Saturday, June 04, 2016

மோடியும் , குல்பர்க் சொசைட்டி படுகொலையும்

குல்பர்க் சொசைட்டியில், 2002-ஆம் ஆண்டு ஆர் எஸ் எஸ் மற்றும்
சங்பரிவாரக் கும்பலால் 69 இஸ்லாமியர்கள் ஆயுதங்களால் வெட்டிச் சாய்த்து,
உயிரோடு தீ வைத்து எரிக் கப்பட்டனர். இந்த கொடூரமான இனப்படுகொலை தொடர்பாக
14 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கின் முடிவில், 24 பேர் குற்றவாளிகள் என்று
நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குல்பர்க் சொசைட்டி சுமார் 5
மணி நேரம் வரை வன்முறை யாளர்களின் பிடியில் இருந்த நிலையில், போலீசார்
அந்தப் பக்கமே எட்டிப் பார்க்காதது; வன்முறையைத் தடுப்பதற்கு நடவடிக்கை
எடுக்காதது போன்ற வற்றை எல்லாம் வைத்து இந்த முடிவுக்கு நீதிமன்றம்
வந்துள்ளது.இந்நிலையில், அன்று குஜராத்தில் முதல்வராக (இன்று பிரதமர்?)
இருந்த நரேந்திரமோடியின் உத்தரவின் பேரிலேயே போலீஸ் அதிகாரிகள்,
குல்பர்க் சொசைட்டி வன்முறைக்கு உடந்தையாக இருந் தார்கள் என்ற
அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் வெளியாகியுள்ளன. அதற்கு அகமதாபாத்தின்
போலீஸ் கட்டுப்பாட்டு அறை யின் ஆவணங்களே சாட்சியாக மாறியிருக்கின்றன.
குல்பர்க் சொசைட்டி அமைந்துள்ள இடம் மேகனி நகராகும். கலவரம் நடந்தபோதும்
அங் குள்ள குடியிருப்பு வீடுகள் முழுமையாக தீ வைத்து கொளுத்தப்
பட்டபோதும் அதற்கு அருகி லுள்ள போலீஸ் சாவடி தீக்கிரையாக்கப்பட்ட போதும்
அதனால்எண்ணற்றவர்கள் உயிரிழந்த போதும் எந்த போலீசாரும் அங் கில்லை. இதில்
போலீஸ் ஆய்வாளர் கேஜி எர்டா என்பவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடி
யாக தொடர்பு கொண்டு நிலைமையின் தீவிரம் குறித்து தகவல் அளித்துள்ளார்.
'நிலைமை தனது கட்டுப்பாட்டை மீறி சென்று விட்டதால் உயர் அதிகாரிகள்
குல்பர்க் சொசைட்டிக்கு உடனடியாக வரும்படி அவர் தொலைபேசியில் வேண்டுகோள்
விடுத்துள்ளார். ஆனால், அந்த மிக முக்கிய தருணத்தில், அதாவது காலை 11.30
மணியிலிருந்து பிற்பகல் 3.30 மணி வரை எந்த போலீஸ் அதிகாரியும் அங்கு
வரவில்லை என்பதோடு எர்டாவே நிலைமையை தனியாக சமாளிக்கும் நிலைக்கு தள்ளப்
பட்டுள்ளார். இவர் தற்போது சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பில் விடுதலை
செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேகனி நகரில் சம்பவத்தன்று
பிற்பகல் 12.38 மணிக்கு 5 ஆயிரம் பேர் கொண்ட கும்பல் பயங் கரமான
ஆயுதங்களுடன் குல்பர்க்சொசைட்டியை சுற்றி வளைக்கத் தொடங்கியது. அதைத்
தொடர்ந்து 12.54 மணிக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக
கட்டுப்பாட்டு அறை ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
சட்டத்தின்படி ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிக்க வேண்டிய பொறுப்பு போலீஸ்
கமிஷனர் பி.சி.பாண்டே வுக்குத்தான் உள்ளது. அதன் பின்னர் சரியாக பிற்பகல்
2.09 மணிக்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போவதால் மத்திய படைகளை
அனுப்புங்கள் என்று எர்டா, பாண்டேவிடம் கேட்டுள்ளார். அந்த முடிவை எடுக்க
வேண்டியதும் பாண்டே தான். ஆனால் பாண்டே அந்த முடிவை எடுக்கவில்லை. அன்று
மாலை வரை மத்திய பாதுகாப்புப் படைகள் வரவில்லை.கட்டுப்பாட்டு அறையின்
ஆவணங்களின் படி போலீஸ் இணை ஆணையர் எம்.கே.டாண்டன் குல்பர்க் சொசைட்டியி
லிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ரேவ்தி பஜாரில் இருந்துள்ளார்.
அப்போது கட்டுப் பாட்டு அறை அவருக்கு, காங்கிரஸ் எம்.பி.யான இஷசான்
ஜாப்ரியும் குல்பர்க் சொசைட்டியில் குடியிருப்பவர்களும் பெரும் ஆபத்தில்
தாங்கள் சிக்கியிருப்பதாக செய்தி அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் டாண்டன்
அங்கு செல்லவில்லை. அவர் எந்த வன்முறையும் நடக்காத ரேவ்தி பகுதியில்
இருந்துள்ளார். இறுதியில் பிற்பகல் 3 மணியளவில் பாண்டே உத்தரவிட்டே
பின்னர் டாண்டன் குல்பர்க் சொசைட்டிக்கு சென்றுள்ளார். இத்தனைக்கும்
ரேவ்தி பகுதி என்பது டாண்டனின் போலீஸ் கட்டுப்பாட்டு அதாவது
சரகத்திற்குள் வராததது என்பது குறிப்பிடத் தக்கது. இதே போன்று போலீஸ்
துணை கமிஷனர் கோண்டியா வும் குல்பர்க் சொசைட்டிற்கு செல்வதை
தவிர்த்திருக்கிறார். கோண்டியா பிற்பகல் 2 மணியளவில் குல்பர்க்
சொசைட்டிற்கு சென்றுவிட்டு உடனடியாக திரும்பியுள் ளார். இது அந்த
பயங்கரவாத கும்பலுக்கு வசதியாக வழி விட்டது போல் ஆகியுள்ளது என்று போலீஸ்
கட்டுப்பாட்டு அறை ஆவணங்கள் தெரிவிக்கின்றன.அதாவது போலீஸ் கமிஷனர் பாண்டே
மத்திய படைகளை அனுப்பாமல் தாமதப்படுத்தியுள்ளார். இணை ஆணையர் டாண்டன்
அங்கு செல்வதையே தவிர்த்திருக்கிறார். இதே போல கோண்டியாவும் அங்கு சென்று
உடனடியாக திரும்பியிருக்கிறார் என்று கட்டுப்பாட்டு அறை ஆவணங்கள்
கூறுகின்றன. இவையெல்லாம் அன்றைய முதல்வர் மோடியின் உத்தரவின் பேரில்
நடத்திருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாக காட்டிக் கொடுத்திருக்கிறது.
- தீக்கதிர்

2 comments:

  1. அன்றைய முதல்வர் இன்றைய பிரதமர்... நல்லஜனநாயகம்...

    ReplyDelete
  2. மோ(ச)டிகள் சூழந்த ஜனநாயகம்

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...