Friday, October 14, 2016

நாகம்மாள் மறைவு நன்மையைத் தருவதாகுக! - பெரியார்

எனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.5.1933 ஆம் தேதி மாலை 7.45 மணிக்கு ஆவி நீத்தார். இதற்காக நான் துக்கப்படுவதா? மகிழ்ச்சியடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு லாபமா, நஷ்டமா என்பது இது சமயம் முடிவு கட்ட முடியாத காரியமாய் இருக்கிறது. எப்படியிருந்தாலும், நாகம்மாளை 'மணந்து' வாழ்க்கைத் துணையாகக் கொண்டு 35 வருட காலம் வாழ்ந்து விட்டேன். நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல், நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக...

Monday, July 11, 2016

என் மௌனங்கள்

என் மௌனங்கள் மென்று தின்னுகிறது வார்த்தைகளை அதற்கு பெயரிடுகிறாய் சம்மதமென்று அமைதியாய் இருந்துவிட்ட காரணத்தால் எனது ஆசாபாசங்களை தொலைத்துவிட்டு தவிக்கிறேன் எவ்வாறாயினும் காகிதமொன்றில் மௌனம் தின்று போட்ட எச்சங்களை எழுத்தாக்கி கடிதமொன்றை வரைகிறேன் எனது கைகளுக்காவது தெம்பிருக்குமா அதை உன்னிடத்தில் தருவிக்கவென்று தெரியாதெனக்கு வலிக்கத்தான் செய்கிறதென் இயலாமையும் தயக்கங்களும் இறுதியில் கோழைத்தனமாய் உன்னை மணமுடிக்கிறேன் மனதை கல்லாக்கி கசக்கத்தானே செய்யும்...

Monday, July 04, 2016

புத்தனுக்கு

அமைதியாக புத்தன் அமர்ந்திருக்கிறான் ஆசைகள் அனைத்தும் சிலைகளாக வடித்தாகிவிட்டது அங்கொன்றும் இங்கொன்றுமாக அல்லாமல் உலகெங்குமாய் ஆனாலும் புத்தனுக்கு பேச வேண்டும் போலிருந்தது என்னை ஏன் கடவுளாக்கினீர்கள் என்று வாய்ப்பூட்டு புத்தனுக்கும் வாய்ப்புகளை சிலைகளுக்கும் தந்தாகி விட்டது நிரந்தரமாய் மௌனம் புத்தனுக்கு பொருந்திப் போனதென்று போலியாய் பரப்புரையும் செய்தாகிவிட்டது இனி பேசுதல் பற்றி சிந்தித்தல் கூட புத்தனுக்கு பக்தர்களின் அனுமதி வேண்டி வரிசையில் நின்றாக...

Sunday, July 03, 2016

தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு

*தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது, குடிமக்கள் தாங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களின் நிலைத்தகவல்களைஉரிமையுடன் கேட்டுப்பெற வழிவகுக்கும் முக்கியமான சட்டம்.*2005-ம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தின் மூலம்,பெண்கள் என்ன பலன்கள் எல்லாம் பெற முடியும், அதற்கு விண்ணப்பிப்பதுஎப்படி, அது சம்பந்தப்பட்ட புகாரை எங்கு அளிக்க வேண்டும் என்பது பற்றிஇப்போது காண்போம்…மனுவை எப்படி எழுத வேண்டும்?*`ஆமாம்’, `இல்லை’ என்பது...

Saturday, July 02, 2016

இந்துத்துவ ஆர் எஸ் எஸ் ஓர் அறிமுகம்

ஆர் எஸ் எஸ் என்றால் என்ன ?அவர்கள் யார்?அவர்களின் பணி என்ன?1.ஆர் எஸ் எஸ் என்பது –ராசிடிரிய சேவை சங்கம் –இது இந்து மத வெறிஎன்ற ஒன்றால் அமைக்கப்பட்டபார்பனர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபனம்,2.இதுக்கு உலகெங்கும் உள்ள பார்ப்பன மதவெறியர்கள் நன்கொடை அளித்து நடத்திவரும் ஒரு பயங்கரவாத அமைப்பு இது.3,இதுதான் கோட்சே மூலம் காந்தியைசுட்டு கொன்றது. இன்று இந்தியாவில்இருக்கும் மத கலவரங்களுக்கும் , சாதிமோதல்களுக்கும் இதுதான் காரணம் ..4. இந்தியாவில் பயங்கரவாத செயல்கள்...

கபாலியும் கொலையும்

நான் கபாலி திரைக் காவியம் பற்றியும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஓயாது மந்திரங்களோதும் பலகோணத்து புது படங்களை பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன் இடையிடையே அரட்டையும் அங்கலாய்ப்புகளும் அடுத்த சூப்பர் ஸ்டார் தலயா தளபதியா? என்கிற ஆராய்ச்சி விவாதங்களுடனும் அந்த பயணங்களில் எனதருகில் ஒரு தற்கொலை ஒரு படுகொலை கண்டும் காணாமல் நகர்ந்து விட்டேன் உடனே விமரிசனம் எழுதியாக வேண்டுமே அதுபற்றியல்லாமல் திரைக் காவியங்களை பற்றி தல தளபதிகளை பற்றி,,, சுவா(தீ)க்களோ வினுபிரியாக்களோ...

மாவோ எனும் மாமனிதன்

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சியினை விரும்பும் கம்யூனிஸ பாட்டாளி வர்க்கத் தொழிலாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ற ஒருங்கிணைத்தலை ,வழிநடத்தும் பண்பு கொண்ட ஒரு தலைமை வாய்ப்பதற்கு அவர்களின் புரட்சிக்கு ஏற்ற வெற்றிபெற்ற செயல்திட்டங்களே உதாரணமாய் அமைகின்றது. அந்த வகையில் ஓர் தலைமை மட்டுமே செயல்திட்டத்தினை தொழிலாளர் வர்க்கத்தோடு இணைந்து புரட்சியை வகுத்து செயல்படுத்த முடியும். மார்க்ஸியம், லெனினியத்திற்கு செழிப்பூட்டும் வகையில் பாட்டாளி வர்க்கத்தின் மீது...

Friday, July 01, 2016

மிக சமீபத்தில்

மிக சமீபத்தில்தான் நான் செத்திருக்க வேண்டும் ரிங்கார இறைச்சலோடு ஈக்கள் கூட்டமொன்று யாரோ ஒருவன் தன் கூர்வாளால் எனதுடலை கிழத்த இடங்களில் வழிந்தோடும் குருதியின் கதகதப்பில் ஆழ்ந்து உறங்குகின்றன அவைகளை தொந்தரவு செய்யாதீர்கள் விலகியோ விழுந்தடித்தோ நகர்ந்து விடுங்கள் நாளைக்கு அவைகள் மட்டுமே என் கல்லறைக்குள்ளும் அனுதாபங்களை சுமந்து கொண்டு உயிரோடு வாழும் ஆத்ம விசுவாசிகள் அப்போதவைகள் ஈக்களில்லை தன் உருவங்களை மாற்றிக்கொண்ட புழுக்களெனும் பெயரில்...

கடவுளாக்கப்பட்டவன்

நானாகி நிற்கிறேன் யாருமற்ற அடர் வனத்தில் கனத்திருக்கும் சிலுவையின் சுமையினை இறக்கி வைத்து இயேசுவை போல என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீரென கதறி அழுகிறேன் கடவுளாக்கப்பட்டவனின் கடைசி அலறலும் கதறலும் காதுகளில் விழாதென கைகளால் மூடிக்கொண்டது அந்த அடர்ந்த வனம் அதுவும் நல்லதுதான் கடவுளை மறுப்பதற்கு போதுமானதாய் பொதுவானதாய்...

Friday, June 17, 2016

பாபா சாகேப் திரைப்படம் தயாகிறது தமிழில்,,,

காமராசர், பாரதியார் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது புரட்சியாளர், இந்திய அரசியலமைப்புத் தந்தை பாபா சாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு 'பாபா சாகேப்' என்ற பெயரில் சினிமா படமாகிறது. இப்படத்தை அஜய் குமார் என்பவர் இயக்கி, தயாரிக்கிறார்.இப்படம் குறித்து அவர் கூறும்போது, டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கையை மையக் கருவாக வைத்து உருவாகவிருக்கும் திரைப்படம் தான் "பாபா" சாகேப். தமிழ் சினிமாவில்...

ஜிஷாவின் தாயருக்கு கன்னய்யா குமார் ஆறுதல்

இந்துத்துவ பார்ப்பானியத்தின் மனுதர்ம ஆட்சியில் சாதியாதிக்கர்களின் பாசிச போக்கினை, இந்தியம் அனுபவித்துக்கொண்டிரு­க்கிறது. மதவெறி,சாதிவெறி, பெண்ணடிமைத் தனம், தலித் விரோதம், பாலியல் வண்புணர்வு, பிற்போக்குச் சிந்தனைகளை விதைத்தலென தொடர் தாக்குதலுக்கு ஆளாகும் மக்களின் பக்கம் நீதி இருந்ததில்லை என்பது தெளிவுபடுத்தும் விதமாக நடந்ததுதான் கேரளத்தில் சட்டக் கல்லூரி மாணவி தலித் ஜிஷா வண்புணர்வுக்காளாகி கொரூரமாக படுகொலை செய்யப்பட்டார். சமீபத்தில் கேரளத்தில் புதிய...

Thursday, June 16, 2016

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

"தேசியத்தை" வளர்க்கச் சொல்லுகிறவர்கள் தேசத்தில் பட்டினி கிடந்துவருபவர்களுக்கு அந்தக் கொடுமையை விலக்க என்ன செய்யப்போவதாகஉத்தேசித்துள்ளார்கள்­? மக்களுக்கு ஆதிக்கம் வந்தபோது நிலமில்லாதவர்க்குநிலம் கொடுக்கப் போகிறார்களா? வீடற்ற ஏழைகளுக்கு வீடு கொடுக்கப்போகிறார்கள்? இல்லை வேலை, கல்வி இரண்டையும் அளிக்கப் போகிறார்களா? அல்லதுஇவையில்லாத மாந்தர்க்கு விடுதலைதான் கொடுக்கப் போகிறார்களா? விளைபொருட்களையும் செய்பொருட்களையும் எவ்விதம் விநியோகம் செய்வதென்பதிலும்திட்டமெதேனும்...

Wednesday, June 15, 2016

ஏகாதிபத்தியர்களும்,பிற்போக்காளர்களும் - மாவோ (மா சே துங்)

ஏகாதிபத்தியம் எப்போதும் தீயச்செயல்கள் செய்கிறதாகையால் அதுநெடுங்காலமாய் நிலைக்காது . அது எல்லா காலங்களிலும் எல்லா நாடுகளிலும்மக்களுக்கு எதிராகவே நிற்கும் பிற்போக்காளர்களை வளர்ப்பதிலும்,ஆதரிப்பதிலும் விடாப்பிடியாகவே நிற்கும். அந்த ஏகாதிபத்தியமானது பலகாலனிகளையும், அரைக் காலனிகளையும் , பல ராணுவ தளங்களையும் கெட்டியாகவும்பலவந்தமாகவும் பிடித்துள்ளது. அது சமாதானத்தை , சமத்துவத்தை விரும்பும்சோஷியலிஸத்தை கம்யூனிஸத்தை அணு யுத்தத்தால் அச்சுறுத்துகிறது. இவ்வாறாகஏகாதிபத்தியத்தினால்...

Monday, June 13, 2016

உயிராபத்துகளை கடந்து புரட்சியை வென்றெடுத்த லெனின்

* 1895-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லெனினும் அவருடைய தோழர்களும் கைதுசெய்யப்பட்டனர். ஜார் ஆட்சிக்கு எதிராகப் போராடியதற்காக அவருக்கு நான்குஆண்டு கால சைபீரியச் சிறைவாசம் அளிக்கப்பட்டது. சைபீரியாவிற்குஅனுப்புவதும் மரண தண்டனை நிறைவேற்றுவதும் ஒன்றுதான். ஏனென்றால் சைபீரியாஎன்பது ஒரு பனிபிரதேசம். நிலம் எப்போதும் பனியால் மூடியிருக்கும்.எந்நேரமும் பனி பெய்யும். புயல் வீசும். கடும் குளிர் ஆளை சாகடிக்கும்.ரசிய அரசு புரட்சியாளர்களை சைபீரியாவிற்கு அனுப்பி...

Sunday, June 12, 2016

சாலை விபத்துகள் , தமிழகம் முதலிடம் பெருமையா?

தமிழ்ச் சமூக நிலத்தில் எங்கு பார்த்தாலும் மது பாட்டில்கள், தண்ணீர் பிளாஸ்டிக் உறைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், ஊறுகாய் அல்லது கறி பகோடா சிதறல்கள், இவைகளே நிரம்பி வழிகின்றன. நீங்கள் எங்கேனும் பயணப்படுகையில் இவைகளை பார்க்காமல் நகரவே முடியாது. அப்படியான சூழலில் இது உங்களுக்கு சர்வ சாதாரணமான விஷயமாகத்தான் தெரியும். ஆனால் அதேவேளையில் "மனித உயிர்" என்பது மதிக்கப்பட வேண்டியது எனும் வாசகத்தை மட்டும் ஏதோவொரு கோணத்தில் பிடித்துக் கொண்டிருப்பீர்கள் கண்களை மட்டும்...

Friday, June 10, 2016

எழுவர் விடுதலைக்கான பேரணியில் சில மாற்றங்கள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எவ்வித தொடர்புமற்று ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக ஆயுள் தண்டனைக் கைதியாக தனிமை சிறையில் வாடும் தோழர் பேரறிவாளன் , சாந்தன் , நளினி உள்ளிட்ட எழுவரின் விடுதலைக்காக நாளை (ஜூன் 11) வேலூரிலிருந்து சென்னை ஜார்ஜ் கோட்டையை நோக்கி "வாகனப் பேரணி" நடக்கவிருந்ததில் சில சட்ட சிக்கல் மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை வேலூரிலிருந்து தொடங்குவதற்குப் பதிலாக சென்னை எழும்பூரில் இருந்து பேரணியாகச் சென்று...

பேசும் இதயம் 7

நாளையும் அதே மரத்தடியில் நம் சந்திப்பு உதிர்ந்த மலர்கள் மீண்டும் கிளைக்கு திரும்பலாம்,,, __________ பசியில் கிளி ஜோசியக்காரனின் ஒரு நெல்லும் விலை போனது,,, __________ என்னில் செங்கதிராய் பாய்கிறாய் சுடர்விட்டு எரிகிறதென் காதல் அணைத்து விடாதே! அவ்வளவு சீக்கிரத்தில் என் மரணம் நிகழ்ந்துவிடாது என்னவளே! __________ உன் பார்வையில்தான் எத்தனை விளக்கங்கள்,,, அகராதியை மூடிவிட்டு உன் முகத்தையே பார்க்கிறேன் அன்பிற்காக ஏங்கி ஏங்கி,,, __________ தூவானம் தொலைவில்...

Thursday, June 09, 2016

அற்புத கனவொன்றில்

அற்புத கனவொன்றில் ஆடித் திரிகின்றேன் நான் மட்டும் தனியே அக்கனாவில் என்னை இழுத்துச் செல்லும் நித்திரைக்கு பூக்கள் தூவி தினம் பூஜிக்கும் வழக்கம் என்னில் உண்டு இரவை வலிய இழுத்து இமைகளுக்கு ஓய்வு கொடுத்து உள்நுழைகிறேன் அதுவொரு ஏகாந்தவெளி இடையூறுகள் ஏதுமின்றி வானத்துச்சியில் வா!வா! என அழைக்கிறாள் இயற்கையன்னை சென்றேன் அங்கே நானும் அந்த பசுமையின் வனப்பில் விளையாடி மகிழ்கின்றேன் அந்த நதியின் முகடுகளில் என் முகம் பதித்து முத்தமிடுகின்றேன் அந்த மலைச்சரிவில்...

Wednesday, June 08, 2016

விஜய் சேதுபதி எழுவர் விடுதலையை பற்றி பேசக்கூடாதென சொல்வதற்கு நீங்கள் யார்?

என்ன கருமம்டா இது! என வெறுப்போடு முகம் சுளிக்க வைக்கிறது இந்த தமிழ்ச் சமூகம். திரைத் துறையில் ஒருவரின் அணுகுமுறை சமூக நலனை நோக்கி வருகின்றபோது அதனை இலாவகமாக ஏற்று அரசியல்படுத்தி ஊக்குவிக்கத் தெரியாமல் இருக்கும் இதே தமிழ்ச் சமூகம்தான் அப்படியானவர்களை கூத்தாடிகள் என்று வசைபாடியும், கேலிசெய்தும், கொண்டிருக்கிறது. அதையும் தாண்டி ஒருபடி மேலேபோய் ஏதோ இவர்கள்தான் சமூகத்தை காக்கும் காவற்குடிகளாகவும் இவர்களாலே சமூக விடுதலை பேசப்படுவதாகவும் புளங்காகிதம் கொண்ட சில போலித் தமிழ்தேசிய அசிங்கங்கள் அவ்வாறு சமூக நலனை பற்றி திரைத்துறையில் ஒருவன் பேசினாலே "நீ மூடிட்டு...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...