Saturday, January 30, 2016

அரசியல் சுதந்திரம் பற்றி லெனின்

"சமூக ஜனநாயகவாதிகளின்(கம்யூனிஸ்டுகளின்) முதல் கோரிக்கையும் முதன்மையான கோரிக்கையும் அதுதான். "அரசியல் சுதந்திரம் வேண்டும்" என்று அவர்கள் எழுப்பும் முதல் கோரிக்கையின் பொருள் இது தான்:- அரசியல் சுதந்திரம், நாடாளுமன்றத்துக்கு சுதந்திரமான தேர்தல், கூட்டம்கூடும் உரிமை, பத்திரிகை சுதந்திரம் ஆகியவை மட்டும் உழைக்கும் மக்களை அவர்கள் சந்திக்கும் வறுமையில் இருந்தும், அடங்கு முறையில் இருந்தும் உடனடியாக விடுவித்து விடாது என்பதை நாம் அறிவோம். பணக்காரர்களின் லாபத்துக்காக...

Wednesday, January 27, 2016

பத்மஸ்ரீ நாப்கின் உற்பத்தியாளன்

வாழ்த்துதலை ஒரு பெட்டகத்தினுள் அடைத்துவிட்டு வெற்றுக் காரிய நிழல்களால் நம்மையும் சேர்த்து அதனுள் பூட்டிவைக்க மனம் விரும்பவில்லை, அனாலும் அதற்கான தகுதி அலசலுக்கு எவ்வித அடக்கமும் தேவையில்லை என்றே உரைக்கப்படுகிறது ஓர் சமூக உழைப்பிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதால்,,, இது நிகழ்ந்திருக்கலாம் அல்லது நிகழ்த்தியிருக்கலாம்­ என்கிற வெற்று பேச்சிற்கு அப்பால் நிகழ்த்திவிட்ட ஒரு சாதனையாளனுக்கு அதுவும் சமூகத்தின் தயக்கத்தில் புழுங்கிப்போயிருந்த மற்றும் புழக்கமில்லாத...

Friday, January 15, 2016

அரசியல் பொருளாதார நெருக்கடியைப் பற்றிய மார்க்சின் கோட்பாடு

("கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை"யின் முதல் அத்தியாயம் மற்றும் "கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்" என்ற நூலினில்காணப்படும் கருத்துக்களைக் கொண்டு மார்க்சிய பொருளாதார நெருக்கடியின் கோட்பாட்டை எளிய அறிமுகமாகத் தொகுக்கப்பட்டுள்ளது)மனித வாழ்வுக்கு ஆதாரமான சாதனங்களின் உற்பத்தியும், உற்பத்திக்கு அடுத்தபடியாக, உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் பரிவர்த்தனையுமே சமூகக் கட்டமைப்பு முழுமைக்குமான அடித்தளம் ஆகும். வரலாற்றில் உருவாகி வந்த ஒவ்வொரு சமுதாயத்திலும்,...

முதலாளித்துவ சமூக உற்பத்தி முறை

முதலாளித்துவத்தில் உழைப்புச் சக்திகள்நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சியிலிருந்து தோன்றிய, புதிய உற்பத்தி முறையே முதலாளித்துவமாகும். நிலப்பிரபுத்துவத்தின் ஊடே தோன்றிய சிறுபண்ட உற்பத்தியாளர்கள், மற்றும் நிலப்பிரபுத்துவத்தால் தூக்கி எறியப்பட்ட, அதவாது நகரத்தை நோக்கி துரத்தப்பட்ட வேலையற்ற பட்டாளம் ஆகியவற்றில் முதலாளித்துவத்தின் தொடக்கம் அடங்கியிருக்கிறது. அதாவது முதலாளித்துவம் தோன்றுவதற்கு முக்கியமான இரண்டு நிபந்தனைகள் இருந்தன.ஒன்று சிலரது கைகளில்...

சல்லிக்கட்டு மூடி மறைக்கிறது சாதி ஆதிக்கத்தை

#சல்லிக்கட்டு தமிழக அரசியல் பார்வைகள் கொஞ்சம் வித்தியாசமானது. 2016 தேர்தலைசந்திக்கின்ற வேளையில் ஆளும் அதிமுக அதிகார வர்க்கத்தின் ஊழல், நீர்வாகச்சீர்கேடுகளை பற்றியும் மதுவிலக்கு போராட்டங்களை பற்றியும் , வெள்ளத்தால்பாதிப்படைந்த மக்களின் உரிமைக்காக இயற்கையை பேணிகாப்பது பற்றியும்எழுகின்ற அல்லது எழுப்பப்படுகின்ற பல்வேறு போராட்டங்களைதிசைதிருப்புகின்றன மற்றவைகளான சம்பவங்களென்று புலம்புவதுண்டு. கடந்தநவம்பர் மாத இறுதியில் தொடங்கி டிசம்பர் முதல்...

Thursday, January 14, 2016

நான் தாத்தா செல்லம்

கெஜிர் காரம் கமர்கட்டு தேன்மிட்டாய் கடலைமிட்டாய் எல்லாம் வாங்கி அழுக்கேறிய வேட்டியில் இறுக்கமாய் கட்டி எடுத்துவருவார் எனக்காக தாத்தா பெயர்சொல்லி அழைக்கமாட்டார் பட்டுக்குட்டி எனும் செல்லப்பெயரெனக்கு எங்கோ தொலைவில் வருவார் இங்கிருந்தே ஓடத் தொடங்குவேன் அவ்வளவு பிடிக்கும் தாத்தாவையும் வாங்கி வரும் தீனிகளையும் தோளில் எனை சுமந்து கொண்டு களைப்பேதுமின்றி திண்ணையில் தான் வந்தமருவார் தன்மொழி மறந்து என்மொழியோடு கொஞ்சி அகமகிழ்ந்திடுவார் இடுப்பில் என்னது முடுக்காய்...

Wednesday, January 13, 2016

மரத்திலோர் தூளி

ஆற்றோர மரக்கிளையில் ஆட மறந்து அழுக்குப் புழுதியால் அல்லோலப்பட்டு பிணமாகிப்போன மரத்து வேருக்கு மூடும் வெள்ளை போர்வையானது என்னை தூக்கிச் சுமந்த அந்த வண்ணத் தூளி பார்த்தவுடனே மனம் பொங்கி எழ அழுதுக்கொண்டே அள்ளி அணைத்திடவே அருகினில் செல்கிறேன் துயரத்திலும் தூளிக்கு நான் அடையாளமாய் அந்நியன் அவனில்லை ஆளாக்கி பார்த்த முகம் அது மறந்தும் போகவில்லை எப்படி அழைப்பதவனை என்றே சந்தேகத்துடன் என் பக்கமே பார்வை பதிக்கிறது தூளி நெருங்க நெருங்க தூளியில் வெளிபடுகிறது...

Tuesday, January 12, 2016

தோழர் ஜீவா அவர்களின் கம்யூனிச தொடக்கமும், காந்திய எதிர்ப்பும்,

கம்யூனிஸ்ட் மாபெரும் தமிழர் தலைவர் ஜீவா அவர்கள் இளமை காலத்தில் காந்திய நிர்மாணத் திட்டங்களின் மேல் மிகுந்த பற்று கொண்டமையால் காந்திய இயக்கச் செயல்பாடுகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி, காந்திய வழி பரப்புரை,மற்றும் ஆசிரமங்களை உறுவாக்குதலென இருந்தார். 1922 ல் எட்டாவது படிக்கின்ற போதே ஜீவா காந்தியின் ஒரு மேடைப் பேச்சைக் கேட்டு, அந்த பேச்சின் தாக்கத்தால் காந்தியத்தை நேசித்தார். அதுவரையில் தீவிர காந்தியவாதியாக...

(ஆண்)டவனின் குறி!கள்

உலகம் இயங்குதல் வேண்டுமெனில் யோனிகள் திறந்தே வைத்திருக்க வேண்டுமாம் கட்டளை பிறப்பித்தும் கட்டுகளை இழுத்தும் இறுக்கியும் ஏகபோகமாய் புணர்ந்தனுபவிக்கும் ஆணென்ற அரசப் பெருமகனார்கள் அப்படித்தான் கற்பிதம் உரைக்கிறார்கள் உலகிற்கு கற்பெனும் வலையத்திற்குள் அரளிவிதையரைத்து பூசியபடியே பூலான் தேவையை புணர்ந்தவர்களின் விரைத்த குறியெனும் உறுப்புகள் கயர்லாஞ்சியை சுற்றிவளைத்து மணிப்பூரில் எல்லை விரித்து டெல்லியை தலைமையாக்கி சிவகாசி சிறுமியிடம் மொத்தமாய் இறக்குகிறார்கள்...

Monday, January 11, 2016

தோழர் ஜீவா வை குழந்தைகளிடத்தில் கற்பிக்க வேண்டும்

தமிழ்ச் சமூகத்தில் நமது வருங்கால சந்ததிகள் ஏதுமற்ற ஓர் வெற்றுடம்பாவே வளர்த்தெடுக்கப்படுகி­றார்கள். சரியான ஊட்டச்சத்து இல்லை, சரியான உடற்பயிற்சி இல்லை, புத்தக வாசிப்பு பழக்கம் அறவேயில்லை, நமது குழந்தையைகளை வெறும் இயந்திரபொருளாகவே நாம் மாற்றி வைத்திருக்கிறோம். பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகள் விளையாடுவதை தடை செய்கிறார்கள். அதைவிட ஒருபடி மேலே சென்று தொல்லைகள் தருகிறார்கள் குழந்தைகள் எனும் குற்றசாட்டை அவர்களின் மீதே சுமத்தி அத்தொல்லையிலிருத்து விடுபட...

போதும்,,,

சுத்தமாய் சுரண்டி எடுத்துக் கொண்டு தெருவீதியில் ஏங்கோ தூக்கி எறிந்துவிட எச்சங்களாய் ஒட்டிக்கொண்ட எலும்புக்கூடுகளிலும் அரசியல் புரிவதை நிறுத்துங்களேன் போதும்,,, வலி தாங்க முடியவில்லை உயிர்த் தோ(ழி)ழன் என வந்து ஏதோ மனக்கசப்பில் பழகுதல் தடைபட பின்னால் நின்றுக்கொண்டே பாவி இவ(ளெ)னென்று எரிதழலில் நட்பை பொசுக்குவதை நிறுத்துங்களேன் போதும்,,, வலி தாங்க முடியவில்லை காதலின் இறுக்கம் கழட்டி விடுதல் எனும் புதுமொழியோடு இரக்கமற்ற மனசாட்சி வேண்டும் நமக்கது இயல்பாகவே...

Saturday, January 09, 2016

எனக்கு நானே எழுதும் கடிதம்

"நான்" என்பது எதுவரையில் நீளுமோ தெரியவில்லை எனக்கு,,, ஆனாலும் முடிவென்பது இருப்பதாலே அது தோன்ற எழுதுகிறேன் கடிதமொன்றை எனக்கு நானே எழுதும் கடிதமெனும் தலைப்பிட்டு,,, தலைப்பை கண்டு நிச்சயம் சிரிப்பாய் சிரித்துவிடு ஆனாலும் ஒன்று எப்படி அழைப்பது உன்னை,,, நண்பனென்றா தோழரென்றா பங்கு என்றா மச்சி என்றா மாமா என்றா பாஸ் என்றா ஜி என்றா,,, எதில் நீயிருக்கிறாய் பதில் சொல்லிவிட்டு பிறகு சிரித்துவிடேன்,,, கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும் என் கடிதம் உனக்கு வலி பொறுத்துக்கொள்...

Friday, January 08, 2016

சின்னதாய் சினுங்கும் காதல்

அனிச்சையாக பார்த்தேன் அவளை என்னையே முறைத்து பார்க்கிறாள் நீண்ட நேரம் ரசித்துவிட்டேனாம் அவளை,,, _______ திரும்ப திரும்ப கழுத்து வலிக்கிறது திசைகளில் அவள் முகமென திரும்பி திரும்பி பார்க்கிறேன் பிரமையால்,,, _______ கானல் நீருக்கு தூதுபோன மரங்களை அழைக்கிறேன் என் காதலுக்கும் தூதனுப்ப அவள் முகம் நிரம்பிய சாலையில் என் பயணம் _______ பூக்களை பறிக்காமல் அப்படியே ரசித்துவிடுகிறேன் அவனிடம் சொன்ன பறிப்பது பிடிக்காதெனும் ஒரு பொய்யினால்,,, _______ நிஜமாக இது காதலா...

Thursday, January 07, 2016

ஆமாம்சாமி அணுகுண்டுகள்

கற்காலம் செதுக்கிய கல்லறையில் நிகழ்காலம் வீழ்ந்து கிடக்க எதிர்காலம் காத்திருக்கிறது மரணத்தின் வருகைக்காக கருவை அழிக்கவும் அணுவை பிரயோகித்து அவசரமாய் மேலெழும் புகை மண்டல யாகத்தீயை வளர்த்தார்கள் அணுவிஞ்ஞானி எனும் பெயரோடு குழந்தைகளும் தாய்மார்களும் தகப்பன்களும் துடிதுடித்து போனார்கள் தூது போனது தவறென்று அறியாமல் வீசப்பட்ட அணுகுண்டுகளின் முகத்தில் தெறிக்கிறது ஏகபோகமாய் சிரிப்புகள் பக்கத்தில் மனிதனை விழுங்கும் கண்கொத்தி பாம்புகள் அலறுகிறது அதன் தவிப்பிலேயே...

தூக்கம் விற்ற இரவுகள்

தூக்கம் விற்ற இரவுகள் முழுக்க எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன் கவிதைகளை எனது எந்தக் கவிதைகளும் இரவில் தூங்கிக் கழித்ததாய் புலப்படவில்லை புரண்டு புரண்டு தேய்ந்து போன தரைகளில் பாயும் தலையணையும் எழுதிய கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கையில் வாத்தியங்களை முழங்கிக்கொண்டு முன்றாம் பிறையினை ரசித்து விடுகிறதென் எழுதுகோல் கர்வம் கொஞ்சம் கூடுதலாக கண்ணிமைகளை மூடாத முகத்திற்கு முன்னால் எழுந்தாடுகிறது எழுதுகோல் பரிதாபமாக நான் அதனிடத்தில் கேட்கிறேன் இப்படி குடிக்கிறாயே...

Wednesday, January 06, 2016

அவள் கட(த்தி)ந்து போகிறாள்

இதயமானது இயல்பான துடிப்பிலிருந்து சற்றே விலகிவிட கண் சிமிட்டல்கள் கடன் வாங்கிக் கொண்டிருந்தன அதீத எண்ணிக்கையிலான உறுத்தல்களை இடம் மாறி பயணிக்கிறது ரத்த நாளங்கள் அதிவேகமாய் நரம்புகள் மட்டும் இழுத்துக் கொள்ளவில்லை இருக்கும் பச்சைகள் அப்படியே வியப்பின் குறியீடுகளாய் அனல் காற்றிலும் உதடுகளின் புரியாத மொழியினை பற்கள் தட்டச்சு அடிக்க அதன் வேகம் குதிரைத்திறனை பின்னுக்குத்தள்ளி செவியில் ஏதோ இசை நுழைய நாசி துளைத்த வாசத்தை உணர்கையில்...

Tuesday, January 05, 2016

இனியவளே உனக்காக

என்னில் ஆசைகள் பல உண்டு இனியவளே அதை உன்னில் செலுத்திவிட எண்ணம் இருந்ததில்லை நான் சொல்வதை மட்டுமே நீ செய்ய வேண்டும் என் அன்பை மட்டுமே நீ யாசிக்க வேண்டும் என் பெயரை மட்டுமே நீ வாசிக்க வேண்டும் என் காதலை மட்டுமே நீ தொழ வேண்டும் இன்னும்,,, இன்னும்,,, நீள்கிறதென் ஆசைகள் முடிவிலா ஒரு பயணத்தை போல சுயமாய் சுதந்திரமாய் வானில் சிறகடித்துப் பறக்க உனக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன எனது ஆசைகள் முளைத்த இடத்தில் பல சிலுவைகள் தோன்றி உரைத்தன அதுவொன்றும் ஆசையில்லை...

Monday, January 04, 2016

மிருகமாகிய நான்

கடுகின் நுனியில் வேர் திறக்கும் ஒற்றைத் தண்டுகளை ஒவ்வொன்றாக உடைத்து விடுவேனோ வேர்த்திருக்கும் முகத்தில் விளங்காத ஆத்திரங்கள் சுதாரித்துக் கொண்டு சுவற்றோடு ஒட்டிநிற்கையில் பல்லிகளும் அலறுகின்றன நமக்கான நரக பாதகன் இவனென்று பட்டப்பெயரும் பக்கத்தில் என் பெயரும் பைத்தியத் தன்மையா? பிணம் தின்னும் வெறியா? பற்றி எரியும் கோபமா? எனக்கு நானே அலசிவிடுகிறேன் அவசியமற்றதாகிறது வாழ்க்கை மிருகமாகிப்போனதில் மனித பிறவியை தொலைத்தேன் வாழ்ந்தும் பயனில்லை வாழ்க்கையும்...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...