Saturday, July 20, 2019

அட பைத்தியக்காரா !!!

பைத்தியமானதின் உன்னதம் தளர்ந்து போன மனங்களின் தூசி படிந்த இரவுகளை தட்டி சீர்படுத்தும் ஒரு பேரன்பு இல்லாது தவிக்கும் பெரும்பசி கொண்டவனின் கால்களில் விலங்கிட்டு ... தேற்றுதல் மொழி அல்லாத பார்வையில் சில எச்சில்களை உமிழ்ந்து கடந்துவிட்டு போகிறது இப்பெரு வாழ்வு ... ஆசைகள் பேராசைகளாகி அதுவே நிராசைகளாக எத்துணை எத்துணை பைத்தியங்கள் இங்கு  வீதியுலா கொள்கிறது ... உணர்தல் விளக்கங்களாக உயிர்கள் அனைத்தும் பைத்தியங்களே !!! சாட்சிகளற்ற சந்தர்ப்பங்கள்...

மனிதர்களின் அழிச்சாட்டியங்கள் !

காட்டு மரங்களின் கூந்தல் கிளைகளில் உணவை தேடும் பறவைகளுக்கு ஒய்யாரமாக கதைகள் சொல்லி கடத்தி போகிறது பூக்களின் மகரந்தம் ... எங்கோ தொலைவில் அதிரும் பெரும் சர்ச்சைகளின் இரைச்சலை கேட்டு கூச்சலிடும் பறவைகளின் நினைவுகளில் சில அதிர்வலைகள் வந்துவிட்டு போகலாம் காணாமல் போன ஒரு மரத்தில் பல்வேறு சிலுவைகளை செய்து வைத்துள்ளார்கள் யாருக்கானது அச் சிலுவைகளென ஆழ்ந்த யோசித்தலில் ஆயுளை கடக்கும் பல முகங்கள் அப்படியே நிரந்தரமாக தங்கிவிடுகிறது இந்த பிரபஞ்சத்தில்...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...