Friday, July 31, 2015

சசி பெருமாள் அவர்களின் மரணம் சாட்சி மது விலக்கிற்கு,,,

மது விலக்கு அமல்படுத்தக்கோரி "தற்கொலை செய்து கொண்டார் சசி பெருமாள்" என எழுதத் தோன்றவில்லை காரணம் காணெளி காட்சி அவ்வாறாக அமைந்திருக்கவில்லை ஊடகங்களால் "காந்தியவாதி" ஆக்கப்பட்ட சசி பெருமாள் தொடர்ந்து மதுவிலக்கிற்காக பல உண்ணாவிரத போராட்டங்களை நடத்தியவர். அதன்படியே மார்த்தாண்டம் பகுதியில் நீண்ட நாட்களாக இயங்காக்கொண்டிருந்த மதுக்கடையை அகற்றக்கோரி இன்று தீக்குளிப்பு போராட்டத்தை அறிவித்திருக்கிறார்.­ ஏற்கனவே சம்மந்தப்பட்ட மதுக்கடையை அகற்றுமாறு மதுரைக்கிளை...

நான் தமிழனென்று,,,

போபாலில் பலியானார்கள் அமைதியாய் இருந்தேன் நான் தமிழனென்று குஜராத்தில் கலவரம் நிகழ்ந்தது அமைதியாய் இருந்தேன் நான் தமிழனென்று,,, மும்பை முழுக்க எரிந்துக் கொண்டிருந்தது அமைதியாய் இருந்தேன் நான் தமிழனென்று பஞ்சாபில் படுகொலைகள் பிணங்களின் குவியல்கள் அமைதியாய் இருந்தேன் நான் தமிழனென்று,,, தெலுங்கானா தத்தளித்துக் கொண்டிருந்தது அமைதியாய் இருந்தேன் நான் தமிழனென்று,,, ஒடிசா ஒழித்துக் கட்டிக் கொண்டிருந்தது அமைதியாய் இருந்தேன் நான் தமிழனென்று ஒட்டுமொத்த இந்தியாவையும்...

யாகூப் மேமன் தூக்கு ஒரு அரசக்கொலை

இந்திய நீதித்துறையானது தனது நீதியை நிலைநாட்டும் நோக்கில் நிகழ்த்தப்பட வேண்டிய ஓர் உடனடித் தேவைக்கான அவசரமா? இல்லை இந்துத்துவத்தை வளர்தெடுக்கும் நோக்கம் கொண்ட உடனடிக் கொலையா? எனும் கேள்வி எழுகையில் முதற்கேள்வியை மண்ணில் புதைத்து விட்டு இரண்டாவது கேள்விக்கான பதிலை அரசக்கொலையாக தந்திருக்கிறது. இந்துத்துவத்தின் சூழ்ச்சமம் யாகூப் மேனனின் தூக்கில் அடக்கிவிட்டு சமநீதியை கயிற்றில் தொங்கவிட்டிருப்பது காலத்தின் கொடுமையெனச் சொன்னால் அது மிகையாகாது . டைகர் மேமனுக்குத்...

Wednesday, July 29, 2015

Dr.APJ.அப்துல்கலாம் மரணத்தின் போதெழும் விமர்சனம்

Dr.APJ.அப்துல் கலாம் உலகம் முழுக்க இந்தப் பெயரை உச்சரிக்கிறார்கள் ஓர் சாதனையாளனை பறிகொடுத்த சோகத்தோடு,,, குறிப்பாக இளைய சமூகமும்,மாணவச் செல்வங்களும் தங்கள் கண்ணீரால் அஞ்சலி செலுத்துவதென்பது அவர்களின் ஆழச்சிந்தனையில் கலாம் அவர்களின் எதிர்காலம் பற்றிய வல்லரசு கனவு இன்னமும் உயிரோடிருப்பதை நமக்கு எடுத்துரைக்கிறது. அவ்வளவு சாதாரணமாக அவரின் மறைவை எவராலும் கடந்துவிட முடியாது. ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை சிறுபான்மை சமூகத்தில் பிறந்த ஒருவர் வானத்தில் பறந்து...

Monday, July 27, 2015

புல்வெளிக் கதவுகள்

புல்வெளியில் என் பாதம் தொட்டு முத்தமிடுகையில் முனகிய சப்தங்கள் சங்கீதமாகின்றன முற்கள் சீண்டக்கூடாது இவனையென்று என் பாதச்சுவடுகளை பச்சைநிறம் பத்திரப்படுத்த பாதுகாப்பரணாய் புற்கள் புற்களிடம் பேசுகிறேன் பூத்த புன்னகையோடும் புல்லரித்த உடம்போடும் கொஞ்சம் அசட்டுத்தனாய் ஏதுமறியாத அழகியலாய் கேட்கிறது புற்கள் என்னிடத்தில் கேள்விகளை உனக்கேன் எனை பிடித்திருக்கிறது எனை ஏன் நீ நேசிக்கிறாய் முனுமுனுக்கும் புற்களிடத்தில் என் பதிலாய் வாய்திறந்தேன் வாய்த்திருக்கும்...

அவனுக்காக,,,

மிகுதியாய் சேர்ந்துவிட்ட அவனின் நினைவுகளை அப்படியே தக்கவைத்துக் கொள்கிறேன் எல்லா பூக்களின் ஆருதல் மொழிகளும் போதுமானதாய் இருக்கிறது இருந்தும் புறக்கணித்து விடுகிறேன் மணமயக்கும் மல்லிகையை அவனில்லாத நேரத்தில் என் கூந்தலுக்கேன் மல்லிகையும் அதன் மணமும் எங்கோ நெடுந்தூரம் சென்று விட்டான் எதுவும் சொல்லாமலே வாக்குறுதி வாயுவினிடத்தில் கடைசியாய் கரைந்தது என் காதல் சுமந்த கடலோரத்தில் வருவாயா என்று வழிபார்த்து காத்து கிடந்த காலத்தில் தொலைத்தேன் எனதிளமையை முதுமையை...

Sunday, July 26, 2015

உண்மை

உண்மையாய் நேசிக்கத் தொடங்கிய பொழுதுகளில் ஒருவரும் இல்லை உலகில் வெற்றிடம் நிரப்ப உண்மையை நேசிக்கத் தொடங்கினேன் விளங்காதவன் இவனென்று ஊரார் தூற்ற தோற்றத்தை நானிழக்கவில்லை துன்பம் எனை சூழ்ந்த போதும் உண்மையது சுமைதூக்கும் வாரும் ஐயனே மார்க்ஸிய தந்தையே வாழ்க்கை இதுவென நல்லுலகம் காண வழி நடத்துவீர் எனை நீயே வந்தேன் சரணடைந்தேன் உண்மையே சர்வமும் என நித்தமும் படித்துணர்ந்தேன் யாரிடம் எனக்கென்ன பகை இருந்தும் பகையாளி நானானேன் அவர்களிடத்தில் மதில் மீதெழுந்து தாண்டவமாடும்...

Tuesday, July 21, 2015

மழையின் மடியில்,,,

விசால தோற்றத்தில் ஒருதுளி மழைத்துளி எனை தீண்டிவிட்டுச் செல்ல திணறும் மூச்சுக்காற்றை திசையெங்கும் எடுத்துச் செல்கிறது எனக்காகவே பெய்யும் மழை அடர் இருட்டை கிழிக்கும் மின்னல் என் மகிழ்சி வெள்ள முகப் பொலிவை புகைப்படமெடுக்க நான் வைக்கும் தேநீர் விருந்துக்கு தேடித்தேடி கொடுத்தேன் அழைப்பிதழை அழகான மழைக்கும், படமெடுத்த மின்னலுக்கும், பார்த்து சிரித்த இடிகளுக்கும் ஆகாச வெளியில் மழைக்காகவே காத்திருக்கின்றன எத்தனையோ முகங்கள் அத்தனை முகங்களும் ஒரே நேரத்தில்...

ஜோதிராவ் பூலே "அனுபவம் பேசுகிறது"

"ஜோதிராவ் பூலே" இந்தியாவில் மறைக்கப்பட்ட வரலாற்றுப் பதிவுகளில் இவருக்கும் இடமுண்டு காரணம் ஜோதிராவ் பூலே அவர்கள் பெண் விடுதலைக்காகவும் பட்டியலின ஒடுக்கப்பட்ட தலித்தின மக்களுக்காகவும் பாடுபட்டார் என்கிற காரணத்தாலே அவரின் வரலாற்றுப் பதிவு ஆதிக்க இந்துத்துவ சக்திகளால் மறைக்கப்பட்டது. சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்கள் தன் குருவாக ஜோதிராவ் பூலேவை குறிப்பிடுகிறார் . அதுமட்டுமின்றி ஜோதிராவ் பூலே பயன்படுத்திய "தலித்" (Dalit) எனும் சொல்லை அப்படியே உள்வாங்கிக்...

நான்! குயில்! காதல்!

என் இமைகளை திறந்தே வைத்திருக்கிறேன் இரவில் தூக்கம் பிடிக்கவில்லை எனக்கு தூரத்தில் குயிலொன்று கூவக்கேட்டேன் தன் காதலியை பிரிந்த குயிலாக இருக்கலாம் துக்கம் தெரிந்தது அதன் குரலில் எனக்குள் ஆன வியப்பில் விழிகள் தானே பிதுங்கக் கண்டேன் இரவில் குயிலோசையா! குழந்தை மனமல்லவா அதற்கு! தனிமையில் நானிருப்பதாக உணரவில்லை துணைக்கு குயிலிருப்பதனால் நானும் அதுவும் பிரிந்த காதலால் ஒன்றானோம் இரவில் நான் விழித்திருக்க எனை பிரிந்த காதலியின் அழியாத நினைவுகளென்று குயிலுக்கும்...

ஈழம் "மாற்றமொன்றே மாறாததை" உடைக்கும்

விதியென்று விலகியதில் இழந்து விட்டோம் ஈழத்தை எங்களோடு இல்லை இன்று ஈழம் இழந்ததை மீட்க வாருங்கள் இன ஒற்றுமை வேண்டும் நம்மிடத்தில் எதையும் கடந்துபோவதை எதார்த்தமென பழகிய மனிதரிடத்தில் எங்கே மனிதாபிமானம் இறந்த தாயிடம் பால் தேடும் குழந்தைகள் கன்னி இழந்து சிதைந்த உடலோடு புதைகுழியில் பெண்கள் கிழந்த ஆடையால் கயிறு வெய்ந்து கட்டப்பட்டு கொன்றொழிக்கப்பட்ட ஆண்கள் கருவில் குழந்தையை கிழித்தெறிந்த வலியில் ஈழத்தாய்கள் இசைப்பிரியாவோடு இன்னும் எண்ணிக்கை கணக்கிடாத எத்தனையோ...

Saturday, July 18, 2015

காடுகளின் கண்ணீர்த் துளிகள்

காடுகளை வேட்டையாடி நகரத்தை கட்டிய மனிதன் காய்ந்த நதிகளின் மேல் அனல் சூழ்ந்த மணல்வெளிகள் எங்கும் காடுகளின் கண்ணீர்த் துளிகள் அதையும் திருடுவார்களே பிறவி மனிதர்கள் எனும் அச்சத்தில் உடனுக்குடன் உள்ளிழுத்து காடுகளின் கண்ணீரை சேமிக்கும் மிஞ்சிய மரங்கள் ரத்த வங்கியானதை இயற்கை அன்னை நன்கறிவாள் கட்டிப்பிடித்து தோழமை பாராட்ட தொலைவிலிருக்கும் வேர்களைத் தேடிக் கண்டுபிடித்து இயற்கை அன்னை முத்தமிடுவதை எப்படி நுகர்ந்தானோ தெரியவில்லை மனிதன் தொடங்கினான் மீண்டுமொரு...

பிணந்தின்னி மனிதர்கள் சூழ் தமிழகம்

மனித இனமானது தன் இனத்தை தானே உண்பதில்லை என்று நாமனைவருக்கும் தெரியும். அதில் சில நாடுகளுக்கு விலக்களிக்கலாம் . காரணம் ஆப்ரிக்கா,நைஜீரியா, போன்ற நாடுகளில் வாழும் பழங்குடியின மக்கள் மனிதர்களை உணவாக்கிக்கொண்டு வாழ்பவர்களாக இருக்கிறார்கள். இதில் மற்றொரு வகையினரும் இருக்கிறார்கள் , அவர்கள் உணவில் மனித உடலை இறைச்சியாக கலப்படம் செய்து கள்ளச்சந்தையில் விற்பவர்கள். விலங்கின இறைச்சியில் மனித உடலைச் சேர்த்து கள்ளச்சந்தைகளில் பணம் பார்க்கும் வகையினரும் பிணந்தின்னிகளாக...

Friday, July 17, 2015

அரசின் கொள்கையானது "டாஸ்மாக்" திட்டம்

"குடி குடியை கெடுக்கும்" என்றும் "மது வீட்டுக்கும் நாட்டிற்கும் கேடு" என்றும் எழுதிவைத்தாலும் சொட்டுகளைக் கூட வீணாக்காமல் குடிக்கும் தமிழனிடத்தில் அறிவுரை கூறிப் பயனில்லை என்றேச் சொல்லலாம். அனேகமாக அனைத்து டாஸ்மாக் எனும் மதுபானக் கடைகளுக்கு முன்னால் "இங்கே அறிவுரைகள் ஏற்கப்பட மாட்டாது,மீறினால் தண்டிக்கப்படுவீர்கள்­" எனும் அறிவிப்புப் பலகை காண நேரிடலாம். அதன் காலமும் வெகுதொலைவில் இல்லை. ஆளும் ஏகாதிபத்திய குணங்கொண்ட அதிமுக வாக இருக்கட்டும் அதனோடு எப்போதும்...

Thursday, July 16, 2015

ருசிதேடிய நாக்கு

பழுத்த கனிகளின் ருசிதேடிய பெருத்த உடலின் நாக்கு,,, சுவை விரும்பி சுற்றத்தாரை மிதித்து வாழ கற்றிருக்க,,, தன்பெருத்த உடலை தூக்கிக்கொண்டு திரிகிறது அச்சுவை விரும்பி,,, கடற்கரையெங்கும் நடைபயிற்சிப் பாதச் சுவடுக்குள் சிக்கித் தவிக்கும் சேர்ந்த கொழுப்புகள்,,, திசைகளெங்கும் காணவில்லை தேவைக்குதவும் கரங்கள்,,, நோக்கும் முகங்களெல்லாம் ஏதோவொரு ஏக்கங்களோடும், எதிர்பார்ப்புகளோடும்,,, பெருத்த உடல்களுக்கு மட்டும் அழகாய்த் தெரிகிறது உலகு,,, பழுத்த கனிகள் பார்த்தவுடன்...

M.S.V ஐயா! மன்னித்துவிடுங்கள்.இது சரியா?தவறா? தெரியவில்லை

தமிழிசைக்கு கட்டற்ற களஞ்சியமாக காலத்திற்கும் அழியாத இசையை தந்தளித்து தமிழுக்கும், தமிழிசைக்கும் மிகப்பெரிய தொண்டாற்றிய நம் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஐயா இம்மண்ணில் உயிர் துறந்தார் எனும் போது அதை ஏற்றுக்கொள்ளவும்,மனத­ிலேற்றிக்கொள்ளவும் மிகக்கடினமாகத்தான் இருக்கிறது. இசைப் படைப்பாளி ஒருவரை தமிழகம் இழந்து கண்ணீரால் நனைவதை காண முடியாமல் நம் தொண்டைகளில் துக்கம் அடைத்து ஆழ்மனதிலோர் அழியா மனவேதனையானது மரத்தில் அடித்த ஆணிபோல பாய்கிறது. தன் வாழ்நாள்...

Wednesday, July 15, 2015

Mr.மோடி எங்கே ஓடுகிறீர்கள்?

"இந்தியா ஒரு தீபகற்ப நாடு" என்பதை இனி யாரும் உச்சரிக்கப் போவதில்லை அதற்குப் பதிலாக "இந்தியா திருடர்கள் நாடு" என்றே அனைவரும் உச்சரிக்கப்போகிறார்க­ள். அந்த அளவுக்கிங்கே மலிந்து கிடக்கிறது ஊழல் . அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையின் மூலம் தனியார்மையம் உட்புகுந்து தங்களின் ஏகாதிபத்தியத்தால் இந்திய வளங்களைச் சுரண்டுதல்தான் வளர்ச்சியென்று பாமர மக்களை நம்பவைப்பதில் ஆளும் பிஜெபி அரசானது வெற்றி கண்டிருக்கிறதென்றால்­ இது அடிமைத்தனத்தின் உச்சமென உணர வேண்டும்...

Tuesday, July 14, 2015

புது விடியலோடு புது மழையும்

வான வெளிச்சத்தில் மழை கூடும் கண்டு ரசிக்க நீ!!! வர வேண்டும் புது விடியலோடு புது மழையும் சேர்ந்துனை அழைக்கிறது பூத்த மலர் புன்னகையோடும் பூத்துக் குலுங்கும் மலர்களோடும் மகிழ்ச்சியினை பகிர்ந்திடவே இயற்கையின் மனதோடு இணைந்து வாழ நீ வர வேண்டும் வெளியே வெளியே வா! பார் இந்த பூமியை இளங்காற்றோடும் இடி,மழை, மின்னலோடும் குளிர்ந்து கிடக்கிறது நம் பூமி நீயும் அதனோடு சேர்ந்து உன் மனதை குளிரச்செய்திடவே வா!!! வெளியே நமக்குத் தோழன் இந்த பூமிதானே வந்து நுகர்ந்துவிடு...

உழைத்து வாழ வேண்டும் - ஷீலா கோஷ்

ஷீலா கோஷ் என்கிற முதியவருக்கு தற்போது 87 வயதாகிறது இன்னமும் அவர் உழைத்துக் கொண்டிருக்கிறார். யாருடைய உதவியும்,அனுசரிப்பும் இன்றி தன் சொந்த உழைப்பில் உயிர் வாழ்கிறாரென்றால் தன்மானத்தில் கூட உழைப்பும் கலந்திருக்க வேண்டுமென்று நமக்கு அவர் உணர்த்துகிறார் என்றே பொருளாகும். இந்தியாவின் கிழக்குப்பகுதியான மேற்குவங்கம் மாநிலத்தில் பாலி என்ற ஊரில் வசிக்கும் இவரை 2012ம் ஆண்டு முகநூலில் ஒரு தோழர் பகிர்ந்திருந்தார் . அன்று கண்ட அதே உழைப்பு ,அதே சுறுசுறுப்பு அவரிடத்தில்...

Monday, July 13, 2015

"மாற்றம்,முன்னேற்றம்" பா.ம.க வின் விளம்பரமும்,ஊடகமும்

நேற்றைய தினத்தில் (12.7.2015) ஒரே நாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து செய்தி பத்திரிக்கைகளிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக தமிழகத்து முதல்வர் வேட்பாளராக? அறிவிக்கப்பட்ட தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் "மாற்றம்,முன்னேற்றம்­" என்கிற சொற்களோடு அவரது அதிகாரப்பூர்வ இணையதளமான www.anbumani4cm.comஐயும் சேர்த்து விளம்பரம் செய்யப்பட்டது . சமூக வலைதளங்களில் சாதியாதிக்கமும் தற்போது சேர்ந்துள்ளது தான் மாற்றம் ,முன்னேற்றமாகும் ஒரே...

பெண்சிசுக் கொலை

அனைத்தும் அமிர்தமென படைத்தாய் அதில் விஷவாடை அறியவில்லை நான் தாய்ப்பாலெது? கள்ளிப்பாலெது? பிரித்தெடுக்க முடியா அறிவெனக்கு என்ன செய்ய? அழுகிறேன் நான் பெண்ணாக இந்த பூமியில் நான்தான் பிறந்தது குற்றமா? வளர்ந்ததும் நானுமொரு தாயென என்தாய் மறந்தாளோ! மரணமே மடியேந்தி கேட்கிறேன் எனக்கொரு வரம் கொடு சுழலும் பூமிதனில் சுகமாக கூட நான் வாழ்ந்திட வேண்டாம் பெண்சிசு கொலை புரியும் சூழ்ச்சிகள் நிறைந்த மனங்களில் சுயநலமது வெனவும், குற்றச் செயலது வெனவும், செய்யாதே கொலை...

Sunday, July 12, 2015

பெத்த கடனுக்கு,,,

வெவரமில்ல வெலாசமில்ல வயித்துக்குள்ள நாயிருந்தேன் கொழந்தையா பத்து மாசமா தொப்புள் கொடியில ஊஞ்சல் கட்டி நானும் வெளையாடினேன் வலிச்சிருக்கும் ஒனக்கு சொகமா நீயும் அனுபவிச்ச அந்த வலிய ஒலகம் எப்படியிருக்குதுனு ஊட்டு வேல செஞ்சபடியே சொல்லி கொடுத்த எதையும் மறக்கல நான் எல்லாத்தையும் காதுல வாங்கி கடைசில எட்டி ஒதச்சேன் வயித்துல நான் ஒதச்சதுல வெளிய வர துடிக்கிறேன்னு நீ தெரிஞ்சி பிரசவ வலிய தாங்கின கவருமெண்ட்டு ஆஸ்பித்திரில நான் அழுதபடியே கெடக்கறேன் காரணம் எனக்கு...

Saturday, July 11, 2015

பெண்ணியத்தை அச்சுறுத்தும் காவல்துறை

ஆளும் அதிகார வர்க்கத்திடம் சமநிலையுள்ள நியாயத்தராசை எதிர்பார்ப்பதென்பது இயலாத காரியம் இதனை அதிகார அலட்சியம் எனலாம். அந்த வகையில் தமிழகத்தை ஆளும் அதிமுக வின் அதிகார அலட்சியமென்பது எப்போதும் பெண்களின் மீது கட்டவிழ்த்து விடப்படும் . ஒரு மாநில முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையானது சர்வாதிகாரத்தோடு ஏதேனும் தீயச் செயல்களை செய்து விடுமேயானால் அதற்கான பொறுப்புநிலை ஆட்சியிலிருக்கும் முதலமைச்சருக்கு உண்டென அறிக , அவ்வாறான பொறுப்பு நிலையிலிருந்து...

Friday, July 10, 2015

தமிழகத்தை பிரித்தாளும் சாதியாதிக்கம்

தமிழகத்தில் சாதியாதிக்கம் தலைவிரித்தாடுகின்ற போதெல்லாம் அதன் மீதான விமரிசனப் பார்வையானது இரண்டாக பார்க்கப்படுகிறது. வட தமிழகம்,தென் தமிழகம் என்று திசைகளை அடிப்படையாய் வைத்துதான் சாதியாதிக்க விமரிசனம் முன்வைக்கப்படுகிறது . சாதியமானது தன் பிரித்தாளும் பணியில் இருதிசைகளையே கொண்டிருக்கிறது என்றாலும் அதன் மீதான விமரிசன பார்வையில் அவ்வாறு பிரித்தாளப்பட வேண்டியதில்லை. சாதியத்தின் மீதான எதிர்ப்பினை தெரிவிக்கும் பொழுது திசைகளை மறந்து ஒட்டுமொத்த தமிழகத்தையே...

Wednesday, July 08, 2015

மதுவுக்கு அடிமையான சமூகம் மெய்பிக்கிறது சம்பவங்கள்

சமூகம் எங்கெல்லாம் பெருந்திரளாக கூடுகின்றதோ அங்கெல்லாம் தங்களின் வர்க்கச் சுரண்டலுக்காக அரசானது டாஸ்மாக் எனும் மதுகடைகளை திறந்து வைத்துக்கொண்டு வாருங்கள்! தமிழ்ச்சமூகமே உங்களின் மூளைகள் இங்கே விலைக்கு வாங்கப்படுமென்று,,, சந்தை விரித்து சங்கை அறுக்கும் கொலை குற்றப் பணியை செய்கின்ற வேளையில் சமூகமானது சீரழிந்துபோகத்தானே செய்யும். இதில் எவ்வித தயக்கமோ,பின்வாங்குதல­ையோ இதுவரை நாம் காண கிடைத்ததில்லை என்பதே குற்றத்திற்கான உடந்தையாகிறது. கோவை பள்ளி மாணவி...

Thursday, July 02, 2015

கடத்தல் கனவு

என் கனாவில் உனை கடத்திச் செல்கிறேன் நிதானமாக பாதையில் பாதி நிலவு அருகில் எனை அழைக்கையில் அதுதான் காதலென உணர்ந்தேன் நீரோடு காற்று காதல் வலை வீசுவதை இரவு அறிந்திருக்குமோ வெகுதூரம் போவதுபோல் உள்ளுணர்வு எனக்குச் சொல்லிவிட சட்டென விழித்துக்கொள்கிறேன்­ உடலெங்கும் வியர்வைத்துளிகள் விவரம் அப்போதறிந்தேன் உன் கனாவில் எனை கடத்திச் செல்கிறாய் அதே நிதானத்தோடு...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...