Sunday, March 13, 2016

நடிகர்களின் தேர்தல் பிரச்சாரம், இப்போதே தலைசுற்றுகிறது!

தமிழகத் தேர்தல் நெருங்க நெருங்க மனதிற்குள் ஒருவித அச்சம்
தொற்றிக்கொள்கிறது. ஓரளவிற்கு ஐந்துமுனை போட்டிகள் என்கிற தேர்தல்
களத்திற்கு அரசியல் கட்சிகள் அடித்தளமிட்டாலும் இன்னமும் இழுபறியிலேயே
இருப்பதனால் கட்சி வேட்பாளர்களை தமிழ்நாட்டின் ஆகப்பெரிய கட்சிகளான
திமுகவும், அதிமுகவும் இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில் எப்படியும்
தேர்தல் பிரச்சாரத்திற்கு சிறிதுகால இடைவெளி கிடைக்குமென்பது ஆகச்சிறந்த
மன நிறைவை அளிக்கிறது. காரணம் இருபெரிய கட்சிகளும் தங்களின் தேர்தல்
பிரச்சாரத்திற்கு முக்கியஸ்தர்களாக "திரைத்துறை" நடிகர் , நடிகைகளை
களத்தில் இறக்குவார்கள். அவர்களோ திரையில் கதாநாய(கி)கர்களாக நடித்து
மக்களை ஏமாற்றியது போதாதென்று அரசியல் தேர்தல் பிரச்சாரம் செய்கிறேன்
பேர்வழியென்று மற்றொரு வழியிலும் மக்களை ஏமாற்ற வருகை புரிவார்கள். இதில்
திமுக ஓரளவிற்கு கட்டுப்பாடுகளையும் தேர்ந்தெடுக்கப்பட்ட
நடிகர்,துணைநடிகர்,நா­டகஸ்தர்களை வைத்திருப்பதால் ஓரளவிற்கு பொதுசன
தலைவலி கட்டுக்குள் வந்துவிடுகிறது. இம்முறை தீவிர திமுக பற்றாளரும்,
நகைச்சுவை நடிகருமான குமரிமுத்து அவர்களின் மரணம் நிச்சயம் திமுக
தரப்பில் ஓர் பேரிழப்புதான் ,,, அந்த இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது.
திமுக தரப்பில் இம்முறை நடிகர் வடிவேலு, பரோட்டா புகழ் சூரி ஆகியோர்கள்
இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிற­து.திமுகவின் பிரச்சாரம்
அவ்வளவாக தலைவலியை ஏற்படுத்தாது , ஆனால் மற்றொரு பெருங்கட்சியான அதிமுக
வின் தேர்தல் பிரச்சாரத்தை நினைக்கும்போதே தலை கணத்து விடுகிறது. ஏற்கனவே
அக்கட்சியின் கொ ப செ ஆன நடிகை சி. ஆர். சரஸ்வதி அவர்கள் அதிமுக சார்பாக
தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு தனது பார்ப்பன புத்தியை
காட்டுவதோடு மட்டுமல்லாமல் அடுத்தவர் கருத்துக்களுக்கு சம்மந்தமேயல்லாத
பேச்சை பேசி குழப்பும் ஜெயா அடிமையாக இருக்கிறார் இந்நிலையில் பிரச்சாரம்
வேறு செய்யப்போகிறார் என்றால் மனங்களின் அவஸ்தையை சொல்ல வேண்டுமா என்ன!!!
அதன் பிறகான அதிமுகவின் தேர்தல் பிரச்சார பீரங்கிகளின் பட்டியல்
நீள்கிறது. ராமராஜன்,விந்தியா,சி­ங்கமுத்து, மாளவிகா, இப்படியான தலைகளின்
தேர்தல் பிரச்சார வரவேற்புகளை நினைத்தால் நெஞ்சம் பதறி வெடித்தேவிடும்
போலிருக்கிறது.உதாரணம­ாக சமீபத்தில் நடிகர் ராமராஜன் அவர்களின் மாடுகள்
அம்மா என்றே அழைக்கும், 'அரசியலில் ஒரே சிங்கம் அம்மாதான்,
போன்ற பேச்சுகள் தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பே உதித்தாகிவிட்டது.
இவற்றையெல்லாம் பார்க்கின்ற போது "ஓ பிச்சைக்காரனுக்கு செக்யூரிட்டி
பிச்சைக்காரனா? வெளங்கிடும்டா நாடு! என்கிற கவுண்ட்டர் மகான் காமெடியை
தவிர்க்க முடியவில்லை. இவர்களுக்கு பின்னால் அணிதிரளும் மக்களை ஒன்றும்
சொல்வதற்கில்லை பழக்கப்படுத்தப்பட்டி­ருக்கிறார்கள் நடிகர்களின் பின்னால்
செல்வதற்கு,,,
இது மிகமோசமான நடத்தை என்பதை இந்த மக்கள் எப்போதுதான் உணரப்போகிறார்களோ
தெரியவில்லை.

2 comments:

  1. ஓ.. நீங்க அவருக்கு ஆதரவா..?

    ReplyDelete
  2. ஆமாம்!
    http://arumbithazh.blogspot.in/2015/05/blog-post_3.html

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...