Monday, June 06, 2016

பார்ப்பானிய இந்து தீவிரவாதிகளின் மாட்டரசியலும் , மனிதத் தன்மையற்ற செயல்களும்,

மாட்டின் கோமியத்தை குடித்து குடித்து மதியிழந்தவர்களிடம்
மனிதத்தை எதிர்பார்க்க முடியுமா? இந்தியாவில் ஆர்எஸ்எஸ் பார்ப்பானிய
இந்துக்களால் முன்னெடுக்கப்படும் மாட்டிறைச்சி தடை அரசியலில் முக்கியமாக
அவர்கள் முன்னிலைபடுத்தும் உள்நோக்க அரசியல் என்பது ஒன்று "தலித்துகளை
அடக்கியாளுதல்" இன்னொன்று "இசுலாமியர்களுக்கு எதிராக கவனம் திருப்புதல்"
இந்த இரண்டு உள்நோக்கக் காரணங்கள் இன்றி மற்ற நன்மதிப்பிலான காரணங்களை
பார்ப்பானிய இந்துக்களிடம் இல்லை, உண்மையில் பசுவை புனிதமாக கருதி
மாட்டிறைச்சியை தடை கோருவதென்பது மிகப்பெரிய முட்டாள்தனம் என்றும்
அவ்வாறு தடையை ஏற்படுத்தினால் பெரும்பாலான இந்துக்கள் அதை ஏற்றுக் கொள்ள
மாட்டார்கள் என்றும் நிச்சயமாய் பிராமணியத்திற்கு தெரியும், அவ்வாறு
தெரிந்திருந்தும் குறிப்பிட்டு தலித்துகளையும், இசுலாமிய சிறுபான்மை
சொந்தங்களையும் குறிவைத்து இந்த மாட்டிறைச்சி தடை அரசியல்
நகர்கிறதென்றால் மனுதர்மத்தை? முன்னிலைபடுத்தவும், இசுலாமியர்களை
இந்துக்களுக்கு எதிராக கட்டமைத்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றவுமே இந்த
மாட்டிறைச்சி தடை அரசியலை நிகழ்த்துகிறார்கள் என்பது தெளிவு. உண்மையில்
தலித் மற்றும் இசுலாமியர்கள் மட்டுந்தான் மாட்டிறைச்சி உண்ணுகிறார்களா?
கிறித்தவமும் இசுலாமும் தோன்றுவதற்கு 1500 ஆண்டுகள் முன்னதாகவே, மாடுகளை
யாகத்தில் பலியிடுவதும் புரோகிதப் பார்ப்பனர்கள் அவற்றை உண்டு
கொழுப்பதும் எல்லை மீறிய அளவில் நடந்துள்ளன. ரிக் வேதத்தில் தொடங்கி
இராமாயணம் வரையிலான பலவற்றிலும் பார்ப்பனர்கள் பசு மாமிசம் தின்றது
பலவிதமாக விளக்கிக் கூறப்பட்டிருக்கிறது.­­ இதனை அம்பேத்கர்,
டி.டி.கோசாம்பி, டி.என்.ஜா முதலான ஆவாளர்கள் ஆதாரங்களுடன்
விளக்கியிருக்கிறார்க­ள். விவேகானந்தரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
பிறகான சமணம், பௌத்தம் இந்தியாவில் காலூண்றும் நேரத்தில் மாட்டிறைச்சி
தின்பதிலிருந்து தங்களை விடுத்துக் கொண்டார்கள் பார்ப்பானர்கள். அதன்
பிறகே சைவ நிலைப்பாட்டில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு ஆரம்பம் முதலே
தாங்கள் (பார்ப்பனர்கள்) சைவத்தை கடைபிடிப்பவர்களென்று­ பல்வேறு
கட்டுக்கதைகளை புனைய ஆரம்பித்தார்கள் அது இன்றுவரையில் தொடர்ந்து
புனையப்பட்டும் வருகிறது. இந்தியாவின் புலால் உற்பத்தி ஆண்டுக்கு 63
லட்சம் டன்னாக இருக்கிறது. இதில் 40 இலட்சம் டன் மாட்டுக்கறிதான். 22
லட்சம் டன் இந்தியாவில் உண்ணப்படுகிறது. 18 லட்சம் டன் ஏற்றுமதி
செய்யப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் பரவலாக மாட்டிறைச்சி
உண்ணப்படுகிறது என்பது தெளிவு .அதில் தலித், இசுலாமியர் அல்லாத
பெரும்பான்மை இந்துக்கள் உள்ளடக்கம். உலகில் மாட்டுக்கறி ஏற்றுமதியில்
பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியாவின் முன்னணி
மாட்டுக்கறி ஏற்றுமதி நிறுவனங்கள் ஆறில் நான்கின் முதலாளிகள் பார்ப்பன
இந்துக்கள். அவற்றில் மும்பையை தலைமையிடமாக கொண்ட இரண்டு நிறுவனங்கள்,
அல் கபீர், அரேபியன் எக்ஸ்போர்ட் என்று இசுலாமியப் பெயர்களைச் சூட்டிக்
கொண்டிருப்பதை முஸ்லிம் மிர்ரர் இணையதளம் வெளிக்கொணர்ந்தது.
பத்திரிகையாளர் வீர் சங்வி இதனை நிரூபித்திருந்தார். அவ்வாறு இருக்கையில்
பார்ப்பன இந்துத்துவ சக்திகள் பசுவின் பாதுகாவலர்கள் எனச் சொல்லி
ராஜஸ்தான் மாநிலத்தில் சோட்டி சத்ரி பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள
சிட்ரோகர் வழியாக வியாபாரத்திற்காக 50 மாடுகளை ஏற்றிவந்த வாகனத்தை
மறித்து அதிலிருந்த இசுலாய ஓட்டுனர் மற்றும் மூவரை காவல்துறையினரின்
கண்முன்னே நிர்வாணப்படுத்தி கொடூரமாகத் தாக்கி தன் இந்துத்துவ
தீவிரவாதத்தை காட்டியிருக்கிறது பசு பாதுகாப்பு இந்துத்துவ அமைப்புகள்.
இரக்கமற்ற முறையில் அரக்கத்தனமாக சித்திரவதைகள் மூலம் முஸ்லிம் இளைஞர்கள்
கொடுமைப்படுத்தியது மட்டுமல்லாது கடும் தாக்குதலுக்கு உட்பட்ட லாரி
ஓட்டுனர் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இந்து தீவிரவாதம்.
வரலாற்று நிபுணர் மற்றும் எழுத்தாளர் டி.என்.ஜா தனது 'புனிதப்பசு எனும்
கட்டுக்கதை' (The myth of the holy cow) புத்தகத்தில் மாடு புனிதம்
என்பதை விரிவான வரலாற்று ஆதாரங்களுடன் மறுத்துள்ளார். அவர் பிரண்ட்லைன்
இதழில் தனது பேட்டியிலும் இதனை ஆணித்தரமாக குறிப்பிட்டுள்ளார் . அப்படி
இருந்தும் இந்திய நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கின்ற வகையில்
இந்து பாசிசங்கள் மோடி கும்பலின் பேராதரவோடு தங்களின் தீவிரவாதத்தை பசு
பாதுகாப்பு என்கிற பெயரில் முன்னெடுத்துச் செல்வதும் , உண்ணும் உணவில்
வண்மத்தை தெளிப்பதும் மிகவும் மோசமான நிலைக்கு இந்தியாவை இட்டுச்
செல்லும். பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் மாட்டிறைச்சித் தடைச் சட்டத்தை
நிறைவேற்றுவதிலும் தண்டனையைக் கடுமையாக்குவதிலும் பா.ஜ.க. மாநில அரசுகள்
ஒன்றோடொன்று போட்டி போடுகின்றன. மாட்டை வெட்டினால் மகாராட்டிரத்தில் 5
ஆண்டு சிறை, மத்திய பிரதேசத்தில் 7 ஆண்டுகள், அரியானாவில் 10 ஆண்டு வரை
கடுங்காவல் தண்டனை. மாட்டை விற்கும் விவசாயி தொடங்கி, வாங்குபவர், வாகன
ஓட்டிகள், வெட்டுபவர், சமைப்பவர், சாப்பிடுபவர் உள்ளிட்ட அனைவரும்
இச்சட்டங்களின்படி தண்டனைக்குரிய குற்றவாளிகள். மாட்டுக்கறி
வைத்திருப்பதாகவோ, சாப்பிடுவதாகவோ சந்தேகப்பட்டால் ஒரு காவல்துறை அதிகாரி
வீடு புகுந்து சோதனை செய்யலாம். எனும் சட்டமும் இங்கே நடைமுறைக்கு
வந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது. ஆக இந்திய தேசம் இந்துதேசமாக
சர்வாதிகார மதத்தின் அடிப்படையில் கட்டமைக்கவே இவர்கள் முற்படுகிறார்கள்
என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...