மழை வானம் காணாதொன்றை
மடியில் தாங்கி கொள்கிறேன்
மழலையே ! மறு பிறப்பே !
நின் துயில் நடையில் எழுத
தூவானம் வந்திறங்கியது...
துளித்துளியாய் சேர்த்து வைத்த
கைபிடி மழைத்துளிகள்
நின் ரேகைகளினூடே
தவழ்ந்து விளையாடுகிறது ...
சேர்ந்து ரசித்திடுகிறோம்
வானம் பார்த்து கண்கள் சிமிட்டி
இப்பெரு மழையை நீயும் நானும்...
0 comments:
Post a Comment