எந்தன் கண்கள் முன்னே
தினம் வகையான வேட்டை நாய்களை காண்கிறேன் ...
பார்வைகளில் கூட கொலை
செய்தும் , ஆடையினில் ஒளிந்தும் கூர்முனை கத்தியாய்
இறங்கும் அந்த வேட்டை நாய்களின்
பார்வைகள் ...
எல்லாம் கடந்து கூச்சங்கள் சூழ
கூடு அடையும் பொழுதுகளில் கூட
என் வீட்டிலும் சூழ்ந்து கொண்டு தானிருக்கிறது வேட்டை நாய்களின் பார்வைகள் ...
தனிமையில் ஆழ்ந்து அழுது
தலையணையால் தேகம் மறைத்து
மடக்கி , சுருண்டு கிடந்தும்
நினைவுகளின் வழியே எனை வேட்டையாடித்தான் போகிறது வெறி நாய்கள் ...
இப்பொழுதெல்லாம் ஆடைகள் விலகினாலும் கூசுவதில்லை
எனக்கு ...
பழகிப்போன வேட்டை நாய்கள்
பவ்வியமாக இரையை (என்னை)
கவ்வுகின்றன ...
பதிலுக்கு சில துண்டுகள் என
பழகிவிடுதாலோ , என்னவோ !
வேட்டை நாய்கள் குதறி இழுத்த
சதையின் மிச்சம் நான் எனும் பெருவலியோடு ...