Friday, March 13, 2015

பூங்கா நகர்

அதுவொரு
அழகான
மாலைபொழுதென
வர்ணனை
செய்து விட
மாட்டேன்

ஏனெனில்
தினந்தினம்
பூமாலை சூடும்
மாலை பொழுது
எப்பொழுதும்
அழகு தான்

ஏதேனும்
சிற்பிக்குள்
முத்தெடுக்கலாகாதோ
எனும்
ஏக்கம் என்
கால்களுக்கு
எப்போதுமுண்டு

நடைபோடும்
கால்களுக்கு
புன்னகையால்
பொன்னகையிட்டு
வரவேற்றது
பூங்கா நகர்

அதன் இயல்பில்
எவ்வித
சலனமும்
இல்லையென
என் மனம்
கூறினாலும்

உற்று
நோக்குகிறேன்
உள்ளம் பரிமாறுதல்
நடக்கிறதங்கே
சிறுவர்களின்
சிரிப்பொலிகளும்
காதலர்களின்
கண்ணசைவும்
முதோர்களின்
முந்தைய
வரலாறுகளும்
அசை
போடுகிறதங்கே

அமைதியாய்
ஓரிடத்தில் அமர்ந்து
அழகு பூங்காவின்
ரசிகனானேன்

என் ரகசிய
ஊடுருவலை
எப்படியோ
உணர்ந்து
உலர்ந்து கொட்டுகிறது
ஊமையான
செடிகொடிகளின்
பூக்கள்

குனிந்து
உலர்ந்த மலர்களை
மடியினில்
தாங்கினேன்

சினுங்கியது
அம்மலர்கள்
தேனை இழந்து
தேகம் மெலிந்து
இதழ்களை
தொலைத்து
என்னிரு கரங்களில்
முத்தமிடுகிறது
அப்பூங்கா
மலர்கள்

வரலாறு நானறிவேன்
என்னைப் போலவே
நாடிழந்து
மொழியிழந்து
இனமிழந்து
தவிக்கிறது
பூங்கா
நகர் பூக்கள்

முந்தைய
காலத்தில்
முழுநிலவையும்
முகம் பார்த்து
அசைந்தாட
காற்றை அழைத்து
மண் சரிப்பில்
பூமித்தாயை
இழுத்துக் கட்டி
மேலோங்கி நின்று
மேகம் கொண்ட
பொறாமையின்
பேரின்பத்தில்
தளைத்திருந்த
அடர் காடு
அன்றிருந்த
நிலத்தின் கூடு

இன்றோ
அனைத்தையும்
இழந்து
எளிதாய் பறித்துவிடும்
இடத்தில்
பூங்கா நகரென
பெயர்கொண்டு
எழுவது
வீழ்வதற்கே
எனும்
முத்திரையில்
முகம் தொலைத்து
கண்ணீரால்
என் கரங்களை
கழுவுகிறது
அப்பூங்கா
நகர் பூக்கள்

பனிதுளிகளே
கொஞ்சம்
கேளுங்களேன்
பூமியில்
பூக்களிங்கே
பாவமாய்
கல்லறையில்

என் கல்லறையை
அலங்கரிக்கும்
பூக்களே
உங்களின்
கல்லறைக்கு
நானே சாட்சி

விடை பெறுகிறேன்
பூங்கா நகர்
பூக்களே
நாளை விடியலை
உங்களிடம்
நான் வந்து
பகிர்வதற்குள்
பறிக்கத்தான்
போகிறார்கள்
உங்களின்
சுதந்திரத்தை

சூழ்ச்சிகளை
விரைவில்
சூரியனை போல்
சுட்டெரிப்பீர்கள்
எனும்
நம்பிக்கையில்
நானும்
விடைபெறுகிறேன்,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...