மிக சொற்ப சொற்களால் குறித்தெழுதும் கனவுகள் எனக்கு மட்டுமே
வாய்த்திருக்கிறதென எண்ணுகிறேன் ...
உனை காணும் பொழுதெல்லாம் தேனருந்தாமலே பூக்களின் மகரந்த வாசனையில் லயித்து மயக்கம் கொண்டு ...
சிரிக்குமந்த மலர்களிலே வீழ்ந்து கிடக்கும் ஒரு பட்டாம்பூச்சியின்
பிதற்றல் வார்த்தைகளில் ஒளிந்து கொண்டலையும் காதல் மயக்கம் கொள்கிறேன்...
என் நாடித்துடிப்புகளில்
இப்படித்தான் உன் மீதான காதல் ஒளிந்து கொண்டிருக்கிறது போலும் ...
nice
ReplyDeletePlease check my Blog
Buddha Quotes