Tuesday, May 12, 2015

காதலனைத் தேடி

கண்களில் தெரிவானென காதலனைத் தேடிப்போகையில்

குருடான குளத்தங்கரை எனைபார்த்து
கெஞ்சுகிறது

தண்ணீரில்லையாம்
பதிலாய்
என் கண்ணீரை
கேட்கிறது

காணாத காதலனால் ஏற்றிக்கொண்ட
ஏக்கத்தின் விளைவாய் ஏமாற்றம் மட்டுமே நானாகிப் போனேன்

இதோ தருகிறேன் குளத்தங்கரையே எடுத்துக்கொள்
என் கண்ணீரை

வீணாக்கிவிடாதே
காயும் வெயிலுக்கும் விலைபேசி
விடாதே

என் கண்ணீரிலிருப்பது வெறும் உப்பன்று
உயிரில் உயிராகிப்போன
என் காதலின்
சாட்சிகளை
மறைத்து வைத்திருக்கிறேன்
அதனிடத்தில்

என் கண்ணீரால்
நிரம்பி வழியும்
குளமே வாக்கொன்று எனக்களியேன்

எப்போதேனும் என் காதலனிங்கே வரக்கூடும் அவனிடத்தில் சொல்லிவிடு ஆகாயம்
இருண்ட போதிலும்
அவனையே இன்னும்
நெஞ்சில் சுமக்கிறேனென்று,,,

1 comment:

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...