Monday, February 29, 2016

இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் அறிவுலகப் பணிகள்

தீவிர அரசியல் செயல்பாட்டாளராக அறியப்படும் தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் அறிவு ரீதியான நடவடிக்கைகள் தாழ்த்தப்பட்டோர் வரலாற்றிலும் , தமிழ்ச்சமூக வரலாற்றிலும் என்றும் நினைவு கூறத் தக்கதாகும். இரட்டைமலை சீனிவாசனின் இதழியல் பணி பலரும் அறிந்த ஒன்றேதான். பிற சாதியினரை போல பறையர் (தலித்) சமூகத்தை முன்னேற்றும் பொருட்டு பறையன் என்னும் மகுடத்தோடு 1893 அக்டோபரில் பறையன் இதழை தொடங்கியபோது அவருக்கு வயது 32 தான், பறையர் என்ற தலித்திய சமூக அங்கத்தினர்களுக்காக பரிந்து...

பூக்களை கூந்தலிலேற்று

உருகும் பனிமலையில் என் உணர்வுகளை புதைத்துவிட்டு உன் உள்ளங்கை வெப்பத்தில் உயிரையும் உடலையும் இணைத்துவிட்டேன் என் இருதய துடிப்பில் ஏதோ மாற்றம் நிகழ்கிறது நீயதை கனவு என்கிறாய் நானதை காதல் என்கிறேன் உன் கூந்தலை தொட்டுப்பார்க்கும் பூக்கள் கடைசியாக வந்திறங்கியது உன் பாதம் தொட அது தானாகவே இறங்கியதாய் நினைக்க எனக்கு மட்டுமே தெரியும் எனக்காக வேண்டுமென்றே கழற்றியெறிந்தாய் பூக்களையென்று ஏமாற்றம் விரும்பவில்லை நான் உண்மையை சொல்லிவிட்டேன் பூக்களிடத்தில் வேண்டாம்...

ஐயா கக்கன்,எம்ஜிஆர் சிந்தியுங்கள் தேர்தலில் தலைவர்களை தேர்ந்தெடுக்க,,,

2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் தம்மால் யாரை வெற்றிபெற வைக்கப்போகிறோம் என்கிற சிந்தனையில் வாக்காளர் பெருமக்கள் இருக்கலாம், அவர்களுக்காக எளிமை கண்ணியம், நம்பிக்கை கொண்ட தலைவர்களை முறையாக தேர்ந்தெடுக்க கக்கன், எம் ஜி ஆர் போன்றோர்கள் முன்னுதாரனமாக இருக்கிறார்கள் அவர்கள் இருவரின் மக்கள் சேவை பேசுகிறது இதோ! எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த சமயம். 1978-ம் ஆண்டு இறுதியில் ஒருநாள். முதல்வரை சந்தித்து மனுக்கள் அளிக்க எம்.ஜி.ஆரின் ராமாவரம்...

Saturday, February 27, 2016

நாளைய விடியலில் !

நாள் முழுவதும் எனை அகழ்ந்தெடுத்தவன் ஒருவழியாய் விட்டுச்சென்றான் வாசலில் உயிரை குடித்தே தீருவேன் என்று ஒற்றைக்காலில் தவமிருக்கும் உடலசதி மட்டுமே அலுவல் எனக்கு கொடுத்த பரிசு ஏதேதோ என் மூளையிலோட முழுக்கு போட்ட அத்துணை வேலைகளும் முதுகில் சுமையாகி என் ரத்தநாளங்கள் சூடேறி சுருண்டு விழுந்தேன் படுக்கையறை எதுவென்று அறியாமலும்கூட உணவின்றி அப்படியே கண்சொக்கி கிடந்தேன் இல்லாத இரவுக்கு உடலுக்கெதற்கு உணவென்று ஊமைக் கனவுகள் கிண்டலடிப்பதை கேட்கவும் முடியவில்லை அதன்...

பாமக அன்புமணி அவர்களே! இதுதான் மாற்றம் முன்னேற்றமா?

ஒரு கட்சியின் தலைமை என்பது தன்கட்சி சார்ந்த தொண்டர்களை நல்வழிபடுத்துதல், நேர்மையை புகுத்துதல், ஒழுக்கத்தை கற்பித்தல் என்பவற்றில் ஆக்கப்பூர்வமாக தன்னைத்தானே அர்ப்பணித்து கொண்டு அரசியல் புரிவதுதான் சிறந்த தலைமையாக இருக்க முடியும். ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி அதிலிருந்து விலகி மீண்டும் மீண்டும் ஆண்டைகள் பெருமை பேசி தமிழத்தில் வலம் வருகிறது என்பதற்கான மதிப்பீடுகளுக்கு பெயர்பெற்று விளங்குகிறது. இன்று (27.02.2016) அந்த கட்சியின் மாநில மாநாடான "பாட்டாளி...

அம்பேத்கர் பார்வையில் இந்திய மார்க்சியம்

புரட்சியாளர் அம்பேத்கர் மார்க்சியம் குறித்த தன் சிந்தனையில் சமூக நலன்களை எதிர்பார்த்து உரசிவிடத் தயங்கியதில்லை,கம்யூன­ிஸ சித்தாந்தத்தில் சாதிய பாகுபாடுகளும்,தீண்டா­மைகளும் இல்லையென்றாலும் சாதியத்தை வேரறுப்பதற்கான சிந்தனைகள் இந்தியத்திலும்,இந்தி­ய மார்க்சியத்திலும் முற்றுப்பெறாததாக இருக்கிறது என்கிறார் அம்பேத்கர். தீண்டாமை ஒழிப்பை மிக முக்கியானதாக அம்பேத்கர் திட்டவட்டமாக கருதினார். லெனின் இந்துஸ்தானில் பிறந்திருந்தால் முதலில் சாதிய வேறுபாடுகளை ஒடுக்க...

Friday, February 26, 2016

தந்தை பெரியாரின் "உண்மை"

தமிழ்ச் சமூகத்திற்கு தற்போதைய மிகப்பெரும் தேவையாக திராவிட பெரியாரை முன்வைக்கலாம். தந்தை பெரியாரை இப்போது பேசாவிட்டால் மக்களின் அறிவு மழுங்கடிக்கப்பட்டு ஏதேனுமொரு முதலாளியத்தை நோக்கி பயணிக்க வைத்துவிடும். கடைசிவரை அடிமை சமூகமாகவே தமிழ்ச்சமூகம் மாறும் சூழலிங்கே உறுவாக்க இந்துத்துவ பார்ப்பானியம் முயற்சி செய்து கொண்டிருப்பதால் பெரியார் நமக்கு இன்றைய தேவையாக இருக்கிறார். இன்றைக்கு சுமார் நூற்றாண்டுகளுக்கு முன்னால் நடந்த பெரியாரின் இளம்பருவத்து நிகழ்வு...

Thursday, February 25, 2016

ஸ்மிருதி இரானிக்கு ரோஹித் வேமுலாவின் தாய் ராதிகாவின் கேள்விகள்

ஸ்மிருதி இரானிக்கு ரோஹித் வேமுலாவின் தாய் ("பாரதமாதா" என மோடி உச்சரித்த வார்த்தைகளை புறக்கணித்தவர்) ராதிகாவின் கேள்விகள் : (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள். தமிழில்: "விஜயசங்கர் ராமச்சந்திரன்" மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பாராளுமன்றத்தில் ரோஹித் வேமுலாவின் தற்கொலை தொடர்பான விவாதத்திற்கு பதிலளித்துக் கொண்டிருந்த நேரத்தில், வேமுலாவிற்கு நீதி...

ஏற்றுக்கொள்வேன் எதையும்

எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நானில்லை இருப்பது இலையுதிர் காலமாதலால் இலைகளை புறக்கணித்த மரக்கிளைகளின் ஒத்த அசைவுகளை பெற்றிருக்கிறேன் நான் ஒவ்வொரு விடியற் காலையிலும் என் வாசலை மறித்துக்கொண்டு மடிந்து கிடக்கும் சருகுகளின் மடியில் தூங்கி எழுந்திருக்கிறேன் எனக்கான பூக்கள் எங்கே? யாரை? எப்போது? சந்தித்தனவோ தெரியவில்லை ஆனாலும் மணம் விசுகிறது என் மனமுழுக்க இருக்கும் ஏதோ ஒரு தயக்கத்தை வெளியேற்றியபடியே எனக்குள் சில மாற்றங்களை அவ்வப்போது கிளப்பிவிடும்...

Wednesday, February 24, 2016

கொத்தடிமைகளின் அழுகை செவியை மூடிக்கொண்ட இந்தியம்

சுதந்திர இந்தியாவில் தலித்திய பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்க்காக (வன்கொடுமை தடுப்புச் சட்டம்) 1989 இல் இயற்றப்பட்டது. அதே சுதந்திர இந்தியாவில் 1976ல் கொத்தடிமை முறை ஒழிப்பு சட்டம் இயற்றப்பட்டது . இவ்விரண்டு சட்டங்களையும் இங்கே குறிப்பிட வேண்டிய அவசியமிருக்கிறது. பெரும்பாலும் இந்திய சமூகத்தில் பொருளாதாரமற்று, ஏழை உழைப்பாளர் வர்க்கங்களாக தினக்கூலி தொழிலாளர்களாக தங்கள் உடலுழைப்பை முதலாளியர்களுக்கு கொடுத்துவிட்டு முதலாளியர்களால் பிரயோகிக்கப்படும்...

நக்சல்பாரிகள் தீவிரவாதிகளில்லை, தோழர் சிவலிங்கத்தை விடுதலை செய்!

எங்கெல்லாம் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகள் கையாளப்படுகின்றதோ அங்கெல்லாம் புரட்சி என்பது தவிர்க்க முடியாதொன்றாக அமைந்துவிடுகிறது. அந்த வகையில் அடிமை பட்டிருக்கும் மக்களின் உரிமைக்காகவும், நீதிக்காகவும் போராடும் மிகப்பெரும் மாண்பை பெற்ற இயக்கம்தான் "நக்சல்பாரி" இயக்கம். பெரும்பாலும் அதிகார வர்க்கங்கள் கட்டவிழ்க்கும் வன்முறைக்கு அதே வன்முறை தீர்வாகாது என்பது நாம் கொண்டிருக்கும் கோட்பாடாக இருக்கிறது என்பதால் அவ்வப்போது ஆயுதம் ஏந்துதல் குறித்தான நக்சல்பாரிகள்...

ஜெயா அடிமைகளுக்கு குத்திய பச்சை வெளுக்குமா?

தமிழகத்தை ஆளும் ஜெயா தலைமையிலான அதிமுக அரசானது வருகின்ற 2016 தேர்தலில் எப்படியும் தன் இ(ற)ருப்பை தக்கவைத்துக்கொள்ள படாதபாடுபட்டுக்கொண்ட­ிருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். அதற்கான பல்வேறு விளம்பர யுக்திகளை அதுவும் செய்துக்கொண்டு வருகிறது, அதில் முக்கியமானதாக கருதப்படுவது ஜெ உருவப்படம் பொதித்த ஸ்டிக்கர். கிட்டத்தட்ட விளம்பர உலகில் கார்ப்பரேட்டுகளையே மிரளவைத்த இந்த ஸ்டிக்கர் ஒட்டும் விளம்பர யுக்தியில் தமிழக மக்கள் மட்டும் கவர்ந்திழுக்க மாட்டார்களா என்ன!...

RSS, BJP, இன் அடுத்த திரிபுவாதம் - இயேசு கிறிஸ்து இந்துவாம், அதும் தமிழராம்,

இந்திய நாட்டில் தன் சர்வாதிகார ஆட்சியினை நடத்திக்கொண்டிருக்கு­ம் RSS இன் வளர்ப்பு பிள்ளையான BJP யின் அரசியலை எப்போதும் திரிபுவாத அரசியல் என்று விமர்சனம் செய்வதில் தவறேயில்லை , இந்நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் அத்தனை வழிகளையும் நன்கு கடைபிடித்து அதற்கான புரட்டு வரலாறுகளை எழுதுவதிலும், போலியான புனைவுச் சம்பவங்கள் மற்றும் காணொளி,புகைப்படங்களை­ வெளியிடுவதிலும் BJP யை வெல்ல யாராலும் முடியாது (தமிழ்நாட்டு ஜெ வைத் தவிர) அந்தளவிற்கு தன்பக்க புலமையில் கைத்தேர்ந்தவர்களை வைத்துக்கொண்டு , எப்போதெல்லாம் ஒரு சமூக எழுச்சியை இந்திய மண் சந்திக்கின்றதோ அப்போதெல்லாம்...

Tuesday, February 23, 2016

ஒரு ஊடகவியலாளரின் கடிதம் - கிழிக்கப்பட்ட சர்வாதிகார முகம்

ஒரு ஊடகவியலாளரின் ராஜினாமா கடிதம்! டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் பல்கலை மாணவர்களின் கனவுகள், படிப்பு மற்றும் குடும்பங்களை அச்சுறுத்தும் விதமாக செய்திகளை தொடர்ந்து வெளியிட்ட ஜீ (zee news) செய்தித் தொலைக்காட்சி சேனலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது வேலையை ராஜினாமா செய்திருக்கிறார் ஊடகவியலாளர் விஷ்வா தீபக். அவருடைய ராஜினாமா கடிதம் தமிழில், ஊடகவியலாளர்களாகிய நாம் பிறரை கேள்வி கேட்கிறோமே அன்றி, நம்மை நாம் கேள்வி கேட்பதே இல்லை. பிறரின்...

Sunday, February 21, 2016

பேசும் இதயம் 4

முகம் அவளுடையது என்றாலும் பிம்பம் நான் வரைந்தென்று காதல் கர்வம் கொண்டது,,, __________ நம் நினைவுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டுமாம் ஒற்றைக் காலில் நிற்கிறது கனவு,,, தவம் கலைந்து விழித்துக்கொள்கிறேன் காதல் வியர்வையில் நனைந்து,,, __________ பிறகென்ன பிரிவோம் நாமிருவரும் நட்டாற்றில் காதலை தவிக்கவிட்டு,,, எத்தனை காலம் ஆகுமோ! வெந்த புண்கள் ஆருவதற்கு,,, __________ பிறந்த குழந்தையின் அழுகை பற்றிக்கொள்கிறது முதல் ஸ்பரிஸத்தை,,, அழுகையை சேமிக்காதீர்கள் அதன் வீச்சம்தான்...

அறிவை தின்ற மது அரக்கன்

அறிவு பெட்டகத்தினுள் மதுவை பூட்டிவைத்தேன் குடித்துவிட்டு மீதியை அறிவை குடித்துவிட்டு மது ஆட்சி செய்கிறது என்னை,,, எங்கே முறையிடுவது? நீதி கேட்டு அறிவுசார் புத்தகங்கள் புழுங்கி தவிக்கின்றன புழுதியில் கிடந்த என்னை புழுக்கள் தின்னத் தயாராகின,,, தன் பங்கிற்கு கரையான்களும் புத்தகங்களை நோக்கி படையெடுப்பில்,,, என் எலும்பு மிச்சமிருக்கிறது புத்தகங்களின் அட்டைகளும் மிச்சமிருக்கிறது அடையாளச் சான்றுகள் போதும்தானே! டாஸ்மாக் வாசலில் நீதியும் மதுபாட்டிலேந்தி வரிசையில்...

Thursday, February 18, 2016

பேசும் இதயம் 3

எனக்கு பிடித்தவள் நீ,,, தள்ளிப்போகச் சொல்கிறாய் வலித்தது தமிழுக்கு ஆங்கிலத்தில் உச்சரிக்கிறாய் அதனை,,, __________ சிலுவை சுமப்பதாலே நான் தேவனாகிறேன் அறைந்த நீங்களோ அண்ணாந்து பார்க்கிறீர்கள் எதுவாக வேண்டும் நான் உங்களுக்கு இந்த கவிதையாகவா,,, __________ குளித்தெழும்போது கூடவே ஒட்டிக்கொள்கிறாள் உடம்பில் பனித்துளிகளை,,, __________ ஒட்டு நகம் கூட இல்லை விரல் வைத்து கடிக்கும் பழக்கத்தில் என்னையே கடித்துக் கொள்கிறாய் கடிந்து கொள்ளவில்லை நான்,,, __________...

ஏது நம்மிடம் வாழ்வு - ஹைக்கூ

ஆளுங்கட்சி திடீர் ஆய்வு தரமான சாராயம்,,, __________ ஐந்தாண்டு எம்எல்ஏ வருகிறார் கைகழுவி அடுத்த தேர்தலுக்கு,,, __________ முற்றத்து நிலா மலையேறுகிறது காற்றில் கலந்த ஈரம்,,, __________ சீண்டுகிறது என்னை உண்மை மறைத்து வைக்கிறேன் பொம்மையில் மனதை,,, __________ பிடித்த தாமரை சேற்றுக் குளத்தில் நானும் நாற்றமும்,,, __________ அவையில் திட்டங்கள் வாசிப்பு தட்டிய மேசைகள் உடைத்தன கைகளை,,, __________ அதுவரையில் மௌனம் காத்திருந்த சருகுகள் பேசத்தொடங்கின காற்றனலோடு,,,...

Wednesday, February 17, 2016

தலித் இளைஞனுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம்

மிகத் தீவிரமாக முரண்பட்டு நிற்கும் இந்திய சமூகத்தில் "சமத்துவம்" என்றுமே கேள்விக்குறியாகவே காலத்தை கடக்கின்றது. ஓர் அடிப்படை சகோதரத்துவம் கூட இல்லாத சமூகத்தில் வாழ்ந்து சாதியத்தையும் சாதிய திணிப்புகளையும் உள்வாங்கிக் கொண்டு விலங்கினத்தை விட கேவலமாக அடிமைபடுத்தும் ஆதிக்கச் சாதி மனோபாவத்தில் வளரும் கேடுகெட்டு மனித சமூகத்திடம் முதலில் விடுபட வேண்டியது சாதியவாதமும், மதவாதமும் மட்டுமே, இந்துத்துவ பார்ப்பானிய மனுதர்ம வர்ணாசிரமத்தை தன் முதுகில் தூக்கிக்கொண்டு...

Tuesday, February 16, 2016

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்

1856 ஆம் ஆண்டு அப்போது ஜென்னிக்கு 42 வயது, விரிவடைந்த தன் வறுமை குடும்பத்தை விட்டு ஜெர்மனியில் டிரியர் நகருக்குச் சென்றிருந்தார் , அங்கே அவரின் தாயாரின் கரோலின் ஹ்யூபெ. உடல்நிலை மோசமாக இருந்தமையால் பயணம் தவிர்க்கமுடியாதொன்றா­க இருந்தது. ஜென்னியின் மீது கார்ல் மார்க்ஸ் கொண்டிருந்த காதல் உணர்வு அந்த சூழலில் அவர் ஜென்னிக்கு எழுதிய கடிதத்தில் வெள்ளப்பிரவாகமாய் பெருகி ஒடியது. இவ்வாறு எழுதுகிறார் கடிதத்தை,,, அன்பின் இனியவளே! திரும்பவும் உனக்கு எழுதுகிறேன்...

Tuesday, February 09, 2016

மலம் அள்ளும் தலித்துகள், வீட்டுக் கழிவறைப் பெண்கள்

தலித்துகள் மலம் அள்ளும் இழிதொழிலை செய்வதும், பெண்கள் மட்டுமே தன் குடும்ப வீட்டுக் கழிவறையை கழுவதும் ஒப்பிட்டளவில் இரண்டும் வேறுவேறு, முதல் திணிப்பு சமூகம் சார்ந்த ஆதிக்கம். அதில் ஆண் பெண் பேதமில்லை. இரண்டவது திணிப்பு ஆணாதிக்க மனோபாவம் அது வேண்டுமென்றே ஆதிக்கம் செலுத்துவது. ஒரு பெண் தன் குடும்ப வீட்டுக் கழிவறை சுத்தம் செய்தல் தனக்கு பழகிப்போனதென்று, கருதி சக பெண் மலம் அள்ளுதலுக்கு உதவப்போவதுமில்லை, கரம் நீட்டவும் தயாராக இல்லை, என்பதால் முதல் எதிர்ப்பு...

Saturday, February 06, 2016

கருவில் கத்தி - ஹைக்கூ

கருவில் கத்தி பணம் கேட்டு மிரட்டுகிறது நவீன வழிப்பறி மருத்துவம், மருத்துவ கல்லூரிகள்,,, __________ அடுக்கி வைத்த கோப்புகள் சத்தமில்லாமல் அழும் அறிக்கைகள் அனைத்தும் போலி பிரேத பரிசோதனைகளாம்,,, __________ காற்றுக்கு வேலி கண்களை திறக்க விடவில்லை தூசிப் புழுதிகள்,,, __________ படம் தூக்கி காட்டும் பாம்பு பயத்தில் பக்தி மட்டும் மனிதனுக்கு,,, __________ தரைமேல் நட்சத்திரம் பூக்களை கவரும் பனித்துளிகள்,,, __________ பிச்சைக்கு வரிசையாய் விளைநிலங்கள் தொங்கும்...

Friday, February 05, 2016

ஆணாதிக்க வெறியர்களால் பலியாகிய உயிர்

இந்திய சமூகத்தின் ஆணாதிக்கத் தன்மைக்கு அடையாளமாய் அதன் வேர்களிலிருந்து முளைத்தெழுகிறது பெண்ணடிமையும், சாதி ஆதிக்கமும், பதிவேற்றப்பட்ட புகைப்படத்தை கண்டு போலி ஜனநாயகம் என்கிற அடையாளத்தை தன் உடல் முழுதும் குத்திக் கொண்டிருக்கிற இந்திய சமூகம் முகம் சுழிக்கலாம் அல்லது தங்கள் பார்வையை வேறுபக்கம் திருப்பலாம். ஆனால் ஒன்று ஆதிக்க போலி ஜனநாயகம் தான் பதிவு புகைப்படத்திற்கு பதில் சொல்லியாக வேண்டும், எங்கும் அவர்களால் தப்பியோட முடியாது. உபி இல்­ சில நாட்களுக்கு...

Thursday, February 04, 2016

கலாச்சார "மயிறுகள்"

காலனிய ஆதிக்கம் வேரூன்றி தளைத்திருக்கும் சமுதாய கட்டமைப்பிற்குள் காலாச்சாரம் என்பது மானுடத்தை இழுத்து கட்டிவைக்கப்பட்ட அடிமைக் கயிறாகவே எங்கும் எல்லையை சூழ்ந்திருக்கிறது. மயிறுகள் என்றதும் ஊசி முனையில் அமர்ந்தது போல் இருக்குமாயின். அந்த வெஞ்சினம் சமூக அவலங்கள் நிகழ்கின்றபோதும், அதன்பொருட்டு விழும் பிணங்கள் குவிகின்ற போதும் எழாமல் இருக்குமாயின் மயிறுகள் மிகவும் பிடித்திருக்கிறது கலாச்சாரத்தை சாடுகையில்,,, அப்படியே வெஞ்சினத்தால் மயிறுகள் சிலிர்த்து...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...