Sunday, July 19, 2020

ஓர் 1000 பார்வையிலே


மின்னல் பொழுதில் விழிகளை சுழற்றி சட்டென மறையும்
உன் கண்ணிமைதனில் எனை கண்டுவிட்டேன் ...

போதும் ...  என நினைக்காத மனதிலெழும் பரிதவிப்புகளினூடே
வேண்டும் வேண்டும்
மீண்டும் மீண்டும் என்றே 
நின் பார்வையில் நான் சிறகு முளைத்து பறந்துவிட
துடிக்கிறேன் ....

சாரளமோ , கதவிடுக்கோ
மதில் சுவரோ , மாடியோ
 வண்ணங்கள் இல்லா  சித்திரம் என
வாடி உருகும் பனித்துளிபோல
நீயற்ற இரவுகளை கடக்கிறேன் ...

பூக்களின் மகரந்தம் 
மென் காற்றில் மிதந்து மிதந்து
புதியதாய் மண்ணில்
துளிர்விடும் அழகினை கண்டு
துள்ளல் எழ ... 

உனக்குள் நானும் துளிர் விடவே
தினம் நீ பார்க்கும்
ஓராயிரம் பார்வையிலே 
ஒவ்வொன்றாய் காற்றில் மிதக்க விடுகிறேன் ....

ஒரு கோப்பை தேநீர்





சிறு தூறலில் தொடங்கி அடைமழைக்கு வெளியே
இடியும் மின்னலுமாக
வெட்டுண்டு கிடக்கும் வான்வெளியில் மையல் கொண்டு ...

கார்மேகம் ஆடையினை துறக்க
மழைக்கு பிறகான சிறு சிறு மழைத்துளிகள் மண்வாசத்தில்
உள்நுழைவது போல....

எல்லா பூக்களும் சாயம் போகாது
தன் இருப்பை தக்க வைக்கும்
ஒரு அழகிய பிரபஞ்சத்தின் தோற்றம்
இந்த  இயந்திர வாழ்வுதனை விழுங்குதல் கண்டு ....

கண்களில் வானவில் நிறங்களை பூசிக்கொண்டு 
இறுக்கி பிடித்திருந்த ஆன்மாவின்
அயர்ச்சி விரட்டி
தன் இயல்புக்குள் நுழைந்து
ஆத்மார்த்தமான மனம் போல 
மலர்ந்து மணம் வீசும்
நீல வானம் பார்த்தபடி
சாளரத்தில் எழுதிவைத்த அத்துணை கவிதைகளையும் நுகர முடியுமெனில்
அவசியமாய் கையில் ஏந்தி பிடிக்க
வேண்டியிருக்கிறது

ஒரு கோப்பை தேநீரை ...

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...