Monday, January 11, 2016

தோழர் ஜீவா வை குழந்தைகளிடத்தில் கற்பிக்க வேண்டும்

தமிழ்ச் சமூகத்தில் நமது வருங்கால சந்ததிகள் ஏதுமற்ற ஓர் வெற்றுடம்பாவே
வளர்த்தெடுக்கப்படுகி­றார்கள். சரியான ஊட்டச்சத்து இல்லை, சரியான
உடற்பயிற்சி இல்லை, புத்தக வாசிப்பு பழக்கம் அறவேயில்லை, நமது
குழந்தையைகளை வெறும் இயந்திரபொருளாகவே நாம் மாற்றி வைத்திருக்கிறோம்.
பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகள் விளையாடுவதை தடை செய்கிறார்கள்.
அதைவிட ஒருபடி மேலே சென்று தொல்லைகள் தருகிறார்கள் குழந்தைகள் எனும்
குற்றசாட்டை அவர்களின் மீதே சுமத்தி அத்தொல்லையிலிருத்து விடுபட
கார்ட்டூன் சேனல்களை பார்க்கவைத்து புத்தக வாசிப்பினை முற்றிலுமாக
மறக்கடிக்கச் செய்து விடுகிறார்கள். இது முறையான குழந்தை வளர்ப்பு
இல்லையென்றாலும் அதையே நடைமுறையில் பின்பற்றுகிறார்கள். இதன் மூலம்
உடற்கூறு நோய்களால் அவதிப்பட்டு குழந்தைகளின் அறிவுத்திறனும்,சீரான­
உடற்கோப்பும் சிதைந்து போகிறது. இதன் பொருட்டு நமக்கு தோழர் ஜீவாவை போல்
குழந்தைகளை வளர்த்தெடுக்கப்படவேண­்டியதன் அவசியம் குறித்து கேள்வி
எழுகிறது. ஏனென்றால் ஓர் குழந்தை எப்படி வளர்த்தெடுக்கப்பட வேண்டும்
என்கிற பார்வைக்கு ஆகச்சிறந்த உதாரணமாக ஜீவா இருக்கிறார் . எத்தனையோ
தலைவர்கள் இருக்கையின் ஏன் ஜீவாவை சுட்டிக்காட்ட வேண்டும் என கேட்கலாம்,
காரணம் ஜீவா என்கிற ஜீவானந்தம் வரலாற்றில் மறைக்கப்பட்ட தலைவர்களுள்
ஒருவர், அவரின் வரலாற்றை நமது குழந்தைகளுக்கு கற்பித்தல் அவசியமாக
இருக்கிறது. அதற்கும் காரணமுண்டு ஜீவா ஒரு பண்முகக் கலைஞர் , அவரை
வாசித்தால் மட்டுமே அது விளங்கும்.

தமிழகத்தின் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவரான கம்யூனிஸ்ட் விடிவெள்ளியான
ஜீவா என்கிற ஜீவானந்தம் தனது குழந்தை பருவத்தில் புத்தகங்களை வாசிக்கும்
பழக்கத்தை கொண்டிருந்தார் . அறிவை வளர்ப்பதற்கு ஜீவா எவ்வளவு அக்கறை
காட்டினாரோ , அவ்வளவு அக்கறை உடலை செம்மைபடுத்துவதிலும்­ செலுத்தினார்.
சிலம்பம்,வாள்வீச்சு,­குஸ்தி,ஓட்டம்,தாண்டு­தல்,தாவுதல் முதலிய
விளையாட்டுகளில் இளைஞர்கள் பயிற்சிபெற "அனுமார்களரி" என்ற உடற்பயிற்சி
பள்ளியை பூதப்பாண்டில் அமைத்தார் . மேலும் விளையாட்டின் மீதுள்ள அதீத
ஆர்வம் காரணமாக "விவேகானந்தர் ஃபுட்பால் டீம்" ஒன்றை உறுவாக்கி ஜீவா
சிறப்பாக நடத்தினார். பள்ளியில் நாடகங்கள் நடத்துவது, இலக்கிய மன்ற
கூட்டங்களை நடத்துவது,யோகாசன பயிற்சியளிப்பது போன்றவற்றில் தீவிரமாக
தம்மை ஈடுபடுத்திக்கொண்டார்­.ஜீவா இளமையிலேயே சாதி வேற்றுமைகளை தாண்டி
அனைத்து சாதியினரிடம் நட்பாக இருப்பார். அது தீண்டாமை கோலோட்சிய காலம்
ஆலயப் பிரவேச உரிமை தாழ்த்தப்பட்ட சாதியர்க்கு வழங்கப்பட வில்லை,கோவில்
திருவிழா தொடங்கியதும் ஆதிக்கச்சாதியனர் தெருக்களில் "தெருமறிச்சான்"
தட்டி கட்டி "விழா தொடங்கியது" என்று அறிவிப்பு வைத்து விடுவார்கள் .
அதன் பிறகு , விழா முடியும்வரை அந்த தெருக்களில் தாழ்த்தப்பட்ட சாதியினர்
நுழைய முடியாது, ஆனால் ஜீவா தன்னுடைய தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த
மண்ணடி மாணிக்கம் என்பவரை "தெருமறிச்சான்" தாண்டி ஊருக்குள்ளும்
கோவிலுக்குள்ளும் அழைத்துச் சென்றார் . ஊராரின் கண்டணத்துக்குள்ளான
போதும் தன் நிலையிலிருந்த ஜீவா பின்வாங்கவில்லை . அந்த வகையில் அவர் இளம்
பருவத்திலேயே சமூக சிந்தனையை வளர்த்துக்கொண்டு நாஞ்சில் நாட்டு ஆலயப்
பிரவேசப் போராட்டத்தின் முன்னொடிகளில் ஒருவராக தம்மை அடையாளப்படுத்திக்
கொண்டார். தோழர் ஜீவாவை போல நம் வருங்கால இளைய தூண்களை வளர்த்தெடுக்க
வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...