Tuesday, June 30, 2015

காதல் தோல்வி

அவன் என்னை மறந்தும் கடந்தும் எங்கோ சென்று விட்டதனால் என் காதல் தோல்வியை தழுவியதாய் காற்றிடம் புலம்பிய பொழுதுகளில் அழுது விடாத அதன் அரவணைப்பு என் கண்ணீருக்கு ஆருதலானது தோல்வி என்பதை வார்த்தைகளில் உபயோகிக்காதே உனக்கான சூழலது சந்தர்ப்பங்கள் சரிவர அமையாமைக்கு நீயே காரணம் புல்லாங்குழல் வாசிக்கப் பிறந்தவை அன்றி வெந்நீரூற்றி விளையாடுதல் முறையோ துடைத்துவிடு கண்ணீரை அழாதே என்முன்னால் காற்றின் கரங்கள் எனைத்தழுவி அரவணைக்க ஆருதல் வார்த்தைகள் மனதினை வருடிவிட...

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை

சென்னையில் பல்வேறு சிக்கல்கள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு­­ மத்தியில் மெட்ரோ ரயில் திட்டம் திறந்து வைக்கப்பட்டது . சென்னைக்கு வருகை தருவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற இவ்வேளையில் மெட்ரோ ரயில் திட்டம் ஒரு வரவேற்பான செயல்திட்டமாக கொண்டுள்ளது. இதற்கிடையில் சுற்றுச்சூழலை மாசடையச் செய்கிறது மற்றும் பழம்பெரும் வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டும் இத்திட்டத்திற்கு எழுந்த வண்ணம் இருந்த போதிலும் மக்களின் போக்குவரத்துத்...

Sunday, June 28, 2015

அடிப்பதை நிறுத்தாதே அப்பா!

விடியற் காலையில் பால் வாங்க நான் போகிறேன் கடைக்கு,,, மின்கட்டணம் நாளை கட்டவேண்டும் இன்றே கொடுத்துவிடு அட்டையை என்னிடத்தில்,,, நுகர்வோர் அங்காடியின் கூட்ட நெரிசலை நான் தாங்குவேன் கொடு இப்படி என்னிடத்தில் ரேஷன் அட்டையை,,, இன்று முழுவதும் முகூர்த்த தினமாம் அனைத்து நிகழ்சிகளிலும் நீயிருக்க வேண்டும் குழந்தைகளை என்னிடம் விடு காலை பள்ளியில் விட்டு மாலையில் வீட்டுப்பாடங்களை நானே கவனித்துக் கொள்கிறேன்,,, ஞாயிறு விடுமுறை வீட்டை நான் நாய் போல காவல் காக்கிறேன்...

இந்துத்துவத்தின் பிடியில் ஈழத் தலைவரா?

ஈழத்தின் விடுதலைத் தலைவர் மேதகு பிரபாகரனின் உருவச்சிலைகளை இந்துக் கோவில்களில் நிறுவுவதும் அதனை அரசின் ஆணைக்கிணங்க காவல் துறையினர் அகற்றுவதும் தொடர்கதையாகியிருக்கி­­றது. விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரனை இந்துக்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது ஆகவேதான் குறிப்பிட்ட இந்துத்துவ குலதெய்வ வழிபாட்டில் பிரபாகரனின் உருவச்சிலைகள் இடம்பெறுகின்றன. முதலில் குலதெய்வ வழிபாடுகளான சிறு தெய்வங்கள் மற்றும் ஊர் எல்லை காவல் தெய்வங்களான மாரியம்மன்,அங்காளம்ப­­ன்,கருப்பு,முனி,ஐய்­ய­னாரப்பன்,...

Saturday, June 27, 2015

அன்று இளவரசன் இன்று கோகுல்ராஜ் நாளை யாரோ? தொடரும் கௌரவக் கொலைகள்

தீர்வுகளைத் தேடி இன்னும் எவ்வளவு தூரம்தான் பயணிக்க வேண்டுமென்று ஒருமுடிவும் தெரியவில்லை இந்த தமிழ்ச் சமூகத்தில் நிலவும் ஆதிக்க இந்துத்துவ சாதி வெறியின் அவல நிலைகள் வழித்தடங்களை தடுத்து நிறுத்தி திசைமாற்றிவிட்டு ஏளனம் செய்கின்றது. எதுவும் மாறிடப்போவதில்லை தொடரும் எங்கள் கௌவரக் கொலைகளென்று மிகப்பெரும் சவாலையும் சவடாலிட்டுச் தமிழ்ச் சமூகத்தை அதன் பிடியில் தக்கவைத்துக்கொ(ல்)ள்­­கிறது.அன்று தர்மபுரியில் இளவரசன் இன்று நாமக்கல்லில் கோகுல்ராஜ் , பெயரும்...

Friday, June 26, 2015

தமிழ்த்தேசியத்தில் எழும் "ஜ"ந்தேகம் ச்ச்சீ! "ச"ந்தேகம்

தமிழ்தேசியத்தின் சிந்தனைகள் அப்படியே மெய்சிலிர்க்க வைக்கிறது . எப்படி இவர்களிடத்தில் மட்டும் இப்படியான சிந்தனைகள் எழுகின்றது? கேள்விக்கான விடையை அவர்களாகவே தந்துவிடுகிறார்கள் "நாங்கள் தமிழ்த்தேசியர்களென்ற­­ு" தமிழ்த்தேசியவாதிகளின­­் முன்னெடுப்பு முறைகளில் கோமாளித்தனங்கள் நிறைந்திருப்பதை மீண்டும் உறுதியாகியிருக்கிறது­­. தமிழ்ச்சமூகத்தில் தற்போது அவர்களெடுக்கும் பரப்புரை முன்னெடுப்பு "சாதியத்தை ஒழிக்க வேண்டுமெனில் "ஜா"தியம் என்பதை "சா"தியம் என்றெழுதினால்...

Thursday, June 25, 2015

இரு தோழர்கள்!

வாடைக்காற்றில் வயிற்றுப்பசியோடு சுற்றித் திரிந்த பறவையொன்று எச்சில் இலையை ஏக்கமாய் பார்த்துவிட எனக்கே போதாதிது நீ வேறு வந்துவிட்டாயாவென விரட்ட மனமில்லாமல் விரலசைத்து அழைக்கிறது பிஞ்சு மனசு அருகில் வந்தமர்ந்த உடலோடு இறக்கைகளும் ஒட்டிப்போன பறவையினடத்தில் பாசம் வைத்து பந்தியில் இடம் பகிர்ந்தளிக்கிறானே அவன் யார்? விடைத் தேடியலையும் எச்சில் இலைகளுக்கு விவரம் போதவில்லை வீசப்பட்ட இலைகளோ விருந்துண்ணும் பக்குவமாயிங்கே மாயவித்தைகளை மடியில் சுமந்தவனில்லையவன்...

காதல் துளிகள்

உயிரை வாங்கும் கவிதைக்கு உனது பெயரையேசூட்டுகிறேன் இம்சைகள் மிக பிடிக்கும் என்பதால்,,, ___ இளங்கதிர் உதயம் என்னவளின் கழுத்தில் ___ கசியும் மௌனம் உள்ளே தோய்ந்த இதயம் ___ அவளின் நினைவுகளில் மிச்சமிருப்பது என் காதல் மட்டுமே,,, ___ நீலம் கரைதொடும் முன்பே நித்தமும் உயிர்த்தெழ துடிக்கிறேன் உயிரே எனைப் பிரியாதே,,, ___ முகம் சிவக்கிறது தாமரைக்கு உன் சிறு கோபத்தை சேமித்து வைக்கிறேன் நான்,,, ___+...

Wednesday, June 24, 2015

நீயும் வா என்னோடு,,,

ஓவியங்களை உறங்குமாறு கட்டளையிடுகிறேன் கனவினில் தெளிந்த நீராகத் தெரிகிறாய் நீ பறிக்கத் துடித்தால் கண்ணை பறிக்கும் மலர்களை மேலோட்டமாய் திட்டித்தீர்க்கிறேன் கள்ளத்தனமாய் தேன் திருடும் இதயத்திருடியாகத் தெரிகிறாய் நீ துள்ளியாடும் தோகை இளமயிலிடம் கோபித்துக் கொள்கிறேன் சலங்கை காலாடும் சில்லிடும் மழைத் துளிகளாகத் தெரிகிறாய் நீ நீயும் கவனித்திருப்பாய் இந்தக் காதலனின் செய்கைகளை இறுதியாக உயிரோடு உறவாடும் காதலெனும் மூவெழுத்திடம் மண்டியிட்டு மடியேந்துகிறேன் சுவற்று...

உன்னை மறந்து,,,

நிஜம்தான் நிஜம்தான் உன்னை மறந்தது நிஜம்தான் நிழல் எதுவாக இருப்பினும் நிஜமாக நீயாகத் தெரிவது என் கண்கள் செய்யும் ஏமாற்று வேலை விசித்திர பூச்சென்டுகள் போலியெனத் தெரிந்தமையால் புதைத்து விடுகிறேன் என் காதலை நிஜப்பூக்களை வருடி கார்கூந்தலில் எப்போது அமர்த்துகிறாயோ அப்போது தொலைத்து விடத் தயாராகிவிடுகிறேன் மறந்தது நிஜமென்பதை அதுவரையில் நீயாகவே சூடிக்கொள்ளும் காகித பூக்களுக்கு முன்னால் காதலித்ததை மறந்தும் மறுத்தும் கடந்து செல்கிறேன் நிஜங்களுக்கிங்கே வாழ...

களத்து மேட்டு "கருப்பன்"

பாறைகளென்றோ கூழாங்கற்களானது மாற்றம் தந்த மலை நதியைத்தான் காணவில்லையிங்கே களவாடியவன் கரன்சியில் புரள கட்டியழுவகண்ணீரும் வற்றிப்போனது களத்துமேட்டு கருப்பனுக்கு திண்ண உணவு செரிக்கவில்லையாம் தினம் குடிக்கிறார்கள் குளிர்பானத்தை தாகமெடுத்தால் தண்ணீரில்லை திணறும் மூச்சோடு தினம் கடக்கிறான் களத்துமேட்டு கருப்பன் உணவில் கலப்படமாம் ஊரே அலறியது களத்துமேட்டு கருப்பன் மட்டுமே சிரித்தான் உற்பத்திக்கு வழியில்லையெனில் கலப்படம் அவசியம்தானே,,, பச்சை நிறங்களை பார்த்தே...

Thursday, June 18, 2015

நன்றி சொல்ல வந்திருக்கிறேன் 200 பதிவுகள் முடித்த கையோடு,,,

எத்தனையோ இன்னல்கள் வந்தாலும் எழுதுவதை நிறுத்த மனமில்லை எனக்கு,,, தோழனே நீ எழுது நாங்கள் துணையாக நிற்கிறோமென்று ஏணிப்படியாய் எத்தனையோ முகங்கள் எத்தனையோ தளங்களிலிருந்து ஏற்றிவைத்து என்னை அழகுபடுத்துவதனால் எழுதுவதை உயிராகவே நேசிக்க இதயம் பழகித்தான் போனது . இவ்வாண்டில் (2015) 200 பதிவுகளை எழுதி முடித்திருக்கிறேன் அத்தனை பதிவுகளும் சராசரியாய் 100 பார்வையாளர்களுக்கு மேல் தாண்டியவை எனும்போது இரட்டை சந்தோஷம் எனக்குள் முளைத்துவிடுகிறது. ஆகவே நன்றி! சொல்ல...

Wednesday, June 17, 2015

பிரபஞ்சத்தின் காதலியவள்

தனிமையை தேடிப்போகிறாள் அவள் பூக்களை மேய்ந்து விட்டு இன்பத்தேனை சுவைத்துண்டதும் கண்டும் காணாமல் உதறித் தள்ளிடும் வண்டுகளாய் மேய்ந்த ஆண்மக்கள் விலைமகளென்று பெயரிட்டார்கள் அவளுக்கு நிர்வாண கோலத்தில் நிழலிருந்தாலும் அனல் பார்வை வீச்சால் அடைய துடிக்கிறார்கள் அவளின் அந்தரங்க உடல் பாகத்தை பார்வைகள் பலவிதமாய் ஒவ்வொன்றும் புதுவிதமாய் பட்டுத்தெறித்தன ரசனைகளின் வெளிப்பாடு பிடித்த பகுதிகளை அவர்களே தேர்வு செய்கிறார்கள் அவர்களே மதிப்பீடும் போடுகிறார்கள் போகப்...

Tuesday, June 16, 2015

லலித் மோ(ச)டி , நரேந்திர மோ(ச)டி நடுவில் சுஷ்மா

லலித் மோ(ச)டி , நரேந்திர மோ(ச)டி இரண்டு பேருக்கும் எந்தவொரு வித்தியாசமும் இருந்ததில்லை இதில் சுஷ்மா துண்டுச் சீட்டுபோல செயல்பட்டு லலித் மோடிக்கு விசா வழங்கியிருக்கிறார் அவ்வளவே ,, கண்ணுக்கெட்டிய தூரத்தில் குதூகலத்தோடு குற்றவாளியொருவன் திரிகிறானென்றால் அதுயெப்படி "தலைமறைவு" ஆகிவிடும் தேடப்படுவதில் தேவையற்ற அரசியல் இருப்பது நமக்கு புலனாகிறதல்லவா, எதன் அடிப்படையில் விசா வழங்குனீர்கள் எனக்கேள்வி எழுப்பினால் "நம்பிக்கை" அடிப்படையில் என்கிறார் சுஷ்மா ....

ஆர் கே நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் மகேந்திரனை பற்றி,,,(கம்யூனிஸ்ட்)

ஆர் கே நகர், இடைத்தேர்தல் சூடுபிடிக்கத் தொங்கியிருக்கிறது . வருகின்ற 27ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதால் இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலையும் அறிவித்தாகவிட்ட நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தோழர் மகேந்திரன் களத்தில் இருக்கிறார். ஏற்கனவே ஆளுங்கட்சியின் அதிகார பலமும், பண பலமும் தொகுதியில் ஆக்கிரமித்துள்ளதாலும­்,தேர்தல் அதிகாரத்தின் மீதான நம்பிக்கையின்மையாலும­் ஆர் கே நகர் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக, தி.மு.க.,...

தமிழ்ச் செய்தியாளர்களுக்கு வாழ்த்துக்களும் அதனோடு ஒரு இணையதள கவனஈர்ப்பும்

தமிழ்ச் செய்தி ஊடகத்துறையில் சிறந்ததொகுப்பாளர்கள் பட்டியலை http://www.thenewsminute.com/article/star-anchors-driving-tamil-tv-news-uprising  வெளியிட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சிஅளிப்பதாக இருக்கிறது . உலக நிகழ்வுகள் முதல் உள்ளூர் நிகழ்வுகள் வரை மக்களுக்கு பயன்படும் வகையில் தங்களின் உடலுழைப்பை சமூக சேவைக்காக அர்ப்ணிக்கும் சிறந்த தமிழ்ச் செய்தியாளர்களுக்கு நன்றியோடு வாழ்த்துக்களையும் தெரிவித்தல் நமது கடமையாகும்.அதே வேளையில் இதுஒருபுறமிருக்க இன்னொரு...

Monday, June 15, 2015

சாதி உங்களுக்கு என்ன செய்தது?

சாதியத்தை உயர்த்திப் பிடித்து சாதியானது சமூகத்திற்கு மிகத்தேவையென சுயசாதி பெருமைபேசும் மனிதர்களிடம், "சாதி உங்களுக்கு என்ன செய்தது?" எனும் கேள்வியை முன்வைக்கையில் எவ்வித சிந்தனைகளுக்கும் இடம்தராமல் பட்டென பதிலுரைப்பார்கள் ஒற்றை காரணத்தை,,, "சாதிதான் எங்களுக்கு கீழே அடிமைகளை உறுவாக்கித் தருகிறது" என்பதுதான் மனிதர்களின் வாயில் தெறிக்கும் பதிலாக இருக்கிறது. இங்கே சக மனிதனை அடிமைபடுத்துவதென்பது­­ மிகச்சரியானதுதானென வாதிடப்படுகிறது. சாதி சமூகத்திற்கு...

Sunday, June 14, 2015

(ஓமந்தூர்) ராமசாமி ரெட்டியின் சொந்த ஊருக்கு வந்த சோதனை

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சுதந்திர இந்தியாவில் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்து முதல் முதலமைச்சராக இருந்தவர். மார்ச்,1947 –ஏப்ரல் ,1949 வரையில் முதலமைச்சர் பதவியில் அங்கம் வகித்து பல்வேறு மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்தினார் .காந்தியத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இந்திய தேசிய காங்ரஸில் இடம்பெற்றிருந்த இந்து மத பற்றாளராய் இருந்திருக்கிறார்(கா­­ந்தியின் யுக்தி) கடைசிகால ஆன்மீகத்தில் ஈடுபாடென்று முடிகிறது அவரது பயணம் . விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்-புதுச்சேர­­ி...

Friday, June 12, 2015

மழைக் காதலர்கள்

கவலைகள் மறந்து கருவிழிகளை காற்றோடு அலைபாய விட்ட தருணத்தில் தவங்கலைந்த மேகங்கள் கண்ணீரின் தாகந்தணிக்க வந்திறங்கியதோ கழுத்துச் சுளுக்கிற்கு கவலைபடவில்லை கண்ணீரே தினம் காணும் சோக முகங்களிங்கே ஏராளம் சுகமளிக்க இறங்கி வரும் மழையே மான்போல துள்ளுகிறது மனது உனை பார்த்தவுடனே ஓங்கி எழும் பெருமழையில் ஒருதுளி மழைத் துளியை கண்ணத்தில் கசிய விட்டதில் கண்ணீர்க் குடம் நிரம்பி வழிகிறது இது கவலைகள் சுமந்த காலிக்குடமல்ல காதலை சுமந்த காட்டாற்று வெள்ளம் நிரம்பி வழிகிறது...

Wednesday, June 10, 2015

"நாம் தமிழர் கட்சி ஆவணம்" இதோ! இங்கே!

இதற்கு ஏன் இவ்வளவு ரகசிய பாதுகாப்பென்றே எப்போதும் தோன்றுகிறது. பல முறை வாசித்துவிட்டேன் "நாம் தமிழர் கட்சி ஆவணத்தை" எளிதாக கடந்து போகும் ஒன்றாகவே எடுத்தாளப்பட்டுள்ளது­ எழுத்துக்கள். பிறகு ஏன் நாம் தமிழர் இந்நூலை ரகசியப் படுத்துகிறார்களென்றா­ல் நூல் தாங்கிநிற்பது "இந்துத்துவம்" ஒன்றை மட்டுமே எனச் சொன்னால் அது மிகையாகாது. "நாம் தமிழர் கட்சி ஆவணம்" குறித்து பல்வேறு தரப்பினர்கள் தங்களின் விமர்சனத்தை கொட்டிவிட்டார்கள் என்கிறபடியால்,இந்நூல­ுக்கான விமர்சனத்தை...

Tuesday, June 09, 2015

சாதி இந்துக்களை எதிர்க்க "தேவை ஒற்றுமை"

மிக அவசரத்தின் முன்னேற்பாடாக தமிழகத்தில் "இந்துத்துவம்" வளர்த்தெடுக்கப் படுவதாக மட்டுமே நமது சிந்தனைகள் திசைமாறிச் செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். இன்று நேற்றல்ல தமிழகத்தில் பல நூற்றாண்டு காலமாகவே இந்துத்துவம் கால்பதித்துள்ளது. அதுவரையில் திராவிடத்தால் முறியடிக்கப்பட்ட நிலையில் இன்றிருக்கும் திராவிடமானது மெல்ல மெல்ல பார்ப்பானியம் பக்கம் தங்களை ஈடுபடுத்திக் கொண்டமையால்,இந்துத்துவமானது தன் மக்கள் விரோத போக்கினை வெளிப்படையாகவே அரங்கேற்றுவது நம் பார்வைக்கு...

Monday, June 08, 2015

(தடை நீங்கியது)அம்பேத்கர் , பெரியார் வாசிப்பு மாணவர் அமைப்பின் மீதான தடை நீக்கலும், இந்துத்துவ தொடர் பரப்புரை நிகழ்வுகளும்,,,

அம்பேத்கர் , பெரியார் வாசிப்பு மாணவர் அமைப்பின் மீதான தடையை சென்னை ஐஐடி நிர்வாகம் விலக்கியுள்ளதென்பது வரவேற்கத்தக்கதாக இருக்கிறது. சமத்துவம், சகோதரத்துவம் இம்மண்ணிற்கு மிக அவசியமான ஒன்றென்று உணர்ந்து பிளவுபட்டுக் கிடந்த முற்போக்காளர்கள் ஒற்றுமையுடன் கைகோர்த்து தோழமையை நிறுபித்து இந்துத்துவத்திற்கு எதிராக ஓரணியில் செயல்பட்டதால் "அம்பேத்கர்,பெரியார் வாசிப்பு மாணவ அமைப்பு" மீதான தடை உடைத்தெறியப்பட்டிருக­­்கிறது எனலாம், இந்த ஒற்றுமையின் பலத்தை கண்டு...

Sunday, June 07, 2015

அம்பேத்கர் உரையில் மும்பை வாழ் தமிழர்களுக்கான உரிமைக்குரல்

மும்பை வாழ் தமிழர்களின் உரிமைகளுக்காக புரட்சியாளர் அம்பேத்கர் பேசியது,,, ----------- சிறுபான்மையினரின் பண்பாட்டு உரிமை பற்றியும், அந்த உரிமையின்படி சிறுபான்மை மக்கள் தங்களின் தாய்மொழி வாயிலாகவே தத்தம் ஆரம்பகால கல்வியைப் பெற முடியுமா? இவ்வுரிமையை அடிப்படை உரிமையாக நமது அரசியல் சட்டம் அங்கீகரிக்கிறதா? என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. "சிறுபான்மையினர்" என்ற சொல், மத சிறுபான்மையினர் என்ற சொல்லோடு தொடர்புடையது அல்ல. மத சிறுபான்மையினரின்...

Saturday, June 06, 2015

கையில் ஒரு ரூபாய்

தெருவெங்கும் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் தாகம் தீர்க்கத்தான் நான் போனேன் கழிவுநீரால் வயிற்றுப்பசி அடங்கியதாய் தெரியவில்லை அத்தனை புழுக்களும் அடிவயிற்றை அடைத்துக்கொள்ள அதுகளுக்கேனும் உணவு தேட வேண்டுமே! கழிவு நீரில் என்னிரு கைகளை நுழைத்து துழாவிக் கொண்டிருந்தேன் துர்நாற்றம் தென்றலானது எனக்கு விடாமல் அலசி ஆராய்ந்ததில் எதுயெதுவோ என் கைகளில் சிக்க இதுவெல்லாம் இங்கே புழக்கத்தில் உள்ளதா! என்றெண்ணம் விட்டு விலகாத விழிகளின் குறியீடுகளை யாரும் கவனித்ததாய்...

Wednesday, June 03, 2015

வசந்தகால இரவொன்றில்,,,,

வசந்தகால இரவொன்றில் காற்றுக்கு இரையாகி சலசலக்கும் சலங்கையொலியை செவிகளுக்கு வந்துசேர தடையில்லாமல் இருப்பதென்னவோ என் ஜன்னலாகத்தான் இருக்கிறது கேளாய்! நீ! கேளாய்! சருகிலைகளின் இறுதிச் சடங்கொலியை கேளாய்! என ஜன்னல் எனை துணைக்கு அழைக்க தூக்கம் தொலைத்தேன் நான் எழுந்தேன் மெதுவாக சோர்வெனை சோதனைக்குட்படுத்த அதில் மீண்டெழ உடல் துடிப்பதை உணர்ந்தவனாக என்னை நானே தயார் படுத்திக்கொண்டேன் சருகுகளின் அழுகையோசை அப்போதும் என் செவிகளில் சூட்டுத்தன்மையை ஏற்படுத்திக் கொண்டேயிருக்க...

"விபச்சாரன்" பெண்ணியத்தின் கடைசி ஆயுதம்

நிகழ்காலத்து நவீன வரதட்சனைசீர்கேடானது வளர்ந்து கொண்டேச்செல்கிறதே தவிர குறையவாய்ப்பேயில்லை என்பதானசூழலை நாம் காண நேரிடுகிறது.கவுரவம் , அந்தஸ்து, ஆதிக்கம்,பணத்தாசை, அடிமைபடுத்தும்நோக்கம், போன்றவற்றால்பெண்ணினத்தைபிணையக்கைதியாகபார்ப்பதும்,வியாபாரப் பொருளாகபார்ப்பதும்,என்றுமே அடிமைபட்டவள் பெண் என்கிற தோற்றத்தைஉறுவாக்குவதும் ஆணாதிகத்தின்முதன்மைப் பணியாகவே இருந்துவருகிறது, அந்தவகையில்"வரதட்சனை"என்கிற பெயரில் ஆணாதிக்கம்பெண்ணினத்தைஅடக்கியாளுவதை ஒருகலையாகவே...

Tuesday, June 02, 2015

தமிழ்ச் செய்தி ஊடகங்களின் கவனத்திற்கு,,,

நமது தமிழ்ச் சமூகத்தில் மிகச்சிறந்த நன்னெறிகளில் ஒன்று "எதிரியையும் மதிக்கப் பழகு" என்பதேயாகும். இப்பொன்மொழியின் பொருள் விளக்கம் இன்றைய காலத்தில் கோனலாக புரிந்துணரப்படுகிறது­­. நமக்கு  எதிரியாக தென்படுபவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதையானது எதிரியையே மனமாற்றத்திற்கு ஊன்றுகோலாய் அமைய வாய்ப்பினை நாமே எதிரிக்கு உறுவாக்கித் தருதலின் மூலம் வீழ்த்திவிடலாம் என்கிறது முன்னோர் கொடுத்துவிட்டுச் சென்ற மேற்கண்ட பொன்மொழி.மற்றவரை நாம் மரியாதையுடன் அழைப்பதற்கு...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...