மின்னல் பொழுதில் விழிகளை சுழற்றி சட்டென மறையும்
உன் கண்ணிமைதனில் எனை கண்டுவிட்டேன் ...
போதும் ... என நினைக்காத மனதிலெழும் பரிதவிப்புகளினூடே
வேண்டும் வேண்டும்
மீண்டும் மீண்டும் என்றே
நின் பார்வையில் நான் சிறகு முளைத்து பறந்துவிட
துடிக்கிறேன் ....
சாரளமோ , கதவிடுக்கோ
மதில் சுவரோ , மாடியோ
வண்ணங்கள் இல்லா சித்திரம் என
வாடி உருகும் பனித்துளிபோல
நீயற்ற இரவுகளை கடக்கிறேன் ...
பூக்களின் மகரந்தம்
மென் காற்றில் மிதந்து மிதந்து
புதியதாய் மண்ணில்
துளிர்விடும் அழகினை கண்டு
துள்ளல் எழ ...
உனக்குள் நானும் துளிர் விடவே
தினம் நீ பார்க்கும்
ஓராயிரம் பார்வையிலே
ஒவ்வொன்றாய் காற்றில் மிதக்க விடுகிறேன் ....