காட்டு மரங்களின்
கூந்தல் கிளைகளில்
உணவை தேடும் பறவைகளுக்கு ஒய்யாரமாக கதைகள் சொல்லி கடத்தி போகிறது பூக்களின் மகரந்தம் ...
எங்கோ தொலைவில் அதிரும் பெரும் சர்ச்சைகளின் இரைச்சலை கேட்டு கூச்சலிடும் பறவைகளின் நினைவுகளில் சில அதிர்வலைகள் வந்துவிட்டு போகலாம்
காணாமல் போன ஒரு மரத்தில் பல்வேறு சிலுவைகளை செய்து வைத்துள்ளார்கள்
யாருக்கானது அச் சிலுவைகளென
ஆழ்ந்த யோசித்தலில்
ஆயுளை கடக்கும்
பல முகங்கள் அப்படியே நிரந்தரமாக தங்கிவிடுகிறது இந்த
பிரபஞ்சத்தில் ...
நெருப்பின் ஆதி சிக்கி முக்கி கற்களில்
ஒளிந்து கொள்கிறது அனைத்தும் இரகசியங்களாய்...
வாழ்தல் என்பதே பெருங்கனவாக போய்விட்ட காட்டு மரங்களின் கூக்குரல்களில்
மனிதர்களின் அழிச்சாட்டியங்கள்
இயற்கையின் மீதான போர்கள் என
தொடர்ந்தே போகிறது இரக்கமற்ற இரவுகள் ...
0 comments:
Post a Comment