முன்பனி யாமத்தில் உன் தேகம் தெளிக்கும் வாசம் முகர்ந்து
நம்மை சூழ்ந்திருக்கும் போர்வைக்குள் நிர்வாணத்தை பூசிக்கொண்டு
பிரளயம் காணாத பேரன்பின்
சினுங்கல் ஒலியினூடே
பாதி உறக்கம் கொண்டு
ஊர்ந்திடும் சின்ன சின்ன வருடல்களில்தான்
எத்துணை அர்த்தங்களை நாம் ரகசியங்களாக்கி
காமம் கலந்த காதலோடு
பனிக் காற்றில் கலந்திடுகிடுறோம் ...
நமக்குள்ளாக நமக்கே விளங்கும் செல்லப் பெயர்களை சொல்லி சொல்லி சினுங்கிடுகிறோம் அந்த சினுங்கல்களில் ...
ஒரு கூண்டிலிருந்து விடுபட்டு துள்ளலிடும் ஏதோ ஒரு பறவையின் முத்த சப்தங்கள் அந்த யாமத்தில் நமக்கு மட்டுமே கேட்பதாக
உணரும் பொழுதுகளில் இன்னமும் விடிந்திடா யாமம் தொடருவதாக வேண்டி நம்மிரு மனமும் நினைத்திட கண்டேன் ...
தலையணை வேண்டாமென
உன் வயிற்றில் நானும்
தவிப்புகள் வேண்டாமென
என் மார்பில் நீயும்
மாற்றி மாற்றி
துயில் கொள்கிறோம்
தூங்குவது போல நடித்துக்கொண்டே
இன்னமும் யாமத்தை கடந்திடுகிறோம்...
0 comments:
Post a Comment