Wednesday, December 03, 2014

சிறுகதை "செல்வத்தின் முகவரி"

காலையிலேயே கரண்ட் கட்டாகிடுச்சே, ஏம்மா!! இந்த பழசெயெல்லாம் உனக்கு
பழக்கமிருக்காது கொடு நான்செய்யரேன்!
சமையலை கவனித்த கண்மனியிடம் அரைக்க வேண்டிய பொருளை வாங்கிக்கொண்டு அம்மி
பக்கம் நகர்ந்தாள் லட்சுமியம்மா. நெசந்தான் அத்தே எல்லத்தையும் கரண்ட்டால
செஞ்சதால கைப்பழக்கம் வரமாட்டேங்குது என்று சொல்லிபடியே அடுத்த
வேலைபார்க்க நகர்ந்தாள் கண்மணி. அதற்குள் அலுவலக அவசத்தை முடுக்கி
விட்டான் செல்வம். ஏம்பா!! செல்வம் இன்னைக்கு தான் கல்யாண நாளாச்சே லீவு
போட்டு புள்ள குட்டிகளை கூட்டிணு வெளிய போயிருக்கலாமே இன்னைக்கு கூடவா
ஆபீஸூக்கு போகனும் கொஞ்சமாய் அதட்டல் குரலிலேயே லட்சுமியம்மா செல்வத்தின்
செவியில் போட்டாள்.
இல்லம்மா இன்னைக்கு ஆடிட்டிங் ஒர்க் போயே ஆகனும் என்று பரபரப்புடனே
கிளம்பினான் செல்வம்.
என்ன ஒர்க்கோ? என்ன ஆபிசோ? கடைசியாக முடித்தாள் லட்சிமியம்மாள். இதற்குள்
பிள்ளைகள் பள்ளிக்கு கிளம்பினார்கள். கடைசியாக வீட்டில் கண்மணியும்
லட்சுமியம்மாளும் செல்வத்தின் அப்பாவும் அவரவர்க்கு துணையாக
இருந்தார்கள்.
மதிய வேளை உச்சி வெயில் வீட்டுத் தரையையை கூட விட்டுவைக்க வில்லை அத்தே
கோயிலுக்கு போவனும்,, அவர் பேருக்கு அர்ச்சனை பண்ண நான் கெளம்பிட்டு உடனே
வந்திடுரேன் அனுமதி கேட்டாள் கல்யாணி.
அதுக்கென்னம்மா போய்ட்டு பொறுமையாவே வா! என்று லட்சுமியம்மா அன்பாய்
வாசல் வரையில் வழியனுப்பினாள்.
இந்த உறவு உபசரிப்பு தற்போது தான் ஆரம்பித்தது இதற்கு முன் இவர்களிடம்
பகையே முட்டியிருந்தது. எப்படி இது சாத்தியமாயிற்று? இதில் யாரின்
தவறிருந்தது? கொஞ்சம் இந்நல்லுறவிற்கான காரணத்தை அலசிவிடுவது
அவசியந்தானே!
செல்வத்துக்கு லட்சுமியம்மா தான் பெண்பார்த்தார். வசதிகுடும்பமாதலால்
கண்மணியே குடும்பத்திற்கேற்றவள­ானாள். ஆனால் வித்தியாசங்கள் மாமியார்
மருமகளை விலகியே வைத்தது. அவளுக்கு பிடித்தது இவளுக்கு பிடிக்காது,
இவளுக்கு பிடித்தது அவளுக்கு பிடிக்காது ,இதுவே இருவரையும் விலக்கியே
வைத்திருந்தது. இதற்கிடையே சம்மந்தி உறவில் பெருத்த விரிசலும் ஏற்பட்டு
விட்டது தொடர்பும் அறுந்து போனது. தாய்வீடல்லவா கண்மணியும் துயருற்றாள்.
இப்படியே நகர்ந்து ஐந்தாண்டுகள் ஓடிற்று. இதற்கிடையே இரண்டு குழந்தைகள்
நகர்ந்தது வாழ்வு.
அன்று ஞாயிற்றுக் கிழமை வழக்கம் போலே அனைவரும் வீட்டிலிருந்தார்கள்.
கூடியிருந்த வீட்டுக்குள் எப்போதும் போலே உறவில் விவகார வாய்ச்சண்டை.
இதற்கு என்ன தான் தீர்வென்று சிந்தித்தபடியே சினங்கொண்டு எழுந்து போனான்
செல்வம்.
மருநாள் திங்கட்கிழமை வழக்கம் போலே அல்லாமல் சற்று மாருதலாக புன்சிரிப்பு
முகத்துடன் அலுவகத்திற்கு கிளம்பனானான் செல்வம். அன்று மதியவேளையில்!
செல்வம் வீட்டிற்கு இரு தபால் கடிதங்களை கொண்டுவந்தான் தபால் காரன்.
ஒன்று கண்மணி பெயரில் மற்றொன்று செல்வம் தகப்பன் பெயரில், இரண்டையும்
வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்த கண்மணி, தனக்கானதை பற்றிக்கொண்டு மற்றொன்றை
அவர்கள் எதிரே மேசையில் வைத்துவிட்டு தன் அறைக்கு சென்றாள். அவசரமாக
பிரித்து படிக்கத் தொடங்கினாள்.
அதில் "அக்கா நான் நம் பெற்றோரை முதியோரில்லத்தில் விட்டுள்ளேன் பார்க்க
விரும்பினாள் இம்முகவரிக்கு செல்லுங்கள் என்று ஒரு முகவரியிட்டு
எழுதியிருந்தான் தம்பி"
இப்போது மேசையில் கிடந்த கடிதமும் படிக்கப்பட்டது "அப்பா அம்மா நான்
உங்களை ஒரு முதியோரில்லத்தில் சேர்வதற்காக முடிவெடுத்து விட்டேன் இந்த
முகவரியில் சென்று உங்களுக்கு ஏற்ற இடமா என்று பார்த்து விட்டு வாருங்கள்
" என்று அதிலும் ஒரு முகவரியிட்டு எழுதியிருந்து.
இரு கடிதச் சொந்தங்களும் பதட்டமானார்கள். ஒருவரையொருவர் பதறிக்கொண்டு
கடிதம் காட்டிய முகவரிக்கு பறந்தார்கள். மாலை இளஞ்சூரியன் தன் முகத்தை
மூடிக்கொண்டிருந்து. முகவரிக்கான இடமும் வந்துவிட்டது. இறங்க மனமில்லை
'பதற்றம்' பற்றிக்கொண்டது "இதயம் இல்லம்" என்ற முகவரிப் பலகையே
பார்த்துக்கொண்டிருந்தார்கள் . கடைசியாக மனதை தேற்றிக்கொண்டு வண்டியை
விட்டு அவர்கள் இறங்க! அதே நேரத்தில் கண்மணியும் இறங்க மூன்று
முகங்களிலும் இனம்புரியாத ஓர் மவுனமொழி பேசிற்று! கண்களில் கண்ணீர்
,உடலில் நடுக்கும், பேச்செழவில்லை, இனிதாங்காது இதயம் என்றென்னி ,அத்தே!
என்று அவளும், கண்மணி! என்று இவளும், கரம் பிடித்த காட்சி வருணிக்க
முடியா இதயப்பிணைப்பின் பிறப்பிடமாக இருந்தது. இருவரையும் ஆரத்தழுவியது
மாமனாரின் கைகள். மூவரும் இப்போது ஒரே வண்டியில் வீட்டினை அடைந்தார்கள்.
இனி இவர்களுக்குள் விரிசல் விழாது. விலகி போன சம்மந்தி உறவும் விரைவிலேயே
கிட்டியது.
கல்யாண நாளில் அலுவலகத்திற்கு அவசரமாய்ச் சென்ற செல்வம். அவரவர் அறையில்
அறிவிப்பு மடலை விட்டுச்சென்றான். அன்று வந்த கடிதம் அவனெழுயதென்றும்,
இன்று இருப்பது போல் என்றுமிருப்பதில் தான் அவனாசைப் படுவதாகவும்,
எழுதிவிட்டு கடைசியாக நம் கிராமத்து நிலத்தினை மீட்டுவிட்டேன் என்று
அவர்களுக்கும், நம் பிள்ளைகளுக்கு புதுப்பாலிசி போட்டுவிட்டேன், என்று
அவளுக்கும் எழுதி முடித்திருந்தான். இனி இன்பக்கடலில் மூழ்கியிருக்கும்
அந்த கூட்டுக்குடும்பம் .

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...