Saturday, October 31, 2015

யார் இந்த கோவன்?

வெள்ளை வேட்டி, சிவப்புத் துண்டு, வெற்று உடம்புமாக இவர் மேடையேறிப் பாடினால் அதிகார வர்க்கம் அம்மணம் ஆகும். 'கஞ்சி ஊத்த வக்கில்ல, என்னடா கெவர் மென்ட்டு… நாட்டைக் கூறு போட்டு வித்துப்புட்டு என்னடா பார்லிமென்ட்டு'என்ற கோவனின் சொற்களில் உழைக்கும் மக்களின் கோபம் தெறிக்கும். 'மக்கள் கலை இலக்கியக் கழகம்' அமைப்பின் மையக் கலைக் குழுப் பாடகரான கோவனின் பாடல்கள், அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் அறிமுகம்! "கீழத் தஞ்சை மாவட்டத்தில் குடவாசல் பக்கத்தில் பெருமங்களம்...

கூழாங்கற்கள் -ஹைக்கூ

சொற்கள் அசைபோடுகிறது ஊமையின் மனதில்,,, ________ பந்தல் அவளுக்குரியது கடனடைக்க போதவில்லை மொய்ப்பணம்,,, ________ புல்லாங்குழல் மரக்கிளையில் தீட்டிய வண்ணமோ கருப்பு,,, ________ வாசிப்பை நிறுத்தாத பிடில் இந்தியாவிலும் -(நீரோ)க்கள் ________ பலத்த மழை ஏரியை சுற்றி சுற்றி -நிலாவட்டம் ________ ஆற்று மணல் வீடு எடுத்து வந்த தண்ணீரும் வற்றி அழுகிறான் -சிறுவன் ________ கொன்ற நத்தைகள் குவியலாக மனிதன் நீர்த்துளி சேகரிப்பில்,,, ________ உள்ளத்தில் சமதள விரிப்பு...

சிவசேனாவின் தொடர் அட்டூழியங்கள்

சிவசேனாக்கள் காவி உடையில் வலம் வரும் கொலைக்கார கும்பல்கள் என்பதை எப்போதும் நிருபித்துக் கொண்டிருப்பவர்கள். அந்த வகையில் சமீபத்தில் எழுத்தாளரான குல்கர்னியின் மீது மை வீசி தங்கள் எதிர்ப்பை ஆதிக்க வெறியோடு காட்டியதை இந்தியா அறிந்திருக்கும். ஒட்டுமொத்த இந்திய எழுத்தாளர்களையும் கதிகலங்கச் செய்திட்ட இச்செயலுக்கு எதிர்வினையாக அவர்கள் தாங்கள் பெற்ற சாகித்ய அகாடமி விருதுகளை திரும்ப அளித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர் என்பதை அனைவரும் அறிவார்கள்....

Thursday, October 29, 2015

பெரியவரும்,மதுப்பழக்கமும்,,,

நரைத்தமுடி,பெருந்தாடி, நடுக்கத்தில் உடல்,ஆனால் சோர்வடையாத மனதுடன் ,அசாத்தியமான கம்பீரத்தோடு கைத்தடி ஊன்றி நடந்த வருகிறார் அந்தப் பெரியவர் மெதுவாக,,,ஊர் ஊராய் சுற்றி கடைசியாக தஞ்சம் வெறும் காட்டுவழி பயணத்தில் தன்னைப்போலவே காய்ந்து கிடக்கும் ஊர் அதுவென அப்போதே உணர்ந்தார் . ஊர் மக்களின் ஒருவிதப்பார்வையில் அச்சம் ,மந்திரவாதியோ!சூனியக­்காரனோ! சூழ்ச்சி சாமியாரோ! பிச்சைக்காரனோ! பரதேசியோ! தீவிர கடவுள் பக்தனோ! தீர்த்தக்கரை முனிவனோ! இப்படியெல்லாம் எழுந்த கேள்விகள்...

Wednesday, October 28, 2015

மரணம் தழுவிய மண்

பின்னால் தொடரும் நிழல் மறைகிறது பூமிதொடும் அன்பெனும் நிஜங்களை பார்த்து,,, _______ இதயம் தொலைத்து நின்றேன் இனியவளே உனக்காக,,, காதல் கண்களை மூடியது காட்சிகள் இங்கு பிழையாக,,, _______ தன்னை மறந்து மண்ணை நேசிக்கும் காற்றிடம் தன் காதலை சொல்லத் துடிக்கிறது இயற்கை,,, _______ நட்பை விதைக்கும் எந்த கணங்களும் ரணங்களானதில்லை உண்மையான நட்பில் விரிசல்கள் விழுந்ததில்லை,,, _______ பார்த்தவுடன் பன்னீரை தெளித்துவிடுகிறாய் உச்சத்தில் என் உயிர் நனைகிறது,,, _______...

Tuesday, October 27, 2015

BJP,RSS அளவில்லாத இந்துத்துவ சர்வாதிகாரம்

இந்திய நாட்டை பசுமையாக்க நேரமில்லாமலும், வேண்டுமென்றே தவிர்த்தும் தங்கள் "காவி" நிறத்தை கையிலெடுத்திருக்கும்­ இந்துத்துவ ஆர்எஸ்எஸ் பாஜக விடமிருந்து வன்முறையை மட்டுமே எதிர்பார்க்க முடியும் அதுவும் ஒன்றரை ஆண்டுகளில்,,, இன்னும் மூன்றரை ஆண்டுகளில் இந்தியா சமத்துவ நாடென்பதை கைவிட்டுவிட்டு இருள் சூழ்ந்த குற்றப் பிண்ணனி நாடாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை,அத்துணை பயங்கரவாதச் செயல்களையும் கணக்கச்சிதமாக செய்து முடிப்பதில் கைதேர்ந்தவர்களாக இந்துத்துவ...

சமூக வலைதளங்களில் "காதல் கவிதைகள்" சாத்தியமா சமத்துவம்?

சமூகத்தின் மிகப்பெரும் சாபமாக மனிதர்களிடத்தில் சவால்விடும் ஒரு மூர்க்கச் சீர்கேடாக இருக்கும் சாதிமத வெறியின் பின்புலத்தை ஆராய்ந்தோமானால் அவை அனைத்தும் ரத்தம் குடிக்கும் அட்டைப் புழுக்களாகவே இருந்து வந்திருக்கிறது. எங்கும் சாதி எதிலும் சாதி, எல்லாவற்றிலும் தலமையாகிறது மதம். சாதிமத அமைப்புகளால் சீரழிந்து கிடப்பது சமூகப்பொதுவெளி மட்டுமல்ல சமூக வலைதளங்களும் தங்கள் பங்கிற்கு சாதிமத வெறியினை ஊட்டியே வந்திருக்கின்றன. பேஸ்புக்,ட்விட்டர்,ஜ­ீபிளஸ்,பிளாக்கர்,வேர்ட்பிரஸ்,என...

Saturday, October 24, 2015

குலச்சாமிகள்

ஒன்று கூடினார்கள் அவர்களோர் அமைப்பாக தீரன் சின்னமலையையும் ராமசாமி படையாச்சியையும் துணைக்கழைத்துக்கொண்டு,,, கொண்டாடினார்கள் வீரப்பனையும் பிரபாகரனையும் அவர்களுக்கே உரித்தான தலைவர்களென்று,,, மனுவின் கட்டளைப்படி சேரிகளை அடித்து நொறுக்கி ஊருக்கு மட்டுமே உரிமையென உள்ளே இருக்கும் சாதியுணர்வுடன் வீரப்பனுக்கும் பிரபாகரனுக்கும் எழுப்பினார்கள் சிலையை குலதெய்வ வழிபாட்டு தடங்களில்,,, கொளுத்தப்பட்ட குடிசைகள்,எரிக்கப்பட்ட தேர்கள்,அழிக்கப்பட்ட கற்புகள்,வீசப்பட்ட...

யாரோ ஒருவன் -ஹைக்கூ

நீயெனக்கு துணைவியானால் ஏற்பேன்தலைவிதியானாலும் காதலின் முதல் விதியதுவென,,, ______ மீளத் துடிக்கிறேன்மங்கையவள் பார்வையிலிருந்து,,, மனதோடு பேசுவது நீயா? உன் விழிகளா? ______ யாரோ ஒருவனிடம் அவள் சிரித்துப் பேசுகின்ற பொழுதுகளில் ஏற்றுக்கொண்டு ரசிக்கும் கபடமற்ற மனதால் மெய்பிக்கப்படுகிறது அவனின் ஆண்மை,,, ______ இரவில் தூங்காத கண்களுடனே நான்உன்னோடு உலாவரத் துடிக்கிறேன் நிலவுக்கு துணையான விண்மீன்களை போலவே,,, ______ அன்போடு அழைக்கிறேன் அருகில் வரவேண்டும் நீயொரு...

"எங்கே செல்கிறது தலித்தியம்"

"ஆதிக்கம்" எந்த வடிவில் வந்தாலும் அது கண்டனத்திற்குரியதாகவ­ும்,எதிர்க்க வேண்டியதாகவும் பதிவு செய்யப்பட வேண்டும். போராட்ட முறைகளின் படி "ஆதிக்கம்" அழிக்கப்பட வேண்டிய ஒன்றாக களத்தில் நிறுத்தப்பட வேண்டும். அந்த வகையில் "மதமும் மதம்சார்ந்த சாதி ஆதிக்கத்தையும்" எதிர்ப்பதற்கு இடைவிடாது செயல்பட வேண்டிய கட்டாயத்தில் ஒவ்வொரு எதிர்ப்பும் இருக்க வேண்டிம் . இதில் வடிவங்களை மாற்றிக்கொண்டு "தலித்துகள்" தங்கள் ஆதிக்கத்தை உறுதி செய்வார்களேயானால் அவர்களும் இந்துத்துவ...

Thursday, October 22, 2015

முடிந்தவரை முரண்களை ஒதுக்கி வைப்போம்

பிஜெபி,ஆர்எஸ்எஸ்,சிவசேனா இவை மூன்றையும் ஒன்றோடொன்று வேறுபடுத்தி பார்ப்பதென்பது முட்டாள் தனம் , மூன்றுமே சாதிய மனுவியத்தின் அங்கமாக விளங்குகின்றது. இவற்றுக்கிடையே பிரிவினை ஏற்பட்டுள்ளதாக அவர்களுக்கு அவர்களாகவே காட்டிக்கொண்டிருக்கிறது என்றால் அதன் நோக்கம் ஒன்றேதான்,வெளியில் முரண்பட்டதுபோல் காட்டிக் கொண்டால்தான் சாதியத்தையும்,சாதியின் மூலக்கூறான மதத்தையும் தக்கவைத்து வளர்ச்சியையும்,அதிகாரத்தையும் பெற முடியும் என்பதை உறுதிபடுத்துகிறது. அதே வேளையில் தங்களின்...

அழைப்பு

மதி மயக்கத்துடனே அந்த மாலை நேரத்தை மனதில் அடைத்து விட்டு,,, எனை திரும்பத் திரும்ப அழைக்கும் வானத்தின் சிவந்த முகத்திடம் கேட்கிறேன்,,, எங்கே அழைக்கிறாய் எதற்காக அழைக்கிறாய் என்று,,, அவ்வானம் கக்கிய மெய்யான செங்கதிர்கள் மேய்ந்துவிட பார்க்கிறது என்னை,,, உணர்ந்தும் விடையேதும் வராதமுன்னே வீட்டிடம் விடுதலை பெற்று அழைப்பு வந்த திசைநோக்கி நடக்கிறேன் என் மயக்கம் அப்படியே,,, போகப் போக முடிவற்ற தேடலுக்கும் முடிவுற்ற வாழ்வுக்கும் இடையில் சிக்கிய ஒரு மரத்தின்...

Monday, October 19, 2015

பேசும் இதயம் 1

உதிர்ந்து எழுகிறது ஒவ்வொரு மலரும் என்னிதழ் முத்தம் அவளிடத்தில்,,, ____ முத்தங்கள் மொத்தமாய் கொட்டிவிட கானக் குயில்கள் தேடிப் பிடிக்கிறது நம் காதலை,,, ____ தமிழ் விளையாடும் சோலையில் நம் உயிர் உறவாடுகிறது வளர்த்த பெருமை மண்ணுக்கும், மனதையாளும் மொழிக்கும்,,, ____ தூரல் போடுகிறது தூரமாய் நிற்காதே அருகில் வா! மழையோடும் மழலை மொழியோடும் நனைந்தே போகலாம் நாம் காதலை சுவாசிக்கப் பிறந்தவர்கள்,,, _____ நேற்றே கானல் நீரானேன் இன்றெனை அழைக்கிறாயே! சலனமில்லாத நம்...

Sunday, October 18, 2015

பவழ முத்துக்கள்

அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிய பவழ முத்துக்களை சிரமப்பட்டு சேர்க்கிறேன் சீக்கிரம் கோர்க்க வேண்டும் ஒரு மாலையை மலர் மல்லிகை என் மடியில் தவழ்ந்து விளையாட சம்மதம் தெரிவிக்கும் நாள்வரையில் நான் காத்திருக்கப் போவதில்லை என் காதலொன்றும் வலுவிழக்கவில்லை சீக்கிரம் கோர்த்து விட வேண்டும் ஒரு மாலையை அழகின் புன்சிரிப்பால் நன் மதியினை மயக்கச் செய்யும் நிலவிடமிருந்து நான் விலகியாக வேண்டும் வழிவிடு என்று வார்த்தைகளால் சுட மனமில்லை எனக்கு நிலவும் அவள் முகமும் ஒன்றாக...

புயலென ஒருநாள்

வெட்டுண்டு கிடக்கிறது எங்களின் கைகள் கூலி உயர்வு கேட்டதற்காக குருடாகி இருட்டில் தடவுகிறோம் எங்களின் வாழ்வை தொலைத்து வரலாற்றுப் பதிவுகளில் எழுதினார்கள் எங்களை "என்ன ஆணவம் அவர்களுக்கு அதனால் வெட்டப்பட்டது கைகள்" என்று ஒருநாள் விடியுமென்று ஒவ்வொரு நாளும் தேய்ந்து போகையில் நிலவுக்கு மட்டுமே அன்றைக்கொருநாள் வெளிச்சம் கிட்டியது பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் நாங்களாம் எங்கள் பஞ்சமி நிலங்களை பறித்தோர்கள் பழிக்கிறார்கள் உழுவதற்கு மாடுகள் இல்லாத பொழுதுகளில் எங்களையே...

Tuesday, October 13, 2015

கிராம பூ(ச்சாண்டி)சாரிகள் மாநாடு

தமிழ்ச் சமூகத்தில் நிலவிவரும் பல்வேறு மதவழிச் செயல்முறைகளில் முக்கியமானதாக கருதப்படுவது குலதெய்வ வழிபாடு அல்லது சிறுதெய்வ வழிபாடாகும். தன் பாட்டன் முப்பாட்டன் காலத்திய மதவழிச் சமூகத்தின் படிநிலைகளின்படி அப்படியே தொடர்ந்து வாழியடி வாழையாக வணங்கப்படும் தெய்வங்கள் சிறுதெய்வங்களாகும். அச்சிறு தெய்வங்களுக்கு என்று தனியாக அர்ச்சகர்களோ,புரோகித­ர்களோ இல்லை அதற்கு மாறாக "பூசாரிகள்" என்றழைப்படுவோர் இறைதூதனாக இருந்து செயல்படுகின்றனர். அவர்கள் பார்ப்பனராக இருப்பதில்லை...

Saturday, October 10, 2015

கோரச் சம்பவமும் கவிதை சமர்ப்பணமும்

கம்பளிப் புழுக்களை காதலிக்கிறேன் நான் அதன் வீச்சம் கூட எளிதில் என்னை கவர்ந்தாலும் நமைச்சலின் வலி நானுணர்ந்த வலி வேதனைகளை விட குறைவுதான் என்பதால் கம்பளிப் புழுக்களை காதலிக்கிறேன் நான் என் மேனி படர்ந்து யோனியில் ஆண்குறிகள் மோதி முட்டி வேட்கை தணிக்கும் விலங்கின சக்திகளிடம் விளையாட்டு பொம்மையாய் நான் அப்பாவும்,அண்ணனும் அவர்களோடு சேர்ந்துகொண்ட சக காட்டு மிராண்டிகளும் கண்டிப்பாய் என் வலியுணர வாய்ப்பில்லை எனை புணர்ந்து விட்டு விந்தெனும் எச்சிலை தெளித்தார்கள்...

நான் மனிதனாக

கிழித்த உடலில் வெடித்த எலும்புகள் சூடேறி மதங்கொண்ட யானைகளின் வசம் போக மிச்சமிருக்கிறது விட்டுச்சென்ற காலடியில் என் உடல் மண் ஒட்டிய நிலையில் விடாது துரத்திய வேதனைகளின் ஊடே உடலை தவிடாக்கும் ஊறும் எறும்புகளும் எனக்குத் தோழனே மட்கும் குப்பையாக மனிதனை ஆக்குவது மண்ணும், மழுங்காத தீப்பிழம்புமாக இருக்கையில் இல்லாத இடம்தேடி எங்கே அலைகிறதென் ஆன்மா விழுந்து விழுந்து விழுதுகளில் எண்ணெய் தடவியதில் அழுக்கேறிய அச்சாணியாக என்னைச் சொருகிய சக்கரம் சுழல்கிறது காலத்தின்...

Monday, October 05, 2015

அந்த மூன்று நாட்களில்

பருமடைதலின் போதெழும் அளவில்லாத சுமையை இறக்கிவைக்க முடியாமல் இடிவிழுந்த பனைமரமாய் கலையிழந்து காட்சியளிக்கிறேன் நான் என் கவலை உணர்ந்த ஒரே ஜீவன் நானாகத்தான் இருக்கிறேன் அத்துணை விஷமப் பார்வையிலிருந்தும் என்னை காக்க மண்ணை துணைக்கழைக்கிறேன் என் பிறப்புறுப்பில் கசிந்த ரத்தம் அப்போதுதான் காவு விடப்பட்டது அம்மண்ணிற்கு முதல் வயிற்றுவலி உயிரெடுத்து உச்சந்தலை வெடிக்கையில் உணர்ந்தேன் அம்மாவின் பிரசவத்தை அப்படியே சங்கிலித் தொடராகிவிடுகிறது சுழற்சி அம்மா துடிக்கையில்...

Saturday, October 03, 2015

பொம்மை மழைத்துளி

பார்வையில் மின்னும் பளிங்கு கற்களைப்போல காட்சிக்குத் தெளிவாய் கையில் ஒரு துளி கரங்களை விரித்துவிடு என்போல் பல துளிகள் உன்னை பற்றிக்கொள்ளும் என்கிறது அந்த மழைத்துளி புத்தம் புதியதாய் பூமிக்கு புதுவரவாய் தனக்கே சொந்தமான புதுமை ஜாலம் காட்டும் பொம்மையினை கண்டதும் பூக்கும் புதுமலராய் புன்னகையோடு அப்பொம்மையோடு விளையாடும் மழலை நெஞ்சத்தில் நஞ்சேதும் நாம் கண்டதில்லை அல்லவா அதுபோலவே கரங்களை பற்றிக்கொண்டது அந்த மழைத்துளி எனக்கது புதுபொம்மையாய் உடைந்த பொம்மைக்காக...

கடவுளெனும் மிருகத்திடம்

சகலமாய் பேசி என் பக்கம் இழுத்துவிட ஓர் பட்டத்தை துணைக்கழைத்தேன் அதன் மாஞ்சாக் கயிறு மரணத்தின் சாவியெனத் தெரியாமல் தளர்ந்து போன இதயத்திற்கு தெளிவென்பது தேவையானதால் கடைக்கோடியில் நின்று கையசைக்கும் குழந்தையிடம் கேட்டு வாங்கிக்கொள்கிறேன் என் தைரியத்தை கழுமரத்தில் என் வரவினை எதிர்நோக்கி காத்திருக்கும் கைதிகளின் ஊடே மனசாட்சிகள் என்னை முன்னோக்கி விட அவர்களின் பார்வையிலிருந்து நான் மறைந்து போகவில்லை மனிதனாய் பிறந்துவிட்ட காரணத்தினால் ஆட்சியதிகாரத்தோடு அரியணையில்...

Thursday, October 01, 2015

வலுசேர்ப்போம் சகோதரி கௌதம மீனா அவர்களின் போராட்டத்திற்கு,,,

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டினை சேர்த்தமைக்காக அண்ணல் அம்பேத்கரை ஒரு குறிப்பிட்ட சாதியினத் தலைவராக சித்தரித்தும் , இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை எதிர்த்தும் , புறக்கணித்தும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஆதிக்க மனநிலை கொண்ட உயர்குடி வர்க்கத்தை எதிர்த்துப் போராட எங்களுக்குத் தேவையான ஒன்றாக இருப்பது " இட ஒதுக்கீடு பிச்சை அல்ல அது எங்களுக்கான உரிமை" எனும் முழக்கம் மட்டுமே ,...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...