Thursday, January 10, 2019

சண்டையிடலாம் வா !!!




நீயும் நானாகவும்
நமக்குள் சிறு சந்தர்ப்பங்கள் கிடைத்தாலும்
சண்டையிட்டு கொள்கிறோம்...

விடாது பெய்த பெரு மழை
சட்டென நின்றதுபோல ...
வார்த்தைகள் ஏதுமின்றி மௌனத்தை போர்த்திக்கொள்கிறோம்...

ம்ம்ம்...
ம்ம்ம்...   மொழிகளினூடே ...

நம் சிறகுகள் விரியும்  பொழுதெல்லாம் நினைத்துக் கொள்வேன் நமக்கான நெருக்கம் அதிகரிக்குமென்று...
நீயும் அப்படித்தான்...

இந்த சண்டைகள்  நீளவும்
நானே நீட்டிக்கவும் வேண்டிக்கொள்வேன்...

சமாதானப்படுத்த நீ ... படும் அவஸ்தையை  ரசிக்க வேண்டி....
சமாளித்திட நான் ... படும்
அவஸ்தையை
ரசிக்க வேண்டி...

ஊடலெல்லாம் கூடலில் தானே முடியும் ...
அதற்காகவேணும் அடிக்கடி சண்டையிடலாம்  வா ....

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...