Wednesday, December 03, 2014

இவர்கள் புனிதர்கள்

மேடைக்கு மேடை
உன்மீது
நான் கல்லெறிய!
என்மீது
நீ கல்லெறிய!
கூட்டத்தை சேர்க்க
கற்றுக்கொண்டோம்!
கரவொலி மட்டும்
குறையவேயில்லை!
எங்கும், எதிலும்
முரணானோம்!
முக்காடு போட்டுக்கொண்டு
ரகசியமாய் உறவாடி! கடைசிவரை
மக்கள்
சிந்தனையில் சீர்படாது சீரழிந்து போக! நாமிருவரும்
சிந்திக்க
வேண்டுமென
சிறு ஒப்பந்தமும் போட்டுக்
கொண்டோம்!
கரூவூலம்
காலிசெய்து
கல்லாப்பெட்டியில்
அடைத்தோம்!
அரசியல் வியாபாரம்
அமோக வெற்றிதான்!
அதிகார
நாற்காலிக்கு
நாமிருவரும்
செல்லப்
பிள்ளைகள்!
அறியாமை
மக்களால் ஆசிபெற்ற
நாம்!
புனிதர்கள் தானே!
இனி மண்ணைச் சுரண்டிடலாமே!
இமயமலையும்
வாங்கிடலாமே! இமைகளை
மூடும் போதும்
கவலை
நமக்கில்லை!
எதிரெதிரே சிலையாகி கழுத்தில்
மாலையுடனே!
ஆம்மண்ணை
ஆண்டிடுவோம்! இம்மக்களை பார்த்து சிலையாகியும்
சிரிப்போம்!
சிலந்தி
வலையையும் கிழிப்போம்!
நாமிருவர்
மட்டுமே
இம்மண்ணின்
புனிதர்கள்!

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...