Saturday, February 27, 2016

பாமக அன்புமணி அவர்களே! இதுதான் மாற்றம் முன்னேற்றமா?

ஒரு கட்சியின் தலைமை என்பது தன்கட்சி சார்ந்த தொண்டர்களை
நல்வழிபடுத்துதல், நேர்மையை புகுத்துதல், ஒழுக்கத்தை கற்பித்தல்
என்பவற்றில் ஆக்கப்பூர்வமாக தன்னைத்தானே அர்ப்பணித்து கொண்டு அரசியல்
புரிவதுதான் சிறந்த தலைமையாக இருக்க முடியும். ஆனால் பாட்டாளி மக்கள்
கட்சி அதிலிருந்து விலகி மீண்டும் மீண்டும் ஆண்டைகள் பெருமை பேசி
தமிழத்தில் வலம் வருகிறது என்பதற்கான மதிப்பீடுகளுக்கு பெயர்பெற்று
விளங்குகிறது. இன்று (27.02.2016) அந்த கட்சியின் மாநில மாநாடான
"பாட்டாளி மக்கள் கட்சி எழுச்சி மாநாடு" என்பதால் காலையிலிருந்தே பல்வேறு
மாவட்டங்களிலிருந்து பலதரப்பட்ட வாகனங்கள் மூலம் சென்னை வண்டலூருக்கு
பயணபட்டார்கள் பாமக நிர்வாகிகளும், தொண்டர்களும்,,, அவ்வாறு வாகனங்களில்
வருவோர்கள் கத்துவதும்,கூச்சலிடு­வதும், ஆர்ப்பரிப்பதும் இயல்பான
ஒன்றுதான். அது மகிழ்சியின் வெளிப்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
ஆனால் அதுவே எல்லை மீறுகையில்?,,, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை
வழியாகத்தான் அனேக வாகனங்களும் வண்டலூர் பாமக மாநாட்டிற்கு சென்றது.
அவ்வாறு செல்லும் பாதையில் சுமார் இருபத்தைந்து நபர்களை ஏற்றிக்கொண்டு
வந்த ஒரு வேன் திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கல்லூரி மாணவிகளை
ஏற்றிக்கொண்டுவந்த தனியார் கல்லூரி வாகனத்தை நிறுத்தி ஒரே இறைச்சலோடு
மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்த வண்ணம் பிரச்சனை செய்து கொண்டிருந்தது.
தற்செயலாக அவ்வழியே வந்துக்கொண்டிருந்த நான் இதனை கவனிக்கையில் பதட்டமாகி
என்னசெய்வதென்று அறியாமல் அக்கம்பக்கத்து குடியிருப்புக்கு சென்று ஆட்களை
கூட்டிக்கொண்டு சம்பவ இடத்திற்கு சென்றேன். விசாரிக்கையில் சுமார் மூன்று
கிலோமீட்டர் துரம் தொடர்ந்து கல்லூரி வாகனத்திற்கு வழிகொடுக்காமலும்
பக்கவாட்டில் சன்னல் வழியாக கல்லூரி மாணவிகளை கிண்டலடித்தும்
வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் முடியாமல் கல்லூரி வாகன ஓட்டுநர்
அவர்கள் முந்திச்செல்லட்டும் என்று வாகனத்தை நிறுத்திவிட்டார். அப்போதும்
நிறுத்தப்பட்ட கல்லூரி வாகனத்தின் பக்கவாட்டில் தன்வாகனத்தை நிறுத்தி
சராமாரியாக கேலிசெய்துள்ளனர். நானும் கூடியிருந்த ஆட்களும் சென்று
நிலமையை புரிந்து கல்லூரி வாகனத்தையும் பாமக மாநாட்டிற்கு செல்லும்
வாகனத்தையும் வழியனுப்பி வைத்தோம். பாமக மாநாட்டிற்காக வந்த வாகத்தின்
முற்பக்க கண்ணாடியில் கடலூர் வடக்கு பாமக என்றழெழுதப்பட்டிருந்­தது.
அனைவருமே மது அருந்தியிருந்தது எனக்கும் கூடியிருந்தோருக்கும்­ பெரும்
அதிர்ச்சியாய் இருந்தது. இந்தளவிற்கு தன்கட்சி தொண்டர்களை வைத்திருக்கும்
பாமகவிற்காக வேதனை மட்டுமே தெரிவிக்க முடிகிறது. மேலும் அக்கம்
பக்கத்தில் நான் அழைத்த ஆட்கள் அனைவருமே வன்னியர் சமூகத்தை
சார்ந்தவர்கள்தான் , அவர்களும் இந்த பேரதிர்ச்சியிலிருந்த­ு
மீளாதவர்களாய் கலைந்து சென்றார்கள். தன்னை தமிழ்நாட்டின் முதல்வர்
வேட்பாளராக அறிவித்திருக்கும் டாக்டர் அம்புமணி அவர்கள் தங்கள் சார்ந்த
கட்சி தொண்டர்களை முறையாக வழிநடத்த வேண்டியது அவருக்கான முதன்மை கடமையாக
இருக்கிறது.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...