Thursday, April 30, 2015

24 மணிநேரமும்

கல்லெறிந்த நதியில் கானக்குயிலோசை காதல் நினைவுகளாக ___ செடி நட்டயிடம் தெரியவில்லை இங்கே வாருங்களேன் பறவைகளே! ___ பட்டத்து யானை வீதியில் பிச்சையெடுக்கும் நாடோடிகளாய்! ___ இலை சேர துடிக்கிறது புதுவரவு தளிர்களுக்கு தாயாக இன்னும் வாழ்ந்திட வேண்டும் மரங்கள்,,, ___ ஆடையில்லா குடிசையில் கசிந்த குருதி கருணை மறந்து விதி விளையாடியதாம் ஏழையினடத்தில் ____ காய்ச்சலோடு விடிந்த காலை மருந்துண்ண பணமில்லை இருபத்து நான்கு மணிநேர சேவை வேண்டும் அடகு கடைகளுக்கு ___ உருட்டும்...

அவனுக்கு தாயான இயற்கையன்னை

அமைதியின் அணிவகுப்பாய் தெருக்களெங்கும் தேங்கி கிடக்கும் நிசப்த அலைகளில் அவன் மெதுவாய் அண்ணநடை போடுகிறான் அழைப்பிதழ் யாருக்கும் தரவில்லை அவன் இருந்தும் அவனது இன்ப மயமான வரவேற்பிற்கு வந்து சேரும் இளங்காற்றிற்கு முகமலர்ந்து விருந்தோம்பல் புரிகிறான் புரியாத புதிர்கள் ஒவ்வொன்றாய் புலப்படுகையில் பூமித் தாயின் மடியில் உறங்கி விட துடிக்கிறான் அவன் அனைத்தும் அவனுக்கு முன்னால் அணிவகுத்து நிற்க புதியதொரு பறவையின் சிறகாய் பறக்க துடிக்கிறான் பாவங்கள் எதுவும்...

பூகம்ப புல்வெளிகள்

அடிவிழுதுகளில் அடிவிழுகிறது எதுவும் நிரந்தரமில்லை சொல்லிவிட்டுச் செல்லும் நேபாள பூகம்பம் புரியவைக்கும் இயற்கை சீற்றத்திற்கு நடுவே சிக்கிய உயிர்களுக்கு ஒருதுளி கண்ணீர் போதாதுதான் ஓ!!! வென அழுதுவிடுகிறேன் அன்றே அழிக்காதே இயற்கையை என்றேன் அதன் வழிதனில் குறுக்கிட்ட குறுக்குப்புத்தி கொண்டவர்கள் நாமல்லவா அதிரும் பூமியில் அழுதொன்றும் பயனில்லை இப்போதெனும் இயற்கையை நேசித்துவிடு நமதுள்ளங்களில் துள்ளியெழும் துர்நாற்ற எண்ணங்களை தூரே எறிந்துவிட்டு துன்பம் பகிர்ந்து...

Sunday, April 26, 2015

அப்படி பார்க்காதே நரியே!

போராடத் துணிவின்றி போர்வைக்குள் சிறை கொண்டிருக்கிறேன் பிறந்த மண்ணின் மீது பற்றில்லை எனக்கு என் சிந்தனைகளை நாளும் தொலைத்துவிட்டு நானுமிங்கே நடுவீதிக்கு வந்துவிட்டேன் என் நாட்களையும் நரிதின்று போட்டிருக்கிறது எலும்புத் துண்டுகளாய் எதுவும் மிச்சம் வைக்காமல் தின்ற நரிக்கு என்நன்றிகள் எனை தின்றுப் பெருத்ததில் தவறேதும் உங்களிடமில்லை புரட்சி மறந்தேன் பூமியை தொலைத்தேன் உழைப்பை மறந்தேன் உணவையும் உடையையும் உறங்குமிடத்தையும் தொலைத்தேன் உலகத்து அன்பை மறந்தேன்...

அந்திமாலை

மோகத்திரை கொண்டு கைகளால் முகத்தை மறைக்கத் தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறேன்,,, திரண்டு வந்து என்மடியில் குழந்தையாகிவிடும் அந்திமாலை வானத்தை,,, அனுவனுவாக கொஞ்சி முத்தமிடுகிறேன்,,, மோகமின்னும் தீர்ந்தபாடில்லை மேகமின்னலை எடுத்து வாருங்கள் ஊஞ்சலாய் கட்டிவிட்டு உறங்க ஒரு தாலாட்டும் நான் பாடிட வேண்டும் அந்திமாலை குழந்தைக்காக,,, அதோ!!! கண்களை திறந்து சமீபத்துச் சாம்பலெடுத்து முகத்தினில் பூசிக் கொள்கிறேன்,,, எனைக் கொன்றுத் திண்றிட சுதந்திரமும் தந்து விட்டேன்...

Friday, April 24, 2015

யாரிந்த "லீலாவதி" சிந்தனைககளும், நினைவனுசரிப்பும்

தோழர் "லீலாவதி" இந்தப்பெயரை இடதுசாரிகளே இன்று மறந்துபோனது மிக வருத்தமானதொன்றாகும்.­ தன் சீறிய மார்க்ஸிய சிந்தனையால் மதுரை மாநகரை அச்சப்பட வைத்ததுமின்றி ஒட்டுமொத்த பெண்ணினத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழின மார்க்ஸிய சிந்தனைவாதிதான் தோழர் லீலாவதி . தன்னோடல்லாமல் தான் பெற்ற மார்க்ஸிய சிந்தனையை தமிழ்ச்சமூகத்திற்கு அற்பனித்த சிந்தனைவாதி, பெண்ணடிமையின் ஒரு பகுதியான "பெண்ணானவள் வீட்டிற்குள் முடங்கியிருக்க வேண்டும்" என்கிற பொதுபுத்தி பிற்போக்குச்...

BJP நாராயணா வாந்திகள் பெண்ணடிமை பேசுகிறது

இந்தியாவில் வளர்ந்து விட்ட இயக்கமான ஆர் எஸ் எஸும் அதனை வளர்த்தெடுக்க துடிக்கும் பிஜெபி இந்துத்துவமும்(ஆம் இரண்டுமே வளர்ச்சியை நோக்கி எப்போதோ முன்னேறிக்கொண்டிருக்­கிறது) தொடர்ந்து பெண்ணினம் மீதான காழ்ப்புணர்ச்சியினை கக்கிக்கொண்டிருக்கிற­து. ஏற்கனவே சங்கராச்சாரியார் எனும் இந்துத்துவ மதவெறியரின் http://arumbithazh.blogspot.in/2015/03/blog-post_65.htmlகருத்துக்களை போலவே அதே பாணியில் கொஞ்சமும் பிசகாமல் இந்துத்துவ பார்ப்பானிய பிஜெபி கட்சியின் மூத்த பொருப்பாளர்...

Thursday, April 23, 2015

மௌனம் எழுதிய கவிதை

மௌனம் எழுதிய கவிதை : யாரும் சொல்லாதொன்றை எழுத துடிக்கிறது மௌனம் ஏனென்ற கேள்விக்கு விடையளித்த வினாத்தாளில் வெறும் மூன்றெழுத்துள்ளது கவிதையாக அதுவும் முளைக்கிறது மௌனம் கவிசொல்ல வெட்கத்தில் முகத்தை மூடும் கண்ணாடி பாதரசத்திலோ பதிந்து போன பீனிக்ஸ் பறவையின் கால்தடம் தெரியும் பார்க்க பார்வையுண்டு எழுத கையுண்டு எழுத்தை கோர்க்கும் எண்ணமும் உண்டு உதவிக்கு வராத ஊமைமொழியினை இப்போதேனும் கலைத்துவிட வேண்டுமென்று துடிக்கிறது ஆழ்மனது தூரிகைச் சிதறலை சேகரிக்க மலர்தூவலாய்...

கொசு வத்திச் சுருளை எப்படி பிரித்தெடுப்பது?

அனேகமாக என்ன மேற்படிப்பு படிக்கலாம், மேற்படி என்ன பாடத்தை பத்தாம்வகுப்பு முடித்தவர்கள் எடுக்கலாம் இதற்கிடையே ஐ ஏ எஸ், டி என் பிஎஸ்ஸி , கேட், வாட்டு, நோட்டு என நீண்ட பட்டியியலில் "கொசுவத்திச் சுருளை உடைக்காமல் பிரித்தெடுப்பது எப்படி?"யென்று கோடை சிறப்பு பயிற்சி வகுப்புகளை ஆரம்பித்தாலும் ஆரம்பிப்பார்கள் அந்தளவிற்கு மனுஷனை பாடாபடுத்துகிறது இந்த "கொசு" என்னாமா கடிக்கிறது, வலிதாங்க முடியாமல் கத்திய கதறல் சத்தங்கூட கேட்காமல் பக்கத்தில் வேறு மனைவி தானே...

Wednesday, April 22, 2015

ஆமாம்!!எங்களுக்கு வைரமுத்துவையும் தெரியாது ஜெயகாந்தனையும் தெரியாது

இன்னும் என்னென்ன சர்ச்சைகளுக்குள் மாட்டி சீரழியப்போகிறதோ இந்த தமிழ்ச்சமூகம் என பயப்படும் அளவிற்கு ஊடகங்கங்களும் அவ்வூடகங்களுக்கு தீனிபோட்டுக் கொண்டிருக்கும் இலக்கிய ஜாம்பவான்களும் சமூகத்திற்கு என்னதான் சொல்ல வருகிறார்கள் என்பது புலப்படவேயில்லை. குமுதம் வெளியிட்டிருக்கின்ற வைரமுத்து அவர்களின் தற்பெருமைக்கு ஜெயகாந்தன் அவர்களின் மகள் கொடுக்கும் பதிலடி இலக்கிய மோதலாகவே உறுமாறியிருக்கிறது. இலக்கியம் தாண்டி வைரமுத்து அவர்களும் ஜெயகாந்தன் அவர்களும் மேற்கொண்ட...

கருப்புச் ச(சா)ட்டையடி வேண்டுமா எச் ராஜாக்களே

கருப்புச் ச(சா)ட்டை ஆண்டுகள் முழுதாய் குடியில் மூழ்கிகிடந்து முளைக்கும் ஒருநாள் போலிமுக்திக்கு மண்டியிடும் ஆடுகளின் கூட்டங்களை போல அவனும் கடவுளானான் அவனைஅவனே சாமியென்றான் அவனுடுத்தும் அதீத அய்யப்ப பக்தியின்பால் அணிந்திருக்கும் கருப்புச்சட்டைக்கு ஒத்தூதி ஓமம் வளர்க்கும் ஆரியத்தை அழிக்க வந்த கருப்புச் சட்டையொன்றும் சட்டையல்ல மூடர்களை விரட்டவந்த சாட்டையது அடிவாங்க முடியாமல் சாதியத்தை அவிழ்த்துவிடும் ஆரிய பார்ப்பானியமே வருகிறதுபார் உங்களுக்கான எச்சரிக்கை...

Tuesday, April 21, 2015

-கெட்டவார்த்தைகள்-

கெட்ட வார்த்தைகள்முதலில் இப்பதிவிற்காக 18+போடவேண்டுமா எனச் சந்தேகம்எழுகின்ற பொழுது அதற்கானதேவை ஏற்படவில்லை என்றேதோன்றியது இருந்தாலும் மனிதச்சிந்தனையானது ஒன்றோடொன்றுவேறுபட்டிருப்பதனால்வேண்டுமானால் அவரவர் 18+ எனதீர்மானிக்க முழுச்சுதந்திரத்தைஇப்பதிவு வழங்குகிறது.தமிழ்ச் சமூகத்தில் ஓருஇனத்தையோ அல்லது தனக்குஆகாத நடவடிக்கைகளில்ஈடுபடுபவர்களையோ,எதிராளியென அடையாளம்கண்டவர்களையோ ,ஏதேனும்வாக்குவாதம் செய்யப்படும்போதை,பிடிக்காதவர்களைஅவமானப்படுத்தப்படும் போதோநமது...

Monday, April 20, 2015

ஏன் மறந்து போனோம்

ஒவ்வொரு அடியாக நம் பாதம் தொடும் பாதைகளின் அச்சு மண்ணளவை அளந்தவர்கள் இங்கே ஏராளம் ஏன் மறந்து போனோம் ஒத்தையடி பாதையில் ஒத்துப்போகிறதா நம் காலடி தடமென தேடிப்பிடித்து தெனாவட்டாய் நடைபோடும் சின்னஞ்சிறுசுகளின் இதயத்தில் வாழ விடுங்களேன் அழியாத நினைவுகளாய் ஏன் மறந்து போனோம் ஏர்பிடித்து உழுதோரின் உள்ளங்கை பிடியில் நழுவி சேற்றுப்புழுதி யிலோடும் மிச்சத் தண்ணீரின் நடுவே பாலங்கட்டி பயணப்பட்டோம் ஏன் மறந்து போனோம் பள்ளிக்கூட புத்தகப்பையானது உச்சந் தலையில் புதையுண்டு...

நாம் தமிழர் கட்சி அறிவிப்பும் கொஞ்சம் வரவேற்பும்

சில தினங்களாக இணையத்திலும்,பொதுவில­ும் தந்தை பெரியாரை மிகவும் கீழ்த்தரமாக அவமானப்படுத்தும் செயலில் நாம் தமிழர் கட்சியின் பொருப்பாளர்களும்,தொண­்டர்களும் ஈடுபட்டிருந்தார்கள்.­ இந்நிகழ்வுகள் ஒன்றும் புதிதானதல்ல ஏற்கனவே திராவிடத்தை எதிர்க்கிறோம் பேர்வழிகளென்று பெரியாரை வடுகனென்றும்,வந்தேறி­யென்றும்,கன்னடவெறியன­ென்றும்,சாதிநாயக்கரெ­ன்றும் தொடர்ந்து பரப்புரை செய்தவர்களிடம் வேறெதுவும் எதிர்பார்க்கமுடியாது­தான் இருந்தாலும் தற்போது வெளியாகிருக்கின்ற தலைமை...

இளைஞர்களை குறி வைக்கும் நில கையகச் சட்டம்

மத்தியில் ஆளும் இந்துத்துவபார்ப்பானிய மோடி அரசின் பல்வேறுபொய்ப்பிரச்சாரங்களில­்இதுவும் ஒன்று . என்னவென்றால் "நிலம்கையகப்படுத்துதல் சட்டமானது அமலுக்குவந்தால் இளைஞர்களுக்குவேலைவாய்ப்பு அதிகரிக்கும்"நாக்கூசாமல் எப்படி இவர்களால் பொய்யைபரப்ப முடிகிறது என ஆச்சர்ப்படதேவையில்லை ஏனெனில் பொய்யைஉண்மையெனச் சொல்லியே ஆட்சிபிடித்தவர்கள்தானே ஆளும்ஆர்எஸ்எஸ்ஸான பிஜெபி. உண்மையில்நிலம் கையகபடுத்துதல் சட்டத்தின்மூலமாக பயனடைவது முதலாளித்தவகார்ப்பரேட் கம்பெனிகளும் அதுபோடும்எலும்புத்துண்டுகளை...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...