Saturday, February 28, 2015

ஏங்கும் புல்வெளிகள்

இரவுகளை கடந்து இன்பத்தினை பகிர்ந்து துயில் கொள்ளும் தீராத வேட்கையில் வீண்மீன்கள் பவ்யமாய் விளக்கேற்ற,,, வந்தனைக்கும் தீபவொளியாய் திகட்டாத தேனமுதாய் சிந்திவிடும் நிலவொளியை,,, சுமந்தவாரே சுவைக்கிறது நம் படுக்கையறை,,, காலை முகத்தை கவ்விய முழுமதியாய் முதலில் கண்விழித்தாய் நீ! மூர்ச்சையாகி போனது புல்வெளிகள்தான் என்பதை நானறிவேன்,,, உனக்கு முன்பே உலகை ரசிக்க வழியில்லா புல்வெளிகள் கதிரவன் கண்விழிக்க மாட்டானா என்று புலம்புவதை செவிகொடுத்து கேளடி என்னவளே,,,...

Friday, February 27, 2015

இரு இலக்கியவாதி உரையாடலும் புலியூர் முருகேசன் தாக்குதலும்

இலக்கியவாதி 1 : ஐயா!!நலமா? நான்தான் இன்ன நபர்தான் பேசுரேன் நீங்கள் பதிவுசெய்த வள்ளுவன் எந்தமதம் என்கிற பதிவுக்கான என் பதிலுரை திருப்தி அளிக்குமாறு அமைந்ததா? இலக்கியவாதி2 : நன்று ஐயா! தங்களால் வள்ளுவன் சமணரா பௌத்தரா சைவரா வைஷ்னவரா என்கிற எனது ஐயத்திற்கு அவர் வைஷ்னவரே அதுவும் இந்துமதத்தினை உள்வாங்கிக் கொண்டவரே என்று எவ்வளவு அழகாக விளக்கிச்சொன்னீர்கள்­ . இது குறித்து புத்தகமொன்றை வெளியிடப்போகிறேன் நிச்சயம் தாங்கள் தான் அணிந்துரை எழுதிட வேண்டுமென்பது...

அவள் குளிக்கிறாள்

அவள் குளிக்கிறாள் அருகினில் நானில்லை அவளும் பெண்ணல்லவா அவளின் உச்சந்தலையில் தொடங்கி உள்ளங்கால் வரையில் ஒழுகும் சீனத்து மஞ்சள் நதியின் வாசம் கண்டு வசமிழுத்து வாழ்ந்துவிடும் பூஞ்செடிகளின் மடியில் தவழும் தேனை ருசிக்க வந்த பட்டாம்பூச்சிகளோ மயங்கி விழ நான் காதலால் மயக்க முற்றிருப்பதை எப்படி அறிந்தனவோ அந்த பட்டாம்பூச்சிகளென்ற வியப்புதான் என் மிச்சக் காதலையும் சுமந்துச் செல்கிறது சுகமான காதலிதுதா...

இங்கே நகையடகு வைக்கப்படும்

நாளை அக்சயதிருதிகை இன்றே அடகு கடையில் நகைகள் ___ அதிக நேரம் காதிலும் மூக்கிலும் வேப்பங்குச்சி நகையாக ___ நகைகள் வாங்க காசில்லை தங்கமாக ஜொலிக்கிறது வேர்க்கடலை ___ அவர்கள் புன்னகை அப்போதுதான் தொலைந்திருந்தது வீடு முழுக்க ஒரே அடகுச் சீட்டு ____ எப்போது மீட்கப்படுவோம் எதிர்பார்த்தே காத்திருக்கிறது அடகுநகைகள் ___ வட்டி போட்ட குட்டி மூழ்கிப்போன அடகு நகைகள் ___ இன்றும் குடியில் மூழ்கிடவேண்டும் அடகுகடையில் கடைசியாக பறிக்கப்பட்ட தாலி ____ அவசியம் நகை வேண்டும்...

Tuesday, February 24, 2015

தெரேசா தேசத்துரோகியா?

தொட்டால் தீட்டென்றாய் துடிதுடித்து போனோம் அமரும் திண்ணைகளில் தண்ணீருற்றி கழுவினாய் தலைவிதியென தன்னையே திட்டிக்கொண்டோம் தாய் குலத்தை தேவசாசி தேவடியா ளென்றாய் துடைத்துக் கொண்டே தூரதேசமிதுவென வாழ்வுதனை வலிந்து பெற்றோம் உங்களுக்கேன் ரவிக்கை என்றாய் உடையிலும் ஊடுறுவியது சாதியொளி கல்வி கற்க ஆசை எங்களுக்கு கல்லால் அடித்து விரட்டினீர்கள் முதுகெங்கிலும் முளைத்த கொப்பளக் காயங்களில் வழிந்த சீழுக்கு மருந்திடகூட மறுத்தது இம்மானிட பிறவி மனிதனை மனிதனே தள்ளிவிட்டான்...

நதியின் தாகம்

வரண்டுபோன நதியானது தாகமெடுத்து கடைசியாக முத்தமிட்ட முகங்களை தேடிக் கொண்டிருக்க கிடைக்கவில்லை எங்கும் மணலின் ஊற்றுப்படுகை கண்பார்க்கும் திசையெல்லாம் எம்மைப் போலவே ஏக்கங்களை சுமந்த எத்தனையோ முகங்கள் எண்ணிப் பார்க்கிறேன் கடத்தும் லாரிகளில் கையசைத்து காப்பாற்றென்கிறது ஆற்று மணல் அழுவதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை விரலொடிந்த கைகளையே விசாலாமாய் பரப்பிவிட வெட்டியவன் அருகிலேயே வேக வைத்திருக்கிறான் கூர்முனை மழுங்கிய கடப்பாறையை அவ்வளவு சீக்கிரத்தில் அவனும்...

Monday, February 23, 2015

ஜெ விற்காக சிலுவையை சுமந்தானாம் ஹூசைனி

முன்னாள் முதல்வரும் இன்றைய குற்றவாளியுமான அ தி மு க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் ஆட்சி அரியணையை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்ற வேண்டுதலில் சிலுவையில் தன்னைத்தானே அறைந்திருக்கிறார் அந்த அதிமுக தொண்டன் ஹூசைனி இந்துத்துவத்தில் படிந்திருக்கும் மூடநம்பிக்கைக்கு நிகரான நாங்களும் இருக்கின்றோம் என்று சவால் விடுகிறது அவரை சுமந்திருந்த சிலுவை அன்று ஒரு சரித்திர புரட்சிக்கான விதையாக அமைந்திருந்த அந்தச் சிலுவை இன்று பல தரித்திரங்களின் கையில் சிக்கி சின்னாபின்னாமாகிக்கொ­ண்டிருக்கிறது...

பாசத்திற்குரிய பாட்டி

ஒரு செல்லச் சினுங்களை சிறகடிக்க விடுகிறாள் தாய்மனம் தனதுயிரை துட்சமென தூரேயும் எரிகிறாள் சுமந்த வயிற்றிலேயே சுரண்டவளும் படுத்துறங்குகிறாள் பாசாங்கில்லா மழலையவள் சின்னச் சின்ன சண்டைகளில் சிதைந்து விடாத சிலைவடிக்கும் சிற்பியின் கைகளுக்கு தங்க காப்பிடுகிறாள் தமையனவனிடம் செல்லமாய் சினுங்கி விளையாடுகிறாள் ஆர்ப்பரிக்கும் ஆரவார கூச்சலிட்டு அடுத்த யுகங்களை அவளும் கடக்கிறாள் நண்பனவனிடம் நஞ்சினை விதைக்காத அப்பாவி முகத்திலவள் அகிலத்தை ஆள்கிறாள் கைதொடும் இன்பம்...

முதல் சந்திப்பு

கோர்வையாய் வியர்வையை கோர்த்தெடுக்கும் கோடை காலம் அது இன்னும் இமைகளை மூடவில்லை நான் முந்தைய தினத்தில் என்னை முழுதாய் தின்றுக் கொண்டிருந்தது திகட்டாத உதடுகள் பார்வையிலொரு பயத்தினை கலந்து பறந்தோடும் பறவைகளை போலே பார்க்கலாம் நாளையென பக்குவமாய் எடுத்துரைத்து ஏடுகளில் எழுதாத முற்றத்து முல்லைக்கு திடீரென கால்முளைத்து கைகளில் சிறகுகள் முளைத்தது போல் சொல்லிவிட்டு பறந்தாய் அந்த நிமிடத்தில் அது சொர்ப்பனமா? சொர்க்க பூமியிலுள்ளோமா? என எண்ணிப் பார்ப்பதிலே மலையேறிய...

இப்படிக்கு காதலன்

ஒரு எதார்த்த இடைவெளியில் எனதுயிர் விளக்கேற்றி இம்மடலை வடிக்கிறேன் உன் விழிகளில் வழிந்தோடும் விருட்சக் கனவுகளாக வலிகளுக்கு மருந்தாக இந்த மடல் அமையுமெனும் நம்பிக்கையில் நான் படித்து விடடி என் பாசத்திற்குரியவளே குறுஞ்செய்தியில் தொடங்கி குனிந்த தலை நிமிர்ந்திடாத வாட்ஸ்சப் வரையில் யுகங்களை கடந்து விட்டோம் ருசியற்ற மடலிது என் விழிகளுக்கு விருந்தாகுமா? மடலை எழுதும் போதே முகத்திலெழும் கிண்டலையும் கணித்து விட்டேன் அதையும் நான் ருசித்து விட்டேன் கஷ்டம் தான்...

Sunday, February 22, 2015

வாசல் கோலங்கள்

காலை திங்களவன் பட்டொளி வீசி புல் மீது படர்ந்து பனித்துளிகளை பருகி தாகம் தணிக்கின்றது தாவித் தாவி குதிக்கின்றது,,, வண்டுக்கு தேனை தந்துவிட்டு வாடி நிற்கும் மலருக்கு வாடா மல்லி பெயரெதற்கு வாடியதுதான் காரணமா வந்து பழியை சுமந்து நின்றதும் சுகமென எண்ணியதோ சாளரத்து திங்களவன்,,, விடிந்தவுடன் அவள் வீட்டு வாசலை பார்க்கத் தோன்றுகிறது எனக்கு,,, தாகத்திலும் ஏக்கத்திலும் திங்களவனும் நானும் ஒன்றென ஓசையெழுப்பிய ஆலைய மணியோசையை அப்படியே உள்வாங்கிய காதுகளுக்கு கவர்தலோசை...

Saturday, February 21, 2015

குயிலிறகு

கொஞ்சம் கொஞ்சமாக குயிலிறகினை பெயர்த்தெடுத்து குவித்து வைத்துள்ளேன் கூச்சத்தில் குயிலும் நெளிந்தாடுகிறகு,,, என்னவள் கார்கூந்தல் ஏற்குமா கருப்பிறகினை குயிலே கொஞ்சும் மொழியில் கூப்பிடு என்னவளை,,, கருவிழிகளில் காதலெனும் மைபூசி சுண்டியிழுக்கிறாள் அவள் சுருண்டு விழுந்த இதயத்தில் சுகமாக பரவிய காதல் தேனை பருகிட வேண்டும் நான்,,, பக்கத்தில் அமர்கிறாள் முகபாவனையில் ஏனோ முந்திச் செல்கிறது ஊடல்,,, குயிலிறகே குதூகலத்துவிடு அவள் கார்கூந்தலில் உனக்கோர் இடம் ஒதுக்குகிறாள்,,,...

மார்க்ஸிய மர நிழல்

ஆடைகளின்றி அலைகிறார்கள் அவர்கள் பருத்தியை பதம்பார்க்கும் இவர்கள் பகிர்ந்தளிப்பார்களா என்ன பஞ்சத்தின் அடையாளம் அதுவாக இருக்கிறதே என்ன செய்ய? பசி பட்டினியில் அலைகிறார்கள் அவர்கள் நிலம்படாத பாதங்களாக இவர்கள் பதுக்கிய உணவினை பகிர்ந்துண்பார்களா என்ன பற்றியெரியும் வயிற்றின் அடையாளம் அதுவாக இருக்கிறதே என்ன செய்ய? தாகத்தில் தவிக்கிறார்கள் அவர்கள் தர்பாரையே நடத்துகிறவர்கள் இவர்கள் தண்ணீரை பருக தாராளமாய் கொடுப்பார்களா என்ன விக்கலை விழுங்கித் தாகம் தணித்தார்கள்...

ஆகட்டும் பார்க்கலாம்

அன்றொருநாள் நீயெனுக்கு பரிசளித்த பார்வையின் வணப்புகளை சேகரித்து வைத்திருக்கிறேன்,,, உனக்கென நான் எனக்கென நீயென உள்ளத்து உணர்வுகளை காதலெனும் குவியலாக்கினேன்,,, குனிந்த தலை நிமிரவில்லை ஆகட்டும் பார்க்கலாமென்று அவசரமாய் மறைந்து விட்டாய்,,, அதுவே ஆறுதலெனக்கு,,, அன்று முதல் உனை சந்திக்கும் போதெல்லாம் எனதியத்தை ரசமாக பருகிய விழிகளை பார்த்தே உரையாடலை தொடங்கினேன் வேறெதுவும் தோனவில்லை எனக்கு,,, கெண்டை விழியாளே தித்திக்கும் தீஞ்சுவையே கற்பனையில் நான் மிதந்து...

Friday, February 20, 2015

என் பார்வையில் "கடைசி மனிதன்"

தொட்ட இடமெங்கும் தேள் கொட்டிவிட கானுமிடமெல்லாம் கல்லறைகளாக காட்சி நெளிய எழுதிவிடுகிறான் எழுதுகோல் ஏதுமின்றி சல சலவென ஓயாமல் பேசிய பொழுதுகள்... சிறுகச் சிறுகச் சிந்தியது அவனது பேச்சொலிகள் பிரியங்களை பகிர்ந்த வார்த்தைகள் அவனது ஆன்மாவிற்கு மட்டுமே பரிமாறப்பட்டன நிகழும் பரிமாற்றத்தை உணர்ந்து அவ்வப்போது குறிப்பெழுதுகிறான் தரையில் கூழாங்கற்கள் கல்லறைகளோடு புணர்வதையும் முத்தச் சத்தங்களையும் முத்துக்களாக சேகரிக்கிறான் மூழ்கிடாது அவனது காதல் நினைவுகள் உறவுகளின்...

காட்சிப்பிழை

மாடத்தில் புதுவிளக்கு இன்று பௌர்ணமி ____ உழைத்து வியர்த்த உடம்புகள் தோளில் துயரம் சுமக்கிறது துண்டுகள் ____ அவனியை வலம் வரும் ஆண்டவன் கையில் தோலில்லா எலும்புக் கூடுகள் ___ வழிந்தோடிய வாடைக்காற்று மௌனமொன்றே சாட்சிக்கூண்டில் ___ கற்பில்லா ஆண்மகன் கடைச்சரக்கில் குவிந்து விட்டது விலைமகளிர் இல்லங்கள் ___ எந்த ஓநாய்கள் வீசியதோ மானிட உடலெங்கும் சாதியெனும் பாவத்தழும்பு ____ நெஞ்சை விட்டு நீங்காத நெடி சூடுபிடிக்கும் தமிழீழ வியாபாரம் __...

தூளியில் குழந்தை

பால் சுரக்காத முலைகள் இருந்தும் அப்போதைக்கு ஆருதலாய் மடியில் குழந்தை ____ அழுகை நின்றிடவில்லை பேராளும் விடுவதாய் இல்லை தூளியில் குழந்தை ___ வயிற்றில் ஈரத்துணி வற்றித்தான் போனது குழந்தையின் சிரிப்பு ____ ஜோடி பொருத்தம் பார்க்கவில்லை வறுமையில் மெலிந்த காலுக்கு மெழுகானது காலணிகள் ____ பாலுக்கு அழும் குழந்தை இருந்தையும் வந்தவன் வாயில் திணித்தான் விபச்சாரி பட்டத்தை ___ தலையணை மெத்தை வீடு எதுவும் வேண்டாம் தெருவோர தூளியில் குழந்தை ____ பசிக்கிறது குழந்தைக்கு...

Wednesday, February 18, 2015

முண்டச்சி முறையிடல்

தேங்கி கிடந்த சருகிலைகள் அதன்மேல் மிதந்து மீண்டுவர முற்படுகிறது மீந்துபோன பனித்துளிகள் அனிச்சை வார்த்தைகளில் ஆங்காங்கே வழிந்தோடும் வாழ்க்கை கோடுகளை கண்டும் கானாது சேகரிப்பில் இறங்கிய சேற்றுப் புழுதிகள் வாழ்வினிது வையகம்பெரிது வசனங்கள் அறியுமா வரிக்குதிரை வடுக்களை தாங்கிய உதிர்ந்துபோன அச்சருகிலைகள் மெஞ்ஞானம் விஞ்ஞானம் இரண்டும் ஆராய இறுதிபக்கம் முடிந்த தாளில் முற்றுப்புள்ளியாக மூழ்கி கிடக்கிறது அச்சருகிலைகள் குனிந்த தலையுடனே குளத்தங்கரையில் முண்டச்சி...

Tuesday, February 17, 2015

மகத்தான பால்யம்

புத்தகம் மயிலிறகு புழுதி படிந்த புத்தகப்பை மடியில் தவழும் பால்யபருவம் எங்கும் எதிலும் கானக்கிடைக்காத கண்ணாடி ஒளிச்சிமிழ் ஒளித்து வைத்தவன் யாரோ ஓங்கியெழும் ஒய்யார நடையில் ஒற்றைக் காதலில் அழகுப்பறவை பால்யத்தின் அண்ணப்பறவை அழகே அறிவே அன்பே அடுத்த நிமிடம் விலகிப் போகிறேன் அழைக்கிறது கல்லூரி அங்கேயும் முளைத்திடுமா அழகான பால்யபருவம் இல்லையில்லை இது வித்தியாசம் விழிகளில் வியப்பினை தேடுகிறது அடிக்கவும் ஆளில்லை அணைக்கவும் ஆளில்லை தானாக தேடியதொரு தட்பவெப்ப...

Sunday, February 15, 2015

தாமதமானதா நம் அரசமைப்புச்சட்டம் தயாரிக்க;

அரசியல்நிர்ணயசபையின்பணிகளை ஒரு முறை திரும்பிப்பார்க்கும்போது, 1946 ஆம்ஆண்டு டிசம்பர் 9 அன்று, முதலில்கூடியதிலிருந்து இரண்டு ஆண்டுகள்பதினோரு மாதங்கள், பதினேழு நாட்கள்கழிந்துள்ளன. இந்தக் கால அளவில்அரசியல் நிர்ணய சபை மொத்தத்தில்பதினோரு முறை கூடியுள்ளது. இந்தப்பதினோரு அமர்வுகளில், நோக்கங்களைப்பற்றியதீர்மானங்களை நிறைவேற்றவும்,அடிப்படை உரிமைகள் பற்றியகுழுவின் அறிக்கை, ஒன்றியத்தின்அரசியல் சட்டம் பற்றிய அறிக்கை,ஒன்றியத்தின் அதிகாரம் பற்றியஅறிக்கை, மாகாண...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...