற்றும் கூட்டணி ஒருங்கிணைப்பாளர்கள்,­ அக்கட்சிகளின் பிரச்சார பீரங்கிகளாக களத்தில் இறக்கப்பட்டுள்ள திரைத்துறை நடிகர் நடிகைகள் கையில் மைக்குடன் பிரச்சார வாகனத்தை அலங்கரிக்கிறார்கள் . அவர்களின் பக்கத்தில் வெள்ளந்தியாக முகத்தை வைத்துக்கொண்டு எதுவும் அறியாததுபோல் கைகளை கூப்பிக்கொண்டு பேசாமல் அமைதியாக அந்த...

Sunday, May 08, 2016

சுமக்கும் சிலுவை

நான் சிலுவையை சுமக்கின்றபோது எழும் பூமியதிரும் சிரிப்புகளை உற்று கவனிக்கவும் செவி மடுக்கவும் அப்போதெனக்கு தோன்றவில்லை அது தேவைகள் பூர்த்தியான தெனாவட்டு சிரிப்புகளென சிந்தையில் முன்பே சுருக்கென குத்தி விட இலக்கு ஒன்றேதான் இப்போதெனக்கு ஆறுதல் அதுவே பாதி வழியை கடந்த பின்னர் என்னுள் நானே என் நரம்புகளினூடே எழும்பும் உரத்த முழக்கங்களால் சிலுவையே உடைபடும் நிலைகொள்ள முதல் கேள்வி எழுகிறது என்னுள் எங்கே நான் சிலுவையை இறக்கி வைப்பது? சற்றும் பதிலுக்கு காத்திருக்கவில்லை எனை அடிமையாக நடத்தும் அதே ஆதிக்கத்தின் தோளில்தான் இறக்கிவைக்கிறேன் விழும் அடிகளைத் தாங்கி...

Saturday, May 07, 2016

ஜிஷாவுக்கு

ஜிஷாவுக்கு நாங்கள் தேர்தல் கொண்டாட்டத்தில் குளித்து அழுக்கோடு அழுக்காகவே வெளியேறுகிறோம் எங்களுக்கது தூய்மையென கற்பிக்கப்பட்டுள்ளது­ வேண்டுமெனில் ஆங்காங்கே மீம்ஸ் போட்டு விளையாடுவோம் உனது வலியையும் வேதனையையும் அதனுள் புதைத்து ஆண்டைகள் பெருமை பேசுவோம் படிப்பறிவில் முதலிடமாம் பெண் மக்கட்தொகையில் முதலிடமாம் கம்யூனிஸத்தின் புகலிடமாம் எழிலோவியம் இயற்கை அழகு இமயம் வரை பேசுமாம் இப்படித்தான் உன் பிணம் விழுந்த கேரளம் எங்களுக்கு அறிமுகம் எதையும் கடுகளவும் அசைத்திடாத...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...