Tuesday, February 16, 2016

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்

1856 ஆம் ஆண்டு அப்போது ஜென்னிக்கு 42 வயது, விரிவடைந்த தன் வறுமை
குடும்பத்தை விட்டு ஜெர்மனியில் டிரியர் நகருக்குச் சென்றிருந்தார் ,
அங்கே அவரின் தாயாரின் கரோலின் ஹ்யூபெ. உடல்நிலை மோசமாக இருந்தமையால்
பயணம் தவிர்க்கமுடியாதொன்றா­க இருந்தது. ஜென்னியின் மீது கார்ல் மார்க்ஸ்
கொண்டிருந்த காதல் உணர்வு அந்த சூழலில் அவர் ஜென்னிக்கு எழுதிய
கடிதத்தில் வெள்ளப்பிரவாகமாய் பெருகி ஒடியது.
இவ்வாறு எழுதுகிறார் கடிதத்தை,,,
அன்பின் இனியவளே!
திரும்பவும் உனக்கு எழுதுகிறேன் நான் தனியாக இருப்பதால் மனசுக்குள்ளேயே
நான் உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறேன், நீயதை தெரிந்து கொள்ளாமலும் ,
கேட்க முடியாமலும், பதிலளிக்காமலும் இருப்பது என்னை வாட்டுகிறது "எனக்கு
முன்னே நீ இருப்பது தெரிகிறது அன்புடன் உன்னை நான் தொடுகிறேன், உச்சந்தலை
முதல் உள்ளங்கால் வரை முத்தமிடுகிறேன் உனக்கு முன்னால் மண்டியிடுகிறேன் ,
அன்பே உன்னை காதலிக்கிறேன் என்று என் உதடுகள் முணுமுணுக்கின்றன, ஆம்
வெனிஸ் மூர் எக்காலத்திலும் காதலித்ததை விடவும் அதிகமாக காதலிக்கிறேன்
உன்னை, என்பது உண்மை. போலியான உடைந்துபோன உலகம் எல்லா மனிதர்களையும்
போலியானவர்களாக உடைந்து போனவர்களாக பார்க்கிறது.
என்னை அவதூறு செய்பவர்கள், என் முதுகுக்கு பின்னே திட்டுபவர்கள் எவரேனும்
இரண்டாம்தர நாடக அரங்கில் முதல்தர காதலர் வேடமேற்று நடிப்பதற்காக என்னை
எப்போதேனும் குறைகூறியதுண்டா? ஆனால் அது உண்மையே, இந்த
போக்கிடமற்றவர்களுக்கு நகைச்சுவை உணர்வு இருக்குமானால் அவர்கள் உற்பத்தி
மற்றும் பரிவர்த்தனை உறவுகளை ஒருபுறத்திலும், உன் காலடியில் நான்
விழுந்து கிடப்பதை மறுபுறத்திலும் ஓவியமாக தீட்டியிருப்பார்கள்.­ இந்த
படத்தையும் அந்தப் படத்தையும் பாருங்கள் என்று அந்த ஓவியத்திற்கு கீழே
எழுதி வைத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் முட்டாள்தனமான போக்கிடத்தவர்கள்
என்றும் முட்டாள்களாகவே இருப்பார்கள்.
நீயென்னை பிரிந்த உடனே உன்னிடம் நான் கொண்டிருக்கும் காதல் அதன் உண்மையான
வடிவத்தை பெரும்பான்மையாக அடைத்துக் கொண்டிருக்கிறது. அன்பு நிறைந்த
உன்னிடம் காதல் கொள்வது என்பது ஒரு மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது.
அன்பின் இனியவளே நீ சிரிக்கலாம்! ஆனால் உன்னுடைய இனிமையான தூய உள்ளத்தை
என்னுள்ளத்துடன் சேர்ந்து அணைத்துக்கொள்கிறேன்.­ நான் மௌனமாக இருப்பேன்
ஒரு வார்த்தை கூட பேசாமல், உதடுகளினால் அல்ல நாவினால் முத்தமிடுவேன்
வார்த்தைகளைத்தான் சிந்துவேன், கவிதைகள் எழுதுவேன் , உலகில் பெண்கள் பலர்
இருக்கிறார்கள் சிலர் அழகானவர்களும் கூட, ஆனால் ஒவ்வொரு அசைவிலும்
ஒவ்வொரு சுருக்கத்திலும் என் வாழ்க்கையின் மிகச் சிறந்த இனிய நினைவுகளைத்
தூண்டுகின்ற அந்த முகத்தை மறுபடியும் காண வேண்டும் உடனே கிளம்பி வா!
உன்னுடைய இனிய முகத்தில் எனது முடிவற்ற துயரங்களை ஈடுசெய்ய முடியாத
இழப்புகளை (எட்கார் இறந்தது) காண்கிறேன். உனது இனிய முகத்தை
முத்தமிடும்போது துயரங்களை முத்தமிட்டு விரட்டுகின்றேன்.
உன் கரங்களில் புதைந்து உன் முத்தங்களில் புத்துயிர் பெற்று மீண்டும்
மீண்டும் வாழ்ந்து விடுகிறேன் மரணம் பற்றிய பயமின்றி,,,
எப்போது வருவாய்
விரைவில் என்னிடம் வந்துவிடு!

கார்ல் மார்க்ஸ் தன் காதல் மனைவி ஜென்னி மீது வைத்துள்ள நேசத்தின் ஆழம்
எவ்வளவு என்பதற்கு 1856 -ல் மார்க்ஸ் எழுதிய கடிதமே ஒரு சான்று,, அதுவே
காதலுக்கும் மார்க்சியத்திற்கும் தொடர்பாய் இருந்திருக்கிறது.
ஜென்னி பல வருட காலம் மார்க்சுக்கு தனிச் செயலாளர் போல செயல்பட்டார்,
நூல்களை பிரதி எடுப்பது ,கட்சிப் பணிகளில் உதவுவது, உலகத் தொழிலாளர்
வர்க்க இயக்கத்தை சேர்ந்தவர்களிடம் கடித தொடர்பு மோற்கொள்வது, புரட்சியை
விரிவுபடுத்துவது ஆகிய இயக்கப் பணிகளோடு தன் இல்லறப் பணிகளிலும் ஜென்னி
ஈடுபட்டிருந்தார் .

2 comments:

  1. கார்ல் மார்க்ஸ் பற்றி படிக்க வேண்டும் என ஆர்வம் நேரிடுகிறது.. உங்கள் பதிவ பார்த்ததிலிருந்து..

    ReplyDelete
  2. கார்ல் மார்க்ஸ் பற்றி படிக்க வேண்டும் என ஆர்வம் நேரிடுகிறது..
    #வாழ்த்துக்கள்
    யூடூப் லிங்க தர முடியவில்லை,
    "MARXISM _ மார்க்சியம் என்றால் என்ன? _ தோழர் தியாகு"
    இந்த யூடூப் காணொளியை பார்த்தால் மார்க்சியம் கற்க எளிமையாக இருக்கும்
    தோழர் தியாகுவின் கற்றல் வகுப்பு

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...