Monday, November 11, 2019

மழை


மழை வானம் காணாதொன்றை
மடியில் தாங்கி கொள்கிறேன்
மழலையே ! மறு பிறப்பே !
நின் துயில் நடையில் எழுத
தூவானம் வந்திறங்கியது...

துளித்துளியாய் சேர்த்து வைத்த
கைபிடி மழைத்துளிகள்
நின் ரேகைகளினூடே
தவழ்ந்து விளையாடுகிறது ...

சேர்ந்து ரசித்திடுகிறோம்
வானம் பார்த்து கண்கள் சிமிட்டி
இப்பெரு மழையை நீயும் நானும்...

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...