Monday, February 09, 2015

கவிதை -சீமானின் பச்சை-

எப்போதும் எழுந்திருக்கும் ஈழவுணர்வு
விளையாட்டு
பொம்மைகள்

விளையாடி ஓய்ந்தபின் ஆங்காங்கே
தெரியும்
விளம்பர யுக்திகள்
அழுவதா? அடிப்பதா?
என அறியாமல்
அங்கம் ஒடுங்கிப்
ச்சே!!! யென சலித்துக்கொண்டார் சேகுவாரா
பிரபாகரனோ
புலம்பியே
புழுதியானார் இருவருக்கும்
இடையே இடைவிடாது கேட்கிறது தமிழ்த்தேசியத்தின் அழுகுரல்
சீமான்(கள்) தங்களை
அழகாய் சிங்காரித்து கருப்புடை கலைத்து காவிக்கு பதிலாய் பாசிசபச்சையை
அணிகிறார்கள் கருப்புடைக்கே
கலங்கம் திராவிட விமர்சன விஷத்தினை
உமிழ்ந்த ஒட்டுண்ணிதானே
இவர்கள்
பெரியாரின் பேரனென தாடிமயிறை பிடித்திழுத்து தன்காரியம் முடிந்தவுடன்
தலையையே வெட்டியெடுத்த
தன்மான செந்தமிழ்ச் சீமான்(கள்) இவர்கள்
வந்தது விவிலிய
மத பற்றானாலும்
வாழ்வது இந்துமத வருணமாயிற்றே
நிறங்கள் மாறினாலும் மதவெறி ஒன்றல்லவா
மறந்தார்களா? இவர்கள் இல்லே! இல்லை!
மறைத்து மாறுவேடமிட்டு
அதுவும்
தமிழ்த்தேசிய வேடம்பூண்டு
மனிதனை விழுங்க வந்திருக்கிறார்கள் பாசிச்கொடியுடன்
கையில் பலிவாங்கும்
வேல்
சீமான் களே திராவிடம் என்றுமே சிறைபட்டதில்லை சிலந்தி வலையில் பெரியார்
சிக்கியதுமில்லை தற்போது நீங்கள்
கந்தன் கா(வ)லடியில்
அப்பப்போ
ஜெவின்
கா(வ)லடியில்
தமிழன்
எப்போதும்
பிச்சைக்கரங்களில்

தமிழ்க்கடவுளாம்
முருகர்
நாம் தமிழருக்கு
காவிக்கு பதில்
பச்சை ஒன்றும் வித்தியாசமில்லை விவரம் தெரிந்தே வைத்துள்ளேன்
விரலசைப்பது பார்ப்பானியமே,,

5 comments:

  1. ##தமிழன்
    எப்போதும்
    பிச்சைக்கரங்களில் ##

    ஐம்பது வருட திராவிட இருண்ட கால ஆட்சியில் பிச்சைக்காரரானார் தமிழர் எனும் உண்மையை மறந்ததேனோ ?
    அல்லது மறைத்ததேனோ ?

    ##பிரபாகரனோ
    புலம்பியே
    புழுதியானார் ##

    திராவிட தலைவர்களைப்போல் மேடையிலும் மேடைப்பேச்சிலும் தமிழர் தலைவர் புலம்புவதில்லை.

    ## கருப்புடைக்கே
    கலங்கம் திராவிட விமர்சன விஷத்தினை
    உமிழ்ந்த ஒட்டுண்ணிதானே ##

    களங்கத்தை எழுதிய விதத்தில் திராவிட எச்சம் என்பதை நிரூபித்துள்ளீர்கள்.
    பார்ப்பன விஷத்தையும் , வடவர் மீது பாஸிசத்தையும் , வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறதெனும் திராவிடத்தின் கோஷத்தையும் வசதியாக மறந்தாகி விட்டது . அல்லது தமிழர்களின் மறதி மேல் அவ்வளவு நம்பிக்கை.

    ReplyDelete
  2. அடடா அப்படியா!
    சு சாமியின்
    கரங்களில் கூட
    கந்த சஷ்டி
    (கவசம்)

    ReplyDelete
    Replies
    1. அடடா ! அதனால்தான் திராவிட தலைவர்கள் ஊழல் வழக்குகளிலிருந்து ஒதுங்கியிருக்குமாறு சு.சு வுக்கு தூது அனுப்பி வருகிறார்களா ?

      குடும்ப ஆட்சி திராவிடத்தலைவர் குடும்பத்தோடு பாபாவின் காலடியில் ஒட்டு மொத்தமாக வீழ்ந்தாரா ?

      பெரியாரின் திராவிட எச்சங்களின் பார்ப்பனிய சரணாகதி அரசியலை பார்த்து தமிழன் சிரிப்பாய் சிரிக்கிறான் ..

      Delete
  3. சீமானை சொன்னால்
    கருணாவின் கரம்பற்றியவனாமே!
    கண்ணில்லா
    குருடரின்
    கண்டுபிடிப்பு
    இதுதானோ!

    ReplyDelete
  4. சீமானைப்பற்றி மட்டும் சொல்லவில்லை .தமிழ் தேசியத்தை தாழ்த்தியும் , திராவிட தேசியத்தை அப்பழுக்கற்றது போலவும் கூறப்பட்டுள்ளது .
    தமிழ் தேசியம் இதுவரை எழுச்சி பெற்றதுமில்லை , அப்படி எழுச்சி பெற திராவிட தேசியம் விட்டதுமில்லை . ஐம்பது வருடங்களுக்கு மேல் திராவிட ஆட்சியில் தமிழ்நாடும் , தமிழரும் நலிந்ததுதான் மிச்சம். திராவிட தலைமகளும் அவர் தம் குடும்பங்களும் தமிழரை கொள்ளை யடித்து சுகபோகமாக வாழ்கின்றனர்.
    பார்ப்பனியத்திடம் சூதானமாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் அவர்கள் உன் தோள் மேல் ஏறி உட் கார்ந்து கொள்வார்கள் என தமிழர்க்கு போதித்துக்கொண்டே தமிழர்களின் தலையில் ஏறி உட் கார்ந்து கொண்டார்கள் .
    அதைப்பற்றி பேசினால், சீமானைப்பற்றியும் , தமிழ் தேசியத்தை பற்றி மட்டும் தரக்குறைவாக பேசுவோம் , பதிலுக்கு திராவிடத்தை பற்றியும் , திராவிட தலைகளையும் பற்றி எதுவும் பேசக்கூடாதென்பது நல்ல கெட்டித்தனம்

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...