Thursday, August 21, 2014

புன்னகையை பூக்கவிடு!

உனக்காக ஓர்
குடிலை அமைத்து
ஊசி முனையில்
ஒற்றைக் காலுடனே
நான்!

ஓராயிரம்
ஓவியங்களை
ஒரு நொடியில் சிதைத்தால் ஒடிந்து போவானே அக்கலைஞன்!

அவ்வலியை ஒருபோதும்
கொடுத்து விடாதே!

நம் குடிலை
எக்கணமும்
சிதைத்து விடாதே!

சரியெனச் சம்மதம் சொல்லிவிடு!
உன் முகத்திலே புன்னகை
பூக்கவிடு!
நம் குடில்
ஒளிரட்டும்
அன்பே கழுத்தில்
மாலையிடு!

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...