Tuesday, May 26, 2015

உன் மௌனம் போதுமெனக்கு

மலரினும் இனிய
மௌனங்களால்
எனை வருடுகிறாய்

வியர்வைத் துளிகளால்
புருவம் நனைந்திட
வழிந்தோடும்
மையினை எடுத்து மயிலிறகால்
உம்முக பாவனைகளை
எழுத வரம் வேண்டுமெனக்கு

மௌனமும் பேசும்மொழியென்று
இதுவரையில் நானுணர்ந்ததில்லை

இன்றதை நுகர்கிறேன்
விழிபேசும் வார்த்தைகள்
வின்னதிற
என் செவிகளுக்கு மட்டும்
விருந்தாகிறதே
என்ன விந்தையிது

செவிபுலன் வாங்கிய
வார்த்தைகளை எனதிதயம் சேகரிக்க
உன்னைத்தான் நான்
காதலிக்கிறேனென்று
கத்திவிட தோன்றுகிறதெனக்கு

காதலியே காற்றலை
வீச்சத்தில் கரைந்துபோகாத
உன்மௌனம்
என் கனல்காற்றில்
கலந்தின்பம் காணுகிறதிங்கே

தொலைதூரத்தில் நீயிருந்தாலும் எனதருகிலேயே
எனக்காகவே அமர்ந்திருக்கிறாயென்று
உன் முகபாவனைகள்
திரண்டுவந்து தித்திக்கத் தித்திக்க காதலை சொல்கிறதே

கவிதைகளால் என் காகிதங்கள் நனைய
நிரப்பிய பக்கங்களோ
பசி தீரவில்லையென
திட்டித் தீர்க்கிறது
எனதிடத்தில்

மீண்டும் உணர்ந்தேன்
உன் முகபாவனை
வலிமையை

வாழத்தான் வேண்டுமென்றால்
உன் மௌனத்தோடும்
வாழ்ந்துவிடுவேன்
கடைசி வரை உம்முக
பாவனைகளை
கண்டுரசிக்கும் காதலனாக இருப்பதே
போதுமெனக்கு,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...