Sunday, July 19, 2020

ஒரு கோப்பை தேநீர்





சிறு தூறலில் தொடங்கி அடைமழைக்கு வெளியே
இடியும் மின்னலுமாக
வெட்டுண்டு கிடக்கும் வான்வெளியில் மையல் கொண்டு ...

கார்மேகம் ஆடையினை துறக்க
மழைக்கு பிறகான சிறு சிறு மழைத்துளிகள் மண்வாசத்தில்
உள்நுழைவது போல....

எல்லா பூக்களும் சாயம் போகாது
தன் இருப்பை தக்க வைக்கும்
ஒரு அழகிய பிரபஞ்சத்தின் தோற்றம்
இந்த  இயந்திர வாழ்வுதனை விழுங்குதல் கண்டு ....

கண்களில் வானவில் நிறங்களை பூசிக்கொண்டு 
இறுக்கி பிடித்திருந்த ஆன்மாவின்
அயர்ச்சி விரட்டி
தன் இயல்புக்குள் நுழைந்து
ஆத்மார்த்தமான மனம் போல 
மலர்ந்து மணம் வீசும்
நீல வானம் பார்த்தபடி
சாளரத்தில் எழுதிவைத்த அத்துணை கவிதைகளையும் நுகர முடியுமெனில்
அவசியமாய் கையில் ஏந்தி பிடிக்க
வேண்டியிருக்கிறது

ஒரு கோப்பை தேநீரை ...

1 comment:

  1. Very nice poem.
    Regards,
    Shalini Samuel
    https://poetrybyshalinisamuel.com/

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...