Sunday, August 02, 2015

"தாய்ப்பால்" - சிறுகதை



கொஞ்சம் கூட சலனமில்லாமல் எப்பொழுதும் போல அலார மணி அடித்தால் எழுந்து சோம்பல் முறிக்கும் மனிதர்களை போல பறவைகளின் கீச்சிடும் குரலை கேட்டுக்கொண்டே விழி திறக்கத் தொடங்கியிருந்தது விடியல்.

யாரிடத்திலும் ஏற்றத்தாழ்வுகளை காட்டுவதில்லை அது,,, அனைவருக்குமான பொதுவுடைமையாய் எழுந்திரு தோழா!! விடிகிறது காலை என்றழைக்கிறது விடியல். தினமும் தன் வேலையை தானே தொடங்கி வைக்கிறது அது,,, எல்லாரிடமும் ஏதோவொரு தொடர்பு வைத்திருக்கத்தான் செய்கிறது. துக்கமோ,மகிழ்சியோ அனைத்திலும் கலந்து கொண்டு ஆகப்பணியாற்றுதல் அதற்கு சிரமமாகப்படவில்லை,,,

அப்படியான விடியற்காலையில் எழுந்திருக்கலாமா? வேண்டாமா? எனும் அரைதூக்கத்திலும் தனக்கே உரித்தான அதிகார மொழியை அவிழ்த்து விடுகிறாள் கங்கா,,,

ஏய்!!! கலா,,, எங்கடி போய் தொலஞ்ச இங்க வாடி,,,
தோ!!! வந்துட்டன்மா,,, காபி பக்கத்துல வச்சிருக்கேன்,குளிக்­க வெந்நீரும் தயாரா கீதும்மா,டிபன் ரெடியா கீது,ஆபீசுக்கு போட்டுகினு போர துணிய கொடுத்தீங்கன்னா இஸ்திரி போட்டு வச்சிட்டுவேன்,,,கலாவின் பேச்சில் அப்படியொரு பணிவு,, பத்து வருடங்களாய் கங்காவின் வீட்டு வேலைக்காரி அவள்தான்,

ம்ம்ம்,,,எதுவுமே உனக்கு லேட்டுதான்,,மணி ஏழு ஆவுது, ஆறுமணிக்கெல்லாம் முடிச்சிட்டு என்ன எழுப்ப கூடாது? நைட்டு லேட்டா படுத்தது ஒனக்கு தெரியும்தானே,,, கங்காவின் அதிகாரம் பட்டுத்தெறித்தது.

இல்லம்மா,,,அதுவந்து,,,அதுவந்து,,,

என்னடி? வந்து,,,போயின்னிட்டு­,,, சீக்கிரமா என்ன எழுப்பனுமா இல்லையா?

இல்லமா,,, கொழந்த அழுதுச்சின்னு பால் குடுத்துட்டு இருந்தேன், அதான் வந்து எழுப்ப முடில,,,

என்னவோ நீ மட்டுந்தான் ஒலகத்துல கொழந்த பெத்துகிட்ட மாதிரி இன்னமும் அதுக்கு தாய்ப்பால் கொடுத்துட்டிருக்க, புட்டிப்பால அது கைல குடுத்து பழக வைடி, அப்பதான் நீயும் மத்த வேலயெல்லாம் சரியா செய்வே,,, சரி!சரி! ராஜாவும்,கொழந்தையும்­ எழுந்துட்டாங்களா?

இன்னம் இல்லம்மா ஐயா இன்னும் எழுந்திருக்கல ஆனா கொழந்த எழுந்து பசிக்கி கத்துச்சி,,, புட்டிபால் போட்டு பக்கத்துலேயே இருந்து குடுத்தேன்,குடிச்சிட­்டு தூங்கறாம்மா,,,

ம்ம்ம்! இந்தா இது இன்னைக்கு போட்டும்போர ட்ரஸ்ஸூ போய் அயர்ன் பண்ணிவையி நா அவர எழுப்பிட்டு , குளிச்சிட்டு வரேன்,,,

சரிங்கம்மா,,, துணியை வாங்கிக்கொண்டு நகர்ந்தாள் கலா.

சோம்பலை முறித்துக்கொண்டெழுந்­து ராஜாவின் பெட்ரூமுக்கு சென்றாள் கங்கா,,,

என்னங்க! என்னங்க! எழுந்திருங்க,,, மணி ஏழரையாவது இன்னுமா தூங்குவிங்க எழுந்திருங்க ஆபீஸூக்கு லேட்டாச்சி,,,

என்னடி,,, அதுக்குள்ளவா விடிஞ்சிடிச்சி,,, குழந்த என்ன செய்ரா பால் குடிச்சாளா,, நைட்டு ஃபுல்லா தூங்கவே விடலடி,,, எழுந்தமர்ந்து குழந்தை படுத்திருந்த பக்கத்தில் திரும்பி அதன் வயிற்றை தடவிக்கொண்டே கேட்டார் ராஜா தன் மனைவியினடத்தில்,,,

ம்க்கும்,,, எங்கூட படுத்து தூங்க மாட்டேன்னு அடம்புடிச்சி அப்பா கூட தான் படுப்பேன்னுட்டாளே அதுக்கு அனுபவிங்க,,, கால்லே எழுந்து கொழந்த அழுதாளாம் கலா புட்டிபாலு குடுத்து தூங்க வச்சிருக்கா,, நீங்க போய் ரெடியாவுங்க, நான் கொழந்தகூட கொஞ்ச நேரம் இருந்துட்டு ரெடியாவுரேன்,சீக்கிர­ம் போய் ரெடியாவுங்க இப்பவே லேட்டாகிடுச்சி,, குழந்தையை கொஞ்சிக்கொண்டிருந்த ராஜாவை அவசரமாக கிளப்பினாள் கங்கா,,

அரைமணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் அழைத்தாள் கலாவை,,

ஏய்!!! கலா,,, இன்னும் என்னடி செய்ர சீக்கிரம் வா! இங்க,,,

அடித்து பிடித்து ஓடிவந்த கலா கங்காவின் அருகில் வந்து என்னம்மா,,, என்றாள் முன்பிருந்த அதே பவ்யத்தோடு,,,

எல்லா வேலயும் முடிஞ்சிடுச்சா,,,சார­் ஆபிஸ் கெளம்ப எல்லாத்தையும் ரெடி செஞ்சிட்டியாடி,,, அப்புரம் அவரோட கோவத்துக்கு ஆளாய்டாதே மனுஷன் கோவப்பட்டா எப்படி நடந்துப்பாருனு தெரியும்ல,,,

எல்லா வேலையும் முடிச்சிட்டேன்மா,,,

ம்ம்ம்!!! பக்கத்துலேர்ந்து கொழந்தைய பத்திரமா பாத்துக்கோ நான் ஆபீஸுக்கு கெளம்ப ரெடியாய்ட்டு வந்துட்ரேன் என்னா,,,

சரிம்மா நீங்க போய் கெளம்புங்க நான் கொழந்தைய பாத்துகரேன்,,,

கட்டில் மெத்தையிலிருந்து எழுந்து குழந்தைக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு அதன் கண்ணத்தை லேசாக கிள்ளிவிட்டு வெளியேறினாள் கங்கா ஆபீஸ் கிளம்புவதற்காக,,,
கட்டிலுக்கு பக்கத்தில் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை அப்படியே அலக்காக தூக்கிக்கொண்டு தன் குழந்தை உறங்கிக்கொண்டிருந்த வரான்தாவுக்கு வந்தாள் கங்கா,,, உற்றுப்பார்த்தாள் தன் குழந்தையை எந்த உலகச் சிந்தனையில் மூழ்கி கிடக்கிறதோ குழந்தை,,, அதன் ஆனந்த தூக்கத்தை ரசித்தபடியே அருகில் அமர்ந்து எஜமானியின் குழந்தையை தன் மடியில் கிடத்தினாள்,,,

நதியின் அரவணைப்பு மழை நீருக்கு மட்டுமே தெரியும் அதுபோல் யாருமற்ற கலாவிற்கு அடைகலம் கொடுத்தது என்னவோ கங்காதான், முதல் முறையாக அவளை தன் வீட்டு வாசலில் பார்த்தாளவள், ஆங்காங்கே கிழந்த ஆடை கையில் பச்சிளம் குழந்தை பார்க்கவே பரிதாபமாய் இருந்தாள் கலா,,,

என்னம்மா வேணும்
ஏதாவது துணிமணி,காசு வேணுமா ? காசல்லாம் இல்ல பழஞ்சோறு கிடக்கு வீட்ல இரு எடுத்துட்டு வரேன் குடிச்சிட்டு போ! என்று கூறியவாறு சற்றே திரும்பினாள் கங்கா,,,

காசல்லாம் வேணாம்மா
எதாவது வூட்டுவேல கீட்டுவேலயிருந்தா குடுங்கம்மா செஞ்சிட்டு அப்புரமா பழஞ்சோறு வாங்கிக்கிறேன்,,, எம்புருஷன் குடிச்சி கொடலு வெந்து செத்து பூட்டாரும்மா,,, எனக்குன்னு ஆருமில்ல கைகொழந்தையோட நெக்கதியா நிக்கரேம்மா,,, வேல,,, என இழுத்தாள் கலா,,,

அவள் மீது மிகுந்த பரிதாபப்பட்டு சரி உன் பேருன்னா? வூடு எங்க இருக்கு? கேட்டாள் கங்கா,,,

எம்பேரு கலா,
இங்கதாம்மா பக்கத்துல ஆறாவது முக்குட்டு குப்பத்தாண்ட வூடும்மா,,,

சரி ஒன்ன பார்த்தா பாவமா இருக்கு வேல குடுக்கறேன், ஆனா எங்கூட்டோட தங்கனும்,ஒன்ன எப்படி நான் நம்புரது,,

எல்லா வேலயும் நல்லா செய்வேன்மா,கையும் வாக்கும் சுத்தம்மா, நம்பிக்க இல்லனா குப்பத்தாண்ட வந்து கேட்டுபாருங்கம்மா,,,

சரி வா! போலாம் பக்கத்துலதானே இருக்கு அந்த இடம், பத்து நிமிஷத்துல போய்டலாம்லே,,,

பக்கத்துலதான்மா இருக்கு நடந்து போனாலே அஞ்சி நிமிஷம் கூட ஆகாதும்மா,,,

சரி அப்ப வா போலாம்! கங்காவும்,கலாவும் நடக்கத்தொடங்கினார்கள­். கலா சொன்னதுபோல் ஐந்து நிமிடங்கள் கூட ஆகவில்லை இருவரும் குப்பத்தை தொட்டார்கள்.

கலா வீட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தாள் கங்கா,,, ஒருவர் கூட அவளைப்பற்றி தவறாகவோ,குறையாகவோ கூறவில்லை மாறாக அவள் மீது மிகுந்த பரிதாபப்பட்டார்கள்.

ஒருவழியாக விசாரித்துவிட்டு கலாவை அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்கு வந்தாள் கங்கா,,,

என்னங்க,,,வீட்டு வேலைக்கு ஆள் கேட்டு நீங்களுந்தான் தேட்ரேன்னு சொல்லி பேப்பர்லல்லாம் ஆஃட் கொடுத்தீங்களே,, அதெல்லாம் தேவல,ஒங்களுக்கும் சிரமமில்லாம நானே விசாரிச்சி அழைச்சிட்டு வந்துட்டேன்,,, இவ பேரு கலா,பக்கத்துலதான் இருக்கா,பாவம் யாருமேயில்ல,கையில வேற கொழந்த வச்சிருந்தா,அக்கம்பக­்கத்துல கூட நல்லா விசாரிச்சிட்டேன்,,,ந­ல்லபடியாதான் சொல்ராங்க,அவளும் வீட்டோடயே இருக்கர்தாவும் சொல்லிட்டா,என்னங்க சொல்ரீங்க நீங்க,,, கங்கா தன் கனவனிடம் கூற அருகில் கலா குழந்தையோடு நின்றிருந்தாள் ராஜாவிற்கு வணக்கம் செலுத்திவிட்டு,,,

அதான் விசாரிச்சிட்டேன்னு சொல்ரியே உன் இஷ்டம் ,,இந்தாம்மா கலா வீட்லேயே இருந்து உன் கொழந்தையோட எங்க கொழந்தையையும் நல்லா பாத்துக்க,நாங்க ரெண்டு பேரும் வேலைக்கி போய் சாய்ங்காலம் அஞ்சி மணிக்கிதான் வருவோம், இவ வேல செய்ர இடம் பக்கத்துலேயே இருக்கர்தால மத்தியானத்துக்கு சாப்ட வந்து ரெண்டு மணிக்கு வேலைக்கு திரும்பிடுவா என்னா,,, இதுக்கு முன்னாடி எங்கம்மா கொழந்தைய பாத்துகிச்சி,ஊர்ல அவசரமா வேல இருக்கர்தால கெளம்பி போயிருக்காங்க,அவங்க வந்த ஒடனே கொழந்தைய அவங்க கிட்ட குடுத்துட்டு அதுக்கப்பரம் நீ சிரமமில்லாம மத்த வேலைகள பார்க்கலாம் ஓகேவா,,,சொல்லி முடித்தார் கங்காவின் கனவர் ராஜா.

சரிங்க எஜமான் அப்டியே செய்ரேன்,,,

மொதல்ல ஏதாவது சாப்டுட்டு அப்புரம் வூட்டு வேலய பாரு,,, கங்கா அவள உள்ள அழைச்சிட்டு போய் உன் பழைய துணிய போட்டுக்க குடு,,,பாவம் கைக்கொழந்தையோட இருக்கா,,,

இப்படியாகத்தான் கலா அந்த வீட்டிற்கு வேலைக்காரிமாக வந்தாள் , கோபம் இருக்கும் இடத்தில் குணமிருக்கும் என்பது போல,கோபத்தோடு கொஞ்சம் அதிகாரம் செய்தாலும் அவர்களிடத்தில் காலாவின் மீது அன்பு நிரம்பியிருந்தது. அதற்குக் காரணம் அவளின் நடத்தை,,, தான் சரியானதொரு ஆளை தேர்ந்தெடுத்துள்ளோம்­ என்கிற பெருமை எப்போதும் கங்காவிற்கு உண்டு.

கங்காவும்,ராஜாவும் காதலித்து திருமணம் செய்தவர்கள் . சிற்சில தடைகளுக்குப் பிறகு இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியிருந்தது,இருவரும­ே வேலைக்குச் செல்பவர்கள்,ஆகவே பிறந்த குழந்தையை பார்த்துக்கொள்வதற்கா­க ஊரிலிருந்து தன் அம்மாவை அழைத்து வந்திருந்தான் ராஜா.கங்கா நவநாகரீக கலாச்சாரத்தில் ஊறிப்போயிருந்தாள் தனது அழகிற்கு முக்கியத்துவம் அளிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தியிருந்த காரணத்தால் தாய்ப்பால் கொடுத்தால் தன்னழகு கெட்டுவிடுமென்று நம்பியிருந்தாள் . ஆகவே தன்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தியிருந்தாள். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்படி அவள் மாமியார் எவ்வளவோ வற்புறுத்தியும் அவள் கேட்கவில்லை,வேறு வழியின்றி குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்து பழக்கப்படுத்தினாள் கங்காவின் மாமியார்.

மணி சரியாய் ஒன்பதை தொட்டுக்கொண்டிருக்க ராஜாவும்,கங்காவும் அவரவர் வேலைக்குச் செல்ல கிளம்பிக்கொண்டிருந்த­ார்கள். அந்த சமயத்தில் கலாவின் குழந்தை வீல்ல்,,,என்று கத்த உடனே கங்காவின் குழந்தையை ஷோபாவில் பத்திரமாய் கிடத்திவிட்டு தன்குழந்தையை எடுத்து மடியில் கிடத்தி அதற்கு தாய்ப்பாலை ஊட்டிக்கொண்டே காங்காவின் குழந்தையையும் தட்டிக்கொண்டிருந்தாள்.

ஏற்கனவே தாமதமாகிவிட்டமையால் ராஜா அவசர அவசரமாக கிளம்பி கங்காவிடம் விடைபெற்றுக்கொண்டு, கலா!!! கொழந்தைய பத்திரமா பாத்துக்கோ,,, என்றுச் சொல்லிவிட்டு நகர்ந்தார்.வாசலில் அவர் தலை மறையும் வரை கங்கா வழியனுப்பி நின்றிருந்தாள். அவளுக்கு ஒன்பதரை மணிக்குத்தான் அலுவலகம் என்பதால் அரை மணிநேரம் குழைந்தையிடம் கொஞ்சுவதற்காக ஒன்பது மணிக்கே கிளம்பியிருந்தாள். ஷோபாவில் அயர்ந்து தூக்கிக்கொண்டிருந்த குழந்தையின் அருகில் அவளும் வந்தமர்ந்து குழந்தைக்கொரு முத்தம் கொடுத்துவிட்டு அதன் உடல் முழுவதையும் தடவி கொடுத்துக்கொண்டே கலாவிடம் பேச்சுகொடுத்தாள்.

ஏன்டிம்மா கலா நீ!
ரொம்ப அழகா , கலையா இருந்தாலும் உம் முகத்துல எல்லாம் கோடு விழுந்து பார்க்கவே சோகையா இருக்கே இதுல கொழந்தைக்கு வேற தாய்ப்பால் கொடுத்து ஏன்டிம்மா உன் அழக நீயே கெடுத்துக்கர, அதுக்கு இப்பவே குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்து பழக்கப்படுத்தினேனா,,­, உன் அழகும் அப்படியே இருக்கும், அதுவுமில்லாம புட்டிப்பால் குடிக்கிற சமயத்துல வேற வேல ஏதாவது பார்க்கலாம்ல,,, பாலுக்கா பஞ்சம் நம்ம வூட்ல உன் குழந்தைக்கும் சேர்த்து பால் வாங்கிட்டா போச்சி,,,

அழகு என்னம்மா அழகு அது கெடுக்குது கழுத கொழந்தையோட அறிவு,வளர்ச்சி விடவா நமக்கு அழகு முக்கியம்,,,
பாலோட தன்ம ஒன்னா இருந்தாலும் நம்ம ரத்தத்துல சொரக்குர பால் கொடுத்தா தாம்மா குழந்தைக்கு தாய்பாசம்னா என்னான்னு தெரியும், அப்பதா அது நாளைக்கி வளந்து நமக்கு தாயா புள்ளையா இருக்கும், உசுர கொடுத்து ரெண்டாவது தடவைய பொழச்சி மறுசென்மம் எடுத்து பெத்த கொழைந்தைக்கு தாயோட அரும தெரியனும்னா தாய்ப்பாலத் தவிர வெற எதுலாலேலும் கொடுக்க முடியாதும்மா,,,

தாய்ப்பாலுன்ரது வெறும் பாலில்லம்மா,,அது கொந்தைக்கு நாம குடுக்குற ரத்தம், இப்பல்லாம் ரத்த தானம் செய்ராங்களே! அதெல்லாம் எதுக்கும்மா,,, ஒரு உசுர காப்பாத்ததானே,,, அதேமாதிரி நம்ம கொழந்தைக்கு நாம குடுக்குற தாய்ப்பாலும் ரத்த தானம்தான்மா,,, ஆனா அது தானமில்ல நம்மளோட கடமம்மா,,, எனக்கு பொறந்த இந்த கொழைந்தைக்கு எந்த நோயும் வந்துடாம, அப்டியே ஏதாவது அதுஇதுனு வந்துபுட்டாகூட தாய்ப்பால தவர வேற எதுவும் கொழந்தய காப்பாத்தாதும்மா,,, நான் என் அயகுக்காக பார்த்தா கொழந்தையோட எதிர்காலமே பாழாய்டும்,,, கலா சொல்லச்சொல்ல அதை கேட்டுக்கொண்டிருந்த கங்கா அழுதே விட்டாள், தான் இவ்வளவுபெரிய தவறையா செய்துக்கொண்டிருக்கி­றோம் என நினைத்த தருணத்தில் அவள் நெஞ்சம் மிகப்பெருமதிர்வாய் வெடிக்கத் தொடங்கியது,,, இனியும் தாமதிக்கக்கூடாது நமக்கு அழகை விட குழந்தையின் அறிவும்,வளர்ச்சியுமே­ முக்கியமென அவள் முடிவுசெய்து விட்டபடையாலும், தன் குழந்தைக்கு உண்மையானத் தாயாக இருக்க வேண்டுமெனில் தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டுமென ஒரு ஏழைத்தாய் உணர்த்திவிட்டாள் என்பது அவளின் மனதுக்கு நன்றாகத் தெரிந்து விட்டது.

அந்த கணத்திலேயே கொஞ்சமும் தாமதிக்காமல் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கத் தயாரானாள்
கங்கா,,, அலுவலகத்திற்கு தாமதமாகிறது என்பதைக்கூட மறந்து போனாள் அவள்,,, 

தன் குழந்தைக்கு தாய்ப்பாலை ஊட்டுகையில் ஓர் இனம்புரியாத உணர்வின்பத்தை பெற்றிருந்தாள் அவள். அவ்வுணர்வை அவளைத்தவிர வேறு யாராலும் வர்ணிக்க முடியாது என்பது அப்போது அவளுக்குத் தெரிந்தது . தானொரு உண்மையானத் தாயாக மாறியிருப்தை அவள் மனது அவளுக்கே சொல்ல,,தான் பூமித்தாயின் மடியில் தவழ்ந்து தாய்ப்பால் அருந்துவதாக யாரிடமாவது சொல்ல துடித்துக்கொண்டிருந்தாள்,,,

அன்று மதியம் அலுவலக கோப்புக்கட்டு ஒன்றை எடுக்க மதியமே வீட்டுக்கு வந்திருந்தார் ராஜா.

எசமான், என்ன மத்தியானத்துலேயே வந்துட்டீங்க,,, சாப்பாடு எடுத்து வைக்கவா? கேட்டாள் கங்கா,

ஏம்மா கலா,,, கொழந்த எங்க? ஒரு ஆபிஸ்பைல வச்சிட்டு போய்ட்டேன் அதான் எடுத்துட்டுபோக வந்தேன்,,, கங்கா! வீட்லயா இருக்கா?

கொழந்த அம்மாகிட்ட இருக்கு எசமான்,, அம்மா கொழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துட்டு இருக்காங்க,,,

கேட்டதும் ராஜா ஒரு நிமிடம் ஆச்சர்யப்பட்டு போனான்,என்னது தாய்ப்பால் கொடுக்கறாளா? கண்கலங்கி நின்ற ராஜா மீண்டும் பேசத் தொடங்கினார்,,,

ஏம்மா! கலா,,, ஒனக்கு நான் கடன்பட்டிருக்கேன் என் அம்மா எவ்வளவோ சொல்லியும் கங்கா தாய்ப்பால் கொடுக்க மறுத்துட்டா,,, ஆனா நீ வந்த ஒடனே அவள தாய்ப்பால கொடுக்க வச்சி கொழந்தைய காப்பாத்திட்டேம்மா,,­, ஒனக்கு எப்படி நன்றி சொல்லரதுனே தெரில,,,

என்னங்கய்யா பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்ரீங்க ஒங்க உப்ப சாப்டு வளர்ரேன் இது கூட செய்லனா நான் மனுஷியில்லங்க,,, அப்போதும் அவளிடத்தில் பணிவு மலிவாய் எங்கும் நிரம்பி இருந்தது.

ராஜாவுக்கும், கங்காவுக்கும் கலா,,, இன்னொரு தாயாகத் தெரிந்தாள் .





முற்றும்.


(ஆகஸ்ட் 1 உலக தாய்ப்பால் தினம், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து அதன் வளர்ச்சிக்கும்,அறிவுக்கும் காரணமாய் இருப்போம் என உறுதி எடுக்க தாய்மார்கள் முன்வர வேண்டும்).

4 comments:

  1. விழிப்புணர்வு கதையும் கூட...
    http://www.thamizhmozhi.net

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...