Sunday, November 29, 2015

இந்தியாவின் பயங்கரவாத இயக்கம் முதலிடத்தில் இருப்பது ஆர்.எஸ்.எஸ். RSS

இந்துத்துவ பார்ப்பானிய மதவாதிகளான ஆர்.எஸ்.எஸ், பாஜக, விஷ்வ இந்து
பர்ஷித், சிவசேனா, இன்னும் பல இயக்கங்கள் மற்றும் கட்சிகளின்
பயங்கரவாதத்தை எதிர்க்கின்றபோது அதன் மையப்புள்ளியான பார்ப்பானியத்தை
முன்வைத்தே எதிர்க்கின்ற வேளையில் மதவாத ஆதர்வாளர்கள் பார்ப்பனர்களை
ஆதரிக்கும் விதமாக வாதம் புரிவதை முற்போக்காளர்கள் கண்டிருப்பார்கள்.
அவர்கள் பார்ப்பனர்க்கும் மேற்கண்ட இயக்கம் மற்றும் கட்சிகளுக்கும்
எவ்வித தொடர்புமில்லை, பார்ப்பனர்கள் எங்கேயும் நிர்வாக
பொறுப்புநிலைகளில் இல்லாதபோது இந்து இயக்கங்களை எதிர்க்கையில் ஏன்
பார்ப்பனர்களை உள்ளிழுக்கிறீர்கள், பார்ப்பானர் அல்லாதோரான இடைநிலை
சாதியாதிக்கர்களைத் தானே நீங்கள் எதிர்க்க வேண்டும். என்பது மதத்தீவிரவாத
ஆதரவாளர்களின் கருத்து வாதமாக இருக்கிறது. மதத்தீவிரவாதத்தை
எதிர்க்கின்றபோது இடைநிலை சாதியாதிக்கர்களின் எவ்வித செயலுக்கும்
ஆதிமூலமான பார்ப்பானியத்தையே சாடவேண்டியிருக்கிறது­. அவர்கள் தலித்திய
சாதி ஆதிக்கர்களாக இருந்தாலும் பார்ப்பானியத்தின் பிள்ளைகளாவே இருக்க
முடியும் என்பது எங்களின் வாதம். இதற்கிடையே ஆர்.எஸ்.எஸ் இன்
பயங்கரவாதத்தையும், பிராமணியம் அல்லது பார்ப்பானியத்தின் விளக்கத்தையும்
மகாராஷ்டிரா மாநில முன்னாள் ஐ.ஜி. S.M. முஷ்ரிப் மிக சுருக்கமாக
கொடுத்திருக்கிறார். இந்தியாவின் பயங்கரவாத இயக்கம் என முதலிடத்தில்
இருப்பது ஆர்.எஸ்.எஸ்.தான்... எனவும், அதுவே மிகப் பெரிய பயங்கரவாத
இயக்கமெனவும் மகாராஷ்டிரா மாநில முன்னாள் ஐ.ஜி. S.M. முஷ்ரிப் அதிரடி
குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் அவர்
பேசுகின்றபோது: நாட்டின் நிகழ்ந்த 13 பயங்கரவாத சம்பவங்களில்
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல்
செய்யப்பட்டுள்ளது. பஜ்ரங் தளம் போன்ற இதர அமைப்புகளையும் சேர்த்து
மொத்தம் 17 வழக்குகளில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா இயக்கத்தினர்
மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் மிகப் பெரிய பயங்கரவாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ். என்பதில் எந்த
ஒரு சந்தேகமும் இல்லை. ஹைதராபாத்தில், (2007) மெக்கா மஸ்ஜித் மசூதி
குண்டுவெடிப்பு,2007ஆ­ம் ஆண்டு சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில்
குண்டுவெடிப்பு,2008 மலேகான் குண்டு வெடிப்பு ஆகிய சம்பவங்களை
குறிப்பிட்டுச் சொல்லலாம். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்பது பிராமணிய
கட்டமைப்பைக் கொண்டது. இது பிரமாணர்களை குறிப்பிட்டுச் சொல்வது அல்ல...
பிராமணியம் என்பது சித்தாந்தம்... அதாவது ஆதிக்கம் செலுத்துவதும்
ஒடுக்குவதும் பிராமணியத்தின் பிரதான அம்சம். சகிப்பின்மை என்பது
நீண்டகாலமாக இருந்து வருகிறது. இப்போது ஏன் இதை பெரிதாக்குகின்றனர் எனத்
தெரியவில்லை? 2008 ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது
பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டதின்
மூளையாக உளவுத் துறை இருக்கிறது.
மக்கள் இயக்கமாக ஒன்றுதிரண்டால்தான் கர்கரே மரணத்தின் உண்மையை கொண்டுவர
முடியும். இவ்வாறு முஷ்ரிப் கூறியிருக்கிறார். அவர் கூறியிருக்கும்
கருத்துக்களின் அடிப்படையில் பார்த்தோமானால் இந்தியாவின்
இறையாண்மைக்கும்,மதசா­ர்ப்பின்மைக்கும் , சமத்துவத்திற்கும் மிகப்பெரும்
சவாலாய் ஆர்.எஸ்.எஸின் இந்துத்துவ பார்ப்பானிய பயங்கவாதம்
முளைத்திருக்கிறது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. ஆர்.எஸ் எஸ் ஆனது
வெளித்தோற்றத்திற்கு தங்களை நியாயமான போராட்டங்களில் பங்கெடுப்பதாக
மக்களை ஏமாற்றி அவர்களின் ரத்தங்களை குடிக்கும் அட்டைப் புழுக்களாக
இருக்கின்றது. சிறுபான்மை இனத்தின் மீதான தாக்குதல்களை முன்னெடுத்தாலும்
அவர்கள் தங்களை இந்துக்களுக்காக பாடுபடுபவர்கள் எனச் சொல்லி இந்துக்களை
பலியாடுகளாக மாற்றுகிறார்கள் என்பதே உண்மையாக இருக்கிறது. மத ரீதியிலான
எந்தவித இயக்கங்களும் தங்களின் மதக்கொள்கைக்கு அப்பால் செல்லவில்லை என
பொய்யுரைக்கின்றது. எந்த மதமும் எந்த இந்துக்கடவுளும் மற்றவனை
துன்பறுத்து என்று வெளிப்படையாக சொன்னதில்லை என்பதை ஆர் . எஸ் . எஸ்
போன்ற மத பயங்கரவாத இயக்கங்களுக்கு தெரிந்த ஒன்று என்றாலும் அதை ஏற்கவா
போகிறார்கள். இந்தியா இந்துக்கள் நாடென்று இவர்கள் பிரகடனப்படுத்த
துடிப்பது உண்மையில் ஹிட்டலின் நாஜிஸத்துவத்தையே கொண்டிருக்கிறது.
வரலாற்றில் ஹிட்லரின் கருப்பு பக்கங்களை எஸ்.எஸ் எஸ் நிச்சயம் வாசிக்க
வேண்டிய காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை இங்கே தெளிவு படுத்திவிட
வேண்டும். மேலும் இரண்டு மாதங்களுக்கு முன்பு கேரள ஆர்.எஸ்.எஸ்
அலுவலகத்தை சோதனையிட்ட தீவிரவாத தடுப்பு காவல்துறையினர் அவர்களிடமிருந்த
மனித அழிவுக்கு உத்வேகமான பல்வேறு ஆயுதங்களை கைப்பற்றி அதன்
இயக்கத்தார்களை கைது செய்து நடவடிக்கை எடுத்தார்கள் என்பதையும் இங்கே
குறிப்பிட வேண்டும். ஆக இந்தியாவை பயங்கரவாத இந்துத்துவ மத சக்திகள்
மிகப்பலமாக ஆக்கிரமித்துள்ளார்கள­் என்பது தெளிவாக வெளிச்சத்திற்கு
வந்திருக்கிறது.

2 comments:

  1. miga thavarana karuthu , RSS in samuga pani pol indha ulagil very yaarum seiyavillai

    ReplyDelete
  2. சமூகப்பணி? இப்படியே ஏமாறவேண்டியதுதான்,,,

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...