Friday, July 01, 2016

கடவுளாக்கப்பட்டவன்

நானாகி
நிற்கிறேன்
யாருமற்ற
அடர் வனத்தில்

கனத்திருக்கும்
சிலுவையின்
சுமையினை
இறக்கி வைத்து
இயேசுவை போல

என் தேவனே
என் தேவனே
ஏன் என்னை
கைவிட்டீரென

கதறி அழுகிறேன்
கடவுளாக்கப்பட்டவனின்
கடைசி அலறலும்
கதறலும்
காதுகளில் விழாதென
கைகளால்
மூடிக்கொண்டது
அந்த அடர்ந்த வனம்

அதுவும் நல்லதுதான்
கடவுளை மறுப்பதற்கு
போதுமானதாய்
பொதுவானதாய்,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...