Saturday, March 12, 2016

ஆசிரியர்-மாணவக் குழந்தைகள் உறவு???

தமிழ்க் காட்சி ஊடகங்கள் "அந்த" செய்தியை திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக்
கொண்டிருக்கையில் ஒருவித பயம்தான் ஏற்படுகிறது, இதன் மூலம் தங்களை
கலாச்சார சீர்தூக்கிகளாக காட்டிக்கொள்கின்றனவா­? என்கிற சந்தேகமும்
எழத்தான் செய்கிறது. "அந்த" நிகழ்வுக்கும் காட்சி
ஊடகங்களும்,திரைத்துற­ையுமே முக்கிய காரணமென்றால் அது மிகையாகாது.
பிறகென்ன இருக்கப்போகிறது இந்த சமூகத்தில்,,, பதில் சொல்ல எந்த காலாச்சார
சீர்தூக்கிகளாலும் முடியாது. காட்சி ஊடகம் பரப்பிக்கொண்டிருந்த "அந்த"
செய்தியை இயக்குநர் சாமி போன்றவர்கள் மட்டும் பார்க்கவே கூடாது என்பது
மட்டும் எண்ண அலைகளாக இருக்கிறது.
இதுபற்றி எழுதக்கூடாது என்பதில் உறுதியாகவும் இருக்க முடியவில்லை ,
ஏனெனில் என்னை சுற்றி என் சமூக வலைதளங்களை சுற்றி எங்கும்
நிறைந்திருப்பவர்கள் "ஆசிரியர்"களாகவே இருக்கிறார்கள். இன்றுவரையில்
நானொரு மாணவனாகவும், அவர்களின் பிள்ளையாகவுமே பல்வேறு சமூக முற்போக்கு
கருத்துக்களை கேட்டுக்கொண்டும்,கற்­றுக்கொண்டும்,கல்வியை­யும்,புத்தியையும்
வளர்த்துக்கொண்டிருக்­கிறேன். அந்த வகையில் சர்ச்சைக்குரிய ஆசிரியரின்
காதல் திருமணம் குறித்து தனிப்பட்ட கருத்தேதும் இல்லாமல்
அவர்களிடத்திலேயே பொதுவில் வைத்து விடுகிறேன். காட்சி ஊடகங்கள்
ஒளிபரப்பிக் கொண்டிருந்ததை கண்டதும் முதலில் பதற்றமானது, இதனை மட்டும்
இயக்குநர் சாமி போன்றவர்களின் கண்களுக்கு தெரியவேக்கூடாது என்பதாகத்தான்
இருந்தது, வண்மங்கள் நிறைந்த கலைத்துறையை பாவம் யாராலும் ஒழுங்குபடுத்த
முடியவில்லையே என்கிற ஆதங்கமும் உண்டு. தோழர் இரா எட்வின் அவர்கள் தனது
பதிவொன்றில் பதினெட்டு வயதுக்குட்பட்ட மாணவர்கள் அனைவரையும் "குழந்தைகள்"
என்றே அழைக்கப்பட வேண்டுமென்கிற கோரிக்கையை ஒரு மேடையில் ஆசிரியை ஒருவர்
முன்வைத்தார் என்பதை குறிப்பிட்டுவிட்டு நமது உரிமையை அடையவே இங்கே
"கோரிக்கை" முன்வைக்கப்படுகிறது என்கிற தன் ஆதங்கத்தை வெளிபடுத்தினார்.
அன்றுமுதல் பள்ளி மாணவர்களுக்கு எதிராக எழும் அனைத்து சமூக
அவலங்களுக்கும் அவர்களை குறிப்பிட "குழந்தைகள்" என்றே வலைப்பதிவிலும்
,சமூகவலைதளங்களிலும் எழுதிக்கொண்டு வந்திருக்கிறேன். அந்த வகையில்தான்
தற்போது நிகழ்ந்துள்ள இச்சம்பவம் பெரும் உறுத்தலையும் மன உளைச்சலையும்
கொடுக்கிறது. சமூக வலைதளங்களில் "அந்த" சம்பவத்திற்கு ஆதரவு கருத்துக்கள்
வேறு பரவலாக காணமுடிகிறது. இதனை எவ்வாறு கையாள்வதென்றும்
புரிந்துகொள்வதென்கிற­ குழப்ப நிலையில் சமூகத்தின் மீது அக்கரையுள்ள
ஆசிரியர்கள் தெளிபடுத்தியாக வேண்டிய சூழலுக்கு
தள்ளப்பட்டிருக்கிறார­்கள். இதுபோன்றதொரு நிலமை இனி சமூகத்தில் ஏற்பட்டு
விடவும் கூடாது, அதற்கான இடத்தையும் கொடுக்க கூடாது. 23 வயது
மதிக்கத்தக்க ஒரு ஆசிரியை 15 வயதுடைய ஒரு பள்ளிக் குழந்தையை காதலித்து
திருமணம் செய்து, அதுவொரு குழந்தைக்கு தாயாகிறதென்றால் இது பால்ய
திருமணத்திற்குட்பட்ட­தா இல்லையா? ஒரு பள்ளிக் குழந்தை இன்னொரு
குழந்தைக்கு தகப்பனாகப் போகிறது இதனை இச்சமூகம் எப்படியான மனநிலையில்
அணுகும்? கடந்த 2014–ம் ஆண்டு காணாமல் போன அந்த ஆசிரியையும் பள்ளிக்
குழந்தையும் ஓன்றரை ஆண்டு காலம் திருப்பூர் பகுதியில் ஒரு வாடகை வீட்டில்
கணவன் மனைவியாக வாழ்ந்திருக்கிறார்கள­். அப்பெண் நான்கு மாத
கர்ப்பிணியாகவும் அறியப்படுகிறாள். இதனை திரும்பத் திரும்ப காட்டும்
காட்சி ஊடகங்களால் விமர்சனத்துக்குள்ளான­ ஆசான்-மாணவன் என்கிற உன்னதமான
மதிக்கத்தக்க மாண்பு சமூகத்தில் எம்மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும்
என்பதை தெளிபடுத்துவதில் ஏன் அக்கரையின்மை ஏற்படுகிறது. சமூக வலைதளங்களான
பேஸ்புக்,ட்விட்டர், வலைப்பூவுலகமென அனைத்து தளங்களிலும் தாங்கள் மாணவக்
குழந்தைகளை நல்லமுறையில் சமூகத்திற்கு அடையாளப்படுத்துகிறோம­் என்று
காணொளி, புகைப்படங்களும், பதிவு கருத்துக்களும் இடும் ஆசரியர் பெருமக்கள்
இம்மாதிரியான தருணங்களில் ஓடி ஒளிந்து கொள்வது நியாயமாகப் படுகிறது.
இவ்வுலகில் மிக உயர்ந்த பணி டாக்டரோ,வக்கீலோ, இன்சினியரோ அல்ல அவர்களை
அவ்வாறு வளர்த்து உறுவாக்கி கல்வியால் அழகுபடுத்தி "இவன்(ள்) என் மாணவன்"
என பெருமையோடு பேசும் ஆசிரியர் பணிதான் உலகின் தலைசிறந்த பணியாக
இருக்கிறது. ஆனால் அந்த ஆசிரியர் பணியில் ஏற்படும் சில சமூக மாற்றங்களை
விமர்சனப்படுத்துகையி­ல் மட்டும் கள்ள மௌனம் காட்டுவது சரியான
அணுகுமுறையா? இதைவிட மிக வேடிக்கையானது என்னவென்றால்
அந்தமாணவர் ஒரு பனியன் கம்பெனியிலும்,ஆசிரிய­ை தனியார்பள்ளிக்கூடம்
ஒன்றிலும் வேலை பார்த்து வந்தது நியாயமான முறையில் குடும்பத்தை
நடத்தியிருக்கிறார்கள­் இதுவல்லவோ காதலென சிலாகிக்கப்படுகிறது.­
உண்மையில் அவர்கள் இருவரும் தங்கியிருந்த பகுதியில் வசிக்கும்
அக்கம்பக்கத்தினர் தாய் மகனாகவும், சகோதரி சகோதரராகவுமே கண்ணொட்டம்
கொண்டிருந்திருப்பார்­கள் என்பது மட்டும் உண்மை, இதற்குமேல் எழுத
முடியவில்லை எழுதவும் விருப்பமில்லை.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...