Thursday, March 31, 2016

நடிகர் கமலஹாசனுக்கு பிரான்சின் ஹென்றி லாங்லாயிஸ் விருது!

நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்சு நாட்டின் ஹென்றி லாங்லாயிஸ் (Henri Langlois) விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமா துறையில் நடிகர் கமல்ஹாசனின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.தமிழக திரைத்துறையில் பன்முக திறமை கொண்ட நடிகர் கமலஹாசன் தனது நடிப்பின் மூலம் அகில இந்திய அளவிலும், உலக அளவிலும் கவனத்தை ஈர்த்தவர். திரையுலகில் தனது மாறுபட்ட நடிப்பில் தனக்கென்னு தனி முத்திரை பதித்து வருபவர்...

கல்வி காசு பணம் வியாபாரம்!

ரூ.100 கோடியை விழுங்கிய கல்வி அதிகாரிகள்...! -பள்ளிக் கல்வித் துறை'மெகா' ஊழலும், கொள்ளையும் !பொள்ளாச்சியைச் சேர்ந்த பிரபலமான தனியார் பள்ளி அது. தனது மகன்சுரேந்திரனை எல்.கே.ஜியில் சேர்ப்பதற்காகச்சென்றார் விவசாயி தியாகராஜன்.பத்தாயிரம் கட்டணம், ட்யூஷன் பீஸ் தனி என பள்ளி நிர்வாகம்சொன்னதற்கெல்லாம் தலையை ஆட்டினார். அவர் கொடுத்த பணத்திற்கு எந்த ரசீதும்கொடுக்கவில்லை. ஒருநாள் கல்வி அதிகாரிகள் ஆய்வுக்கு வருகிறார்கள் என்றுசொல்லி, பள்ளி நிர்வாகம் கையெழுத்து...

ஐரோம் சர்மிளா தற்கொலை முயற்சி வழக்கில் இருந்து விடுதலை!

மணிப்பூரின் இரும்பு மங்கை என்று அழைக்கப்படும் ஐரோம் சர்மிளா ஆயுதப் படையினருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி கடந்த 16 ஆண்டுகளாக காந்திய முறையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார். அவருக்கு குழாய் மூலமே உணவு வழங்கப்பட்டு வருகிறது.முன்னதாக இந்த கோரிக்கைக்காக கடந்த 2006-ம் ஆண்டு அக்டோபர் 4-ந்தேதி டெல்லி ஜந்தர்மந்தரில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். அப்போது தற்கொலை செய்ய முயன்றதாக, இந்திய தண்டனைச் சட்டம்...

Monday, March 28, 2016

தேசிய விருதுகள், விசாரணைக்கு மூன்று விருதுகள்

63வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த நடிகருக்கான விருதினை பிகு படத்திற்காக "அமிதாப்பச்சனும்", சிறந்த நடிகைக்கான விருதினை தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படத்திற்காக "கங்கனா ரனாவத்தும்" சிறந்த இயக்குநருக்கான விருதினை பஜிராவோ பன்சாலி படத்திற்காக "சஞ்சய் லீலா பன்சாலியும்" சிறந்த திரைப்படமாக "பாகுபலி" திரைப்படத்திற்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் "விசாரணை" படத்திற்கு 3 தேசிய விருதுகளை வென்றது, தமிழில் வெளிவந்த விசாரணை...

தனியார் துறையில் இடஒதுக்கீடு? மோடி அரசுக்கு சீத்தாராம் யெச்சூரி கேள்வி?

"டாக்டர் அம்பேத்கர் மீது உண்மையான மரியாதை இருக்குமானால் அவர் கண்ட சமத்துவக் கனவு நிறைவேற தனியார்துறையில் இடஒதுக்கீட்டை பிரதமர்மோடி அறிவிக்கட்டும்," என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்."அம்பேத்கர் 125வது பிறந்தநாள்விழாவை பெரிதாகக் கொண்டாடப்போவதாக பாஜக அறிவித்திருக்கிறது. அவர் பிறந்த மாவூ கிராமத்திற்கு ஏப்ரல் 14 அன்று செல்லப்போவதாக பிரதமர் அறிவித்திருக்கிறார். அம்பேத்கரின் லட்சியங்களை பாஜக நிறைவேற்றுகிறது...

Sunday, March 27, 2016

பேசும் இதயம் 6

உயிரெழுதும் கவிதையில் உறக்கம் தொலைத்து நிற்கிறேன் யாரிடமோ எனது புன்னகை,,, ___________ உணவு , உறக்கம் அமைதி, ஆத்மார்த்தமென அனைத்தையும் துறந்து ஒற்றைத் தாமரையில் என் நிழலாடுகிறது கேட்டு விடு தாராளமாய் தருகிறேன் நானென்பதை தவிர,,, என்கது வேண்டும் நம் காதல் நினைவுகளை சுமக்க,,, ___________ நீண்ட நேரமாய் அழுது அழுது வற்றிய என் உப்பற்ற கண்ணீரை கேட்கிறது நதியிலாடும் நாணல் நீ வருவாயென நாணலுக்கு சொல்லியிருந்தேன்,, ___________ என் வலது தோளில் சாய்கிறாய் நீ இடது...

Saturday, March 26, 2016

மலம் தின்ன ஆசையா!

ஐந்தாண்டுகள் கசாப்புக் காரன் சந்தையில் விலைபோகும் வெட்டப்பட்ட ஆடுகளின் உயிரற்ற தலைகளா உங்களுடையது ஐந்தாண்டுகள் வட்டியும் குட்டிபோட மீட்கவும் வக்கற்ற அடகுத் தலைகளா உங்களுடையது அதோ! நாங்கள்தான் விடியலை தரும் தேவதூதர்களென கொஞ்சமும் கசங்காத வெண்ணிற ஆடைகளின் பின்னால் ஒளிந்திருக்கும் அழுக்கு பிண்டங்கள் ஒவ்வொரு வீடுகளாய் முற்றுகையிடுகின்றன ஆம்! அவைகளேதான் அரசியல் போர்வையில் வியாபார கடைவிரிக்கும் முதலைகள் கூட்டங்கள் மதுவூற்றி பணம் திணித்து மாய வாக்குறுதிகளை...

Thursday, March 24, 2016

சுடு(ம்)காடுகள்,

தேகமது செல்லரிக்கும் எலும்புகளோ கதை பேசும் கல்லறைகள் முகம் சுளிக்கும் சுமக்கும் மண்ணோ பதற்றமாகும் தன் வெளியில் காற்றோ துர்நாற்றம் தெளிக்கும் மிருகமாக இவன் ஆனானென மரணமே சொல்லிவிட்டதே வாழ்தலில் மனிதனாக உயிர் வாழ்தலும் சிறந்ததே சிந்திக்க மறந்தாயோ சிரிக்கிறதே சுடு(ம்)காடுகள்...

Wednesday, March 23, 2016

"பேபி" கையால் ரொட்டி வேண்டும் - பகத்சிங்

"தூக்கிலிடும் முன் கடைசி ஆசை என்ன?'' என பகத்சிங்கிடம் கேட்டார்கள். "பேபி" கையால் ரொட்டி வேண்டும் என்றார். சிறை அதிகாரி அதிர்ந்து போனார். காரணம் பேபி என்ற பெண் சிறையில் மலம் அள்ளுபவர். ஆனால் பகத்சிங், 'அவர் தான் ரொட்டி செய்து தர வேண்டும் என உறுதியாய் கூற, பேபி அழைத்து வரப்பட்டார். "நான் மலம் அள்ளுபவர், ரொட்டி செய்து தர மாட்டேன்", எனக் கூறுகிறார். " என் தாயும் மலம் அள்ளுகிறார். அதற்காக என் தாயின் கைகளில் சாப்பிடாமல் இருக்கிறேனா? ஒரு பிள்ளையின் மலம்...

சாதி ஏன் ஒழிய வேண்டும் - தந்தை பெரியார்

"பிறர் உங்களை பள்ளர், பறையர் என்று சொல்லி நீங்கள் கேவலமானவர்கள் என்று கருதப்பட்டால் அவர்கள் அதைவிடக் கேவலமானவர்கள் என்று நான் சொல்வேன். அவ்வாறு உங்களை கேவலமாகக் கருதுபவர்களுக்குள்ள­ பெயரை விட உங்கள் பெயர் கேவலமானதல்ல... யாரேனும் என்னை பள்ளர் பறையர் என்று அழைப்பது மேலா - சூத்திரன் என்று அழைப்பது மேலா என்று கேட்டால் சூத்திரன் என்று அழைக்கக் கூடாது என்று சொல்வேன் ஏனென்றால் சூத்திரன் என்ற பெயர்தான் இழிவானதாகும். பள்ளர் பறையர் என்பவராகிலும் சொந்தத் தாய்...

பகத்சிங் நினைவு நாளில் எங்களின் முழக்கமும்,சபதமும்,

இன்று தோழர் பகத்சிங் அவர்களின் நினைவுநாள் (மார்ச் 23, 1931) ஏகாதிபத்திய வெள்ளை ஆட்சிக்கு எதிராகவும் இந்திய சூழலியல் சாதிய ஆதிக்கத்திற்கு எதிராகவும் "நான் ஏன் நாத்திகனேன்" எனும் மிகப்பெரிய பொக்கிஷ நூலை தன் தண்டனை காலத்திலேயே எழுதி, தூக்குமேடையை முத்தமிட்டு முழங்கிய அந்த "இன்குலாப் ஜிந்தாபாத்" முழக்கத்திற்கு மத்தியில் முதலாளிய ஏகாதிபத்தியம் மிரண்டடித்து ஓடித்தான்போனது, காலங்கள் மாறினாலும் காட்சிகள் அப்படியே உயிர்த்திருப்பது இந்தியாவின் சாபக்கேடே அன்றி...

Tuesday, March 22, 2016

தேசியப் பஞ்சாலை கழகத்தில் கோடிக்கணக்கில் ஊழல்

இந்தியப் பொதுத்துறை நிறுவனமான தேசியமயமாக்கப்பட்ட என்டிசி பஞ்சாலைகளில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது தேசிய ஊழல் கண்காணிப்பு குழு விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்த சி.ஐ.டி.யு கோவை மாவட்டப் பஞ்சாலை தொழிலாளர் சங்க அலுவலகத்தில் சிஐடியு மாவட்டத் தலைவரும் பஞ்சாலை சங்கப் பொதுச்செயலாளருமான சி.பத்மநாபன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்...

Monday, March 21, 2016

என் அன்புக் காதலனே!

உன் விழிகளில் தடம் பதித்து மார்புக்குள் முகம் புதைத்து தேடுகிறேன் காதலை சொட்டச் சொட்ட தேனொழுகும் இதழ்களை மெல்லக் கவ்வி பிடித்து காதோரத்து முடிகளையும் கோதிவிட்டு நெருங்க நெருங்க தேடுகிறேன் காமத்தை மீசை முடியில் ஓராயிரம் வார்த்தைகளை சுமந்தவன் நீ! வெட்டிய குறுந்தாடியில் குடிகொள்கிறதென் அமைதியற்ற திருவிளையாடல் முகத்தை திருப்பாதே முடிந்தவரை என்னை பார்த்து ரசி! எதையும் மறைத்து விடாத எனது நிர்வாணத்தில் எப்போதும் தூய்மை படிந்திருப்பதாய் அடிக்கடி வர்ணித்தெழுதுவாய்...

Sunday, March 20, 2016

இறக்காத கவிதைகளை!

அன்றெனக்கு என்ன தோன்றியதோ அதை எழுத்தில் வடித்து என் கவிதையென எடுத்து வருவேன் ஆவலாய் உன்னிடத்தில் அலட்சியமாய் வாசித்து இன்னும் ஆழமாய் எழுதச் சொல்கிறாய் சிந்தனைகள் சிதறிவிட்டதாய் கடிந்தும் கொள்கிறாய் கவிதையில் உயிர்ப்பில்லையென உதடுகளை குவிக்கிறாய் மூளையை கசக்கி யோசித்து யோசித்து எழுதிய கவிதைகள் மொத்தத்தையும் குப்பை மேடுகளாய் மூலையில் கூட்டிவிடுகிறேன் கடைசியாய் மீந்துபோன ஒரு காகிதத்தை நீயாவது கடந்து போ! இந்த கைதியின் அறைகளை விட்டு வெளியே! ஒதுக்கப்பட்ட...

பேசும் இதயம் 5

என்றேனுமொரு நாள் எனைத்தேடி நீ வருவாய் அன்றெனதுடல் பொசுக்கப்பட்டிருக்கு­ம் உனக்கது இலையுதிர் காலமாகலாம் என் நினைவுகளை சுமந்தபடியால்,,, __________ ஒரு மரக்கிளைக்கு வலிதெரியாமல் தன்னை துறந்துவிட்டு காற்றோடு துயில்கொள்ளும் சருகுகளை போலே நமது பிரிவு இருந்திடல் நியாயம்,,, __________ உன்னையே உற்று உற்று பார்க்கிறது பூக்கள் கண்ணாடி முன்நிற்பது போன்றதொரு உணர்வு அதற்கு,,, __________ நதியில் விழுந்த என் கண்ணீர்த் துளிகளை விடுகதைகளாக நீ கேட்கிறாய் கையெழுத்திடுகிறேன்...

Saturday, March 19, 2016

ஹோசிமின் - இறுதி ஆவணம்

அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து தேசிய மிட்சிக்குப் போர் நடத்திய தமது மக்களின் சமாதானம்,தேசிய சுதந்திரம், சனநாயகம், சோசலிசம் ஆகியவற்றிற்கு ஆதரவாகவும், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு சக்திகளை காட்டிலும் உலகத்தின் சமாதான மீட்பு சக்திகள் தம் பலத்தை நிரூபித்துக் காட்டுமேயானால் "அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகள் தோல்வியடைந்து நம்மிடம் மண்டியிட்டு உயிர்பிச்சை கேட்பார்கள்"-ஹோசிமின். அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து நடைபெற்ற மிகப்பெருந்திரளான மக்களின் எழுச்சியை...

Friday, March 18, 2016

நான் உயர் சாதி - இப்போது டாட் காமிற்கு

நன்றி! இப்போது டாட் காமிற்கு ஏனென்றால் அவர்கள் "நான் உயர்சாதி" தரப்பினர்கள் என்று என் கண்ணுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறதெனும­் நினைப்பை உடைத்து இல்லையில்லை எங்களுக்கும் தெரியுமென அருமையாக காட்டியிருக்கிறது. நான் உயர் சாதி ஆனால் ஆணவக்கொலையை எதிர்க்கிறேன் எனும் காணொளி "ஆதிக்க சாதி" எனும் அடையாளத்துடன் இதனை கையாளும் போது ஆணவக்கொலைக்கு எதிராக கருத்தை ஆதிக்க சாதியினரிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற விளக்கத்திற்கு பின்னால் எப்படியும் இங்கே சாதி ஆதிக்கம்தான்...

Thursday, March 17, 2016

வலியும் கூட சுகமே,

என் பாதங்களை நோகடிக்க பாதையெங்கும் முட்களை தூவு மலரின் மணத்தை மனதிற்குள் பூட்டிவை பக்கத்தில் சிரிக்கும் தோழி மலரிடம் உன்னை மட்டுமே பிடிக்குமென பொய்யுரை பார்த்துகூட பேசாதே புதர்களில் பதுங்கிவிடு நீண்ட நேரம் ரசிக்க இதழ்களில் ரசமில்லையென கிண்டலடி காம்பிற்குள் சுடுநீரேற்று இலைகளை தொட்டு நசுக்கி தூரே எறி சுரக்கும் தேனில் விஷமேற்று மனசெல்லாம் வலிக்க வலிக்க காதல் செய்ய மட்டுமே தெரிந்த எனக்கு வலியும் கூட சுகமே மிச்ச விதைகளையும் தருகிறேன் எங்கேனும் நட்டுவிடு...

கார்ல் மார்க்சின் கடைசி நாட்கள்

"நடக்கும் அகராதி" என அழைக்கப்பட்ட மதிப்புக்குரிய மார்க்ஸ் முடங்கிப் போனது ஜென்னியின் மரணத்தில் தான். 1881- டிசம்பர் 2- இல் தன் மனைவி இறந்த போது மார்க்ஸீம் செத்துப் போய்விட்டார் என்கிறார் எங்கெல்ஸ். மார்க்ஸீன் நெருங்கிய தோழன் மார்க்ஸ் மரணத்தைப் பற்றி நம்முடன் பகிந்து கொள்கிறார் மேலும்... ஜென்னியை மிகவும் நேசித்தவன் மார்க்ஸ். ஜென்னியின் மரணத்திற்கு பின் 15- மாதங்கள் வரையில் மார்க்ஸ் இருந்தாலும் அவனுடைய வாழ்க்கை இறந்த வாழ்க்கை தான். இருந்த வாழ்க்கையல்ல......

Tuesday, March 15, 2016

உலகத் தொழிலாளர்களே!

அதிகார வர்க்கத்தின் செயற்கை பேரிடரில் சிக்கித் தவிக்கும் பாமரன் நான் பணமாளும் பூமியில் பிணக்குவியலொன்றும் பயமாக இல்லையெனக்கு பழகிப்போய் எப்போதும் போல உழன்று என்னை நானே சகித்துக் கொள்கிறேன் நானுமிங்கே நடைபிணமாதலால் சுரண்டி சுரண்டி சூழ்ச்சிகள் வலைவிரித்து என் சுயநினைவை திருடுகிறார்கள் தியாகிகளெனும் பெயர்களோ அவர்களுக்கு அடிமையாளன் முத்திரைகளோ எனக்கு எழுந்து ஓரடி எடுத்துவைக்கிறேன் முற்போக்கின் துணைகொண்டும் தோள் சாய்த்தும் இலேசாக ஆட்டம் காண்கிறது அதிகாரம்...

காதலித்தேன் அவளை, என்பதற்காக!

காதலித்தேன் அவளை என்பதற்காக என் ரத்தம் குடித்து சதையை ரசித்துண்ணும் மிருகங்கள் உடனே துப்பியதாம் சதையை என் கண்ணீர் உப்பற்று போனதாம் சாதியுப்பு என் சதைமுழுவதும் தடவி கடல் மணலில் காய வைத்தார்கள் உப்புக் கருவாடாக நான் மாறுகின்ற வரையில் தணலென் சதையை உருக்கிக் கொண்டிருக்க ஒருவழியாய் தயாராகிவிட்டது என் சதை கருவாட்டுக் குழம்புக்காக எப்படியும் நாளைய விருந்தில் வாழையிலைகள் எனக்காக அழலாம் வாழைக் கறை ஆடைகளில் பட்டால் போகாதாம் அவ்வளவான கெட்டித்தன்மை ஏன் மனிதர்களின்...

சாதியால் செத்தாயே சங்கரா!

ஊழிக்காற்றில் உலர்ந்து எங்கும் சிதறியோடும் சருகுகளில் படிந்து கிடக்கிறது சங்கரா உன் உறைந்த ரத்தம் சாதியால் செத்துக்கிடக்கிறாயே சங்கரா நாடகக் காதல்திருமணமே உன்னை மண்ணில் சாய்த்ததென்று சாதி இந்துக்கள் சாவகாசமாய் பேசுகிறார்களே தன்சாதிக்கு பெருமை சேர்க்கும் ஆவல் அவர்களிடத்தில் உன் குருதி வாடையில் கொஞ்சம் தேநீர் கலந்து கொடு சாதிமறுப்பு மணங்கள் அருந்தட்டும் சங்கரா நீ இறந்து கிடக்கிறாய் உன் காதலெனும் ஆன்மாவை கத்தியால் குத்திக் கிழித்த சாதிவெறியர்களின் கல்லறையில்...

Monday, March 14, 2016

விசாரணை திரைக்காட்சிகளின் உண்மைகள் வெளிச்சத்திற்கு

விசாரணை படம் பார்த்து பதட்டமாவனவர்களின் கண்ணோட்டத்தில் இரண்டு விதமான மனநிலைகளை காணலாம். ஒன்று அதுவரையில் விசாரணைக் கைதிகளை காவல்துறை எவ்வாறு நடத்துகிறது என்று அறியாத மேட்டுக் குடியினர்களாகவும், இரண்டாவது வாழ்நாளில் காவல் நிலையத்திலும்,நீதிமன­்றத்திலும் உள்நுழையவேக் கூடாது என்கிற "நல்வர்கள்?" என சமூக அந்தஸ்தை பேணிக் காப்பவர்களாகவும் அரியப்படுகிறார்கள், ஒருவேளை இவ்விரு வகையிலும் வராத உணர்வுப் பூர்வமான பதற்றத்தை காட்டுபவர்கள், அதிகார வர்கத்திற்கு எதிரான...

Sunday, March 13, 2016

சாதிவெறித் தமிழகம் தொடரும் ஆணவக் கொலைகள்

இன்று காலையில்தான் ஒரு ஆட்டோவில் அந்த வாசகத்தை படித்தேன் அவ்வளவு நேர்த்தியாக எழுதப்பட்டிருந்தது "நீ சாதிக்கு பிறந்தவனில்லை சாதிக்க பிறந்தவன்" என்று,,, உள்ளுக்குள் ஏற்பட்ட ஒரு ஆத்ம திருப்தியை அனுபவத்துக் கொண்டிருந்த அடுத்த வினாடிகளில் தொலைத்துவிட்டேன் அந்த ஆட்டோ திரும்புகையில்,,, அதிர்ச்சி அலைகள் என்னை ஆட்கொண்டுவிட்டிருந்த­து, அதே ஆட்டோவின் பின்னால் வாளுடன் இருக்கும் கலசத்தை வரைந்து கீழே "ஷத்ரியன்டா" என எழுதியிருந்ததை எப்படியும் ஜீரணிக்க முடியவில்லை...

நடிகர்களின் தேர்தல் பிரச்சாரம், இப்போதே தலைசுற்றுகிறது!

தமிழகத் தேர்தல் நெருங்க நெருங்க மனதிற்குள் ஒருவித அச்சம் தொற்றிக்கொள்கிறது. ஓரளவிற்கு ஐந்துமுனை போட்டிகள் என்கிற தேர்தல் களத்திற்கு அரசியல் கட்சிகள் அடித்தளமிட்டாலும் இன்னமும் இழுபறியிலேயே இருப்பதனால் கட்சி வேட்பாளர்களை தமிழ்நாட்டின் ஆகப்பெரிய கட்சிகளான திமுகவும், அதிமுகவும் இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில் எப்படியும் தேர்தல் பிரச்சாரத்திற்கு சிறிதுகால இடைவெளி கிடைக்குமென்பது ஆகச்சிறந்த மன நிறைவை அளிக்கிறது. காரணம் இருபெரிய கட்சிகளும் தங்களின் தேர்தல்...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...