அன்றெனக்கு
என்ன தோன்றியதோ
அதை எழுத்தில்
வடித்து
என் கவிதையென
எடுத்து வருவேன்
ஆவலாய் உன்னிடத்தில்
அலட்சியமாய்
வாசித்து
இன்னும் ஆழமாய்
எழுதச் சொல்கிறாய்
சிந்தனைகள்
சிதறிவிட்டதாய்
கடிந்தும் கொள்கிறாய்
கவிதையில்
உயிர்ப்பில்லையென
உதடுகளை குவிக்கிறாய்
மூளையை கசக்கி
யோசித்து யோசித்து
எழுதிய கவிதைகள்
மொத்தத்தையும்
குப்பை மேடுகளாய்
மூலையில்
கூட்டிவிடுகிறேன்
கடைசியாய் மீந்துபோன
ஒரு காகிதத்தை
நீயாவது கடந்து போ!
இந்த கைதியின்
அறைகளை விட்டு
வெளியே!
ஒதுக்கப்பட்ட
குப்பைகளின்
அறைகூவல்
என் காதுகளிலும்
விழத்தான் செய்கிறது
ஒருவழியாய்
கையிலேந்தி
காட்ட வருகிறேன் உன்னிடத்தில்
கடைசி காகிதத்தை
ஆர்வமாய்
வாங்கி பார்த்து
பதிலாய்
நீயெழுதுகிறாய்
மௌனப்
புன்னகையோடு
கவிதை அழகென்றும்
காதல் சுகமென்றும்
எழுதப்படாத
வெள்ளை காகிதத்தில் என்மனத் தூய்மையை
சோதிக்கவா
இத்தனை சோதனைகள்
சிரித்து விடுகிறேன்
சந்தம் தேடுகிறேன்
சத்தமிடாமல்
உனை
கட்டியணைக்கிறேன்
எழுதுகிறோம்
இருவருமே சேர்ந்து
இரவின் மடியில்
இறக்காத கவிதைகளை
இன்னமும்,,,
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...

அற்புதம் அற்புதம்
ReplyDeleteமனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நன்றி ஐயா!
ReplyDelete